என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
    X

    பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

    • பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற இருக்கிறது
    • வருகிற 8-ந்தேதி நடைபெறுகிறது

    பெரம்பலூர்.

    பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறை பாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், பெரம்பலூர் வட்டம், க,எறையூர் கிராமத்தில் வருவாய் கோட்டாட்சியர் ச.நிறைமதி தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், பெரியவடகரை கிராமத்தில், மாவட்ட பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசங்கரன் தலைமையிலும், குன்னம் வட்டம், எழுமூர் (மேற்கு) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சு.சத்திய பால கங்காதரன் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், ஆதனூர் (தெற்கு) கிராமத்தில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ச.சரவணன் தலைமையிலும் வருகிற 08.07.2023 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. மேற்படி முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவு பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×