என் மலர்tooltip icon

    நீலகிரி

    • போலீசார் பஸ் உரிமையாளர், டிரைவர்கள், ஒருங்கிணைப்பாளர் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நிவாரண தொகை வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த மரப்பா லம் பகுதியில் தென்காசி மாவட்டத்தில் இருந்து சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகளின் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 9 பேர் பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக போலீசார் பஸ் உரிமையாளர், டிரைவர்கள், ஒருங்கிணைப்பாளர் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நீலகிரி எம்.பி., ஆ.ராசா நீலகிரிக்கு விரைந்தார்.

    பின்னர் ஆ.ராசா எம்.பி. குன்னூர் அடுத்த மரப்பா லம் அருகே விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து விபத்தில் காயம் அடைந்து, ஊட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 2 பேரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    விபத்து ஏற்பட்டவுடன் மாவட்ட அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகத்தினர் ஆகியோர் விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தி, காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அவர்க ளுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் இறந்தவர்கள், படுகாயம் அடைந்த வர்கள், லேசான காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண தொகையினையும் முதல்-அமைச்சர் வழங்க உத்தரவிட்டார். அதன்படி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட கலெக்டர் அருணா, மாவட்ட வருவாய் அலுவலர் அமு தா, தி.மு.க மாவட்ட செய லாளர் பா.முபாரக், குன்னூர் நகரச் செயலாளர் ராமசாமி, குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா, நீலகிரி மாவட்ட சுற்றுச்சூழல் தி.மு.க மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன், குன்னூர் நகர இளைஞரணி அமை ப்பாளர் பத்மநாபன் உள்பட பலர் இருந்தனர்.

    • டிரைவர் முத்துக்குட்டி சுற்றுலா வாகன ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகியோர் சிகிச்சையில் உள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் தவிர 40-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரின், போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கர் அறிவுறுத்தலின் பேரில் குன்னூர் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதைத் தொடர்ந்து தனியார் டிராவல்ஸ் பஸ் உரிமையாளர் சுப்பிரமணி (வயது 63), டிரைவர்கள் முத்துக்குட்டி (65), கோபால் (32) மற்றும் சுற்றுலா வாகன ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதில் டிரைவர் முத்துக்குட்டி சுற்றுலா வாகன ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகியோர் சிகிச்சையில் உள்ளனர். தனியார் டிராவல்ஸ் பஸ் உரிமையாளர் மற்றும் டிரைவர் கோபால் எங்கு உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • புதிய வீட்டின் கிரகபிரவேசத்திற்கு முன்பு பலியான தந்தை-மகள்
    • சுற்றுலா சென்ற இடத்தில் தான் பேபிகலா விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.

    குன்னூர்,

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கீழக்கடையத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 64). இவர் தனது மனைவி, மகள் கவுசல்யா(29), மற்றும் 3 வயது பேத்தியுடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    இவர் சமீபத்தில் கீழக்கடையத்தில் ஆசை ஆசையாக, புதிய வீடு ஒன்றை கட்டிவந்தார். அந்த வீட்டின் பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் அதற்கு கிரகபிரவேசம் நடத்த திட்டமிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார்.

    இந்நிலையில், விடுமுறையையொட்டி தென்காசியில் கணவர் வீட்டில் இருந்த அவரது மகள் கவுசல்யா, சொந்த ஊருக்கு மகளுடன் வந்திருந்தார்.அப்போது அந்த பகுதியில் உள்ளவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டதால் இளங்கோ குடும்பத்தினரும் செல்ல விருப்பப்பட்டனர். இதனால் இளங்கோ, நான் வீட்டில் இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

    ஆனால் வற்புறுத்தலின்பேரில் அவர்கள் அனைவரும் சுற்றுலாக்கு புறப்பட்டு சென்ற இடத்தில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி கவுசல்யாவும், அவரது தந்தை இளங்கோவும் உயிரிழந்த துயரம் நிகழ்ந்துள்ளது.

    கடையம் ராமநதி ரோட்டை சேர்ந்த சண்முகையா தனது மனைவி பேபி கலாவுடன்(36) சென்றுள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகன் 10-ம் வகுப்பு படிக்கிறான். இளைய மகன் 8-ம் வகுப்பு படிக்கிறான்.

