என் மலர்
உள்ளூர் செய்திகள்

குரும்பலூரில் நாளை இலவச கண் சிகிச்சை முகாம்
- குரும்பலூரில் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை நடக்கிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடக்கிறது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் குரும்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடக்கிறது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு கண் புரை நோய் உள்ளிட்டவைகளுக்கு இலவசமாக சிகிச்சை பெறலாம் என்று குரும்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சூர்யா தெரிவித்துள்ளார்.
Next Story