    தற்போது காலாண்டு விடுமுறையையொட்டி இளைய மகன், அந்த பகுதியில் உள்ளவர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்று அடம்பிடித்துள்ளான்.

    மேலும் பேபிகலாவும் இதுவரை எந்த ஊருக்கும் சுற்றுலா சென்றதில்லை. இதனால் அவர் தனது மூத்த மகனை மட்டும் வீட்டிலேயே விட்டுவிட்டு கணவர் மற்றும் இளைய மகனுடன் புறப்பட்டு சென்றுள்ளார். அவ்வாறு சுற்றுலா சென்ற இடத்தில் தான் பேபிகலா விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.

    • அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராமச்சந்திரன் ஆகியோர் நேராக விபத்து நடந்த மரப்பாலம் பகுதிக்கு சென்றனர்.
    • லேசான காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 32 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் காசோலைகளை வழங்கினார்.

    அருவங்காடு:

    தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்தவர்களின் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர்.

    இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை நீலகிரி மாவட்டத்திற்கு வந்தார்.

    பின்னர் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராமச்சந்திரன் ஆகியோர் நேராக விபத்து நடந்த மரப்பாலம் பகுதிக்கு சென்றனர். அங்கு விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட அவர், அங்கு நடந்து வரும் மீட்பு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து அவர்கள் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் சுற்றுலா பயணிகளை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    லேசான காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 32 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் காசோலைகளை வழங்கினார்.

    மேலும் இறந்த 9 பேரின் உடலுக்கும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராமச்சந்திரன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து சுற்றுலாவுக்கு புறப்பட்ட இவர்கள் கேரள மாநிலம் கொச்சின் சென்று விட்டு, ஊட்டிக்கு வந்துள்ளனர்.

    அங்கிருந்து கோவைக்கு திரும்பியபோது தான் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

    அதன்படி இன்று படுகாயம் அடைந்தவர்கள் மற்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.

    இறந்த 9 பேரின் உடல்களும் உடற்கூராய்வுக்கு பிறகு அரசு செலவில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இறந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சத்திற்கான காசோலை அவர்களது உறவினர்களிடம் சொந்த ஊரில் வைத்து வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கூடுதல் தலைமை செயலர் எஸ்.கே.பிரபாகர், மாவட்ட கலெக்டர் அருணா மற்றும் பலர் உள்ளனர். 

    • விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பஸ் சரியாக பராமரிக்கப்பட்டு உள்ளதா, அதற்கான சான்றுகள் உள்ளதா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த விபத்து பற்றிய உருக்கமான தகவல்கள் வருமாறு:-

    தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 59 பேர் கேரளா, நீலகிரி, கோவை மருதமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

    அதன்படி, கடந்த 28-ந் தேதி கடையத்தில் இருந்து 59 பேரும் சுற்றுலா பஸ்சில் சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். டிரைவர்கள் 2 பேருடன் சேர்த்து மொத்தம் 61 பேர் இந்த பஸ்சில் பயணித்தனர்.

    முதலில் இவர்கள் கேரள மாநிலம் சோட்டானிக்கரை, குருவாயூர் பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்தனர். பின்னர் நேற்று அதிகாலை, கேரளா வழியாக நீலகிரி மாவட்டத்திற்குள் வந்தனர்.

    இங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் சுற்றி பார்த்தனர். பின்னர் இரவில் கோவை செல்வதற்காக பஸ்சில் புறப்பட்டனர்.

    பஸ் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில், குன்னூர் மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பை இடித்து கொண்டு அங்கிருந்த 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் பஸ்சில் இருந்த முப்புடாதி (67), முருகேசன்(63 ), இளங்கோ(64 ), தேவிகா(42), கவுசல்யா( 29), நிதின்(15), ஜெயா(50), தங்கம்(40) ஆகிய 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர்.

    மற்றவர்கள் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டு அபயகுரல் எழுப்பினர். இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து கயிறு கட்டி கீழே இறங்கி பஸ்சில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    விபத்து நடந்த பகுதி மிகவும் இருளாக இருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இருந்தபோதிலும் டார்ச் ஒளி வெளிச்சத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்ததும் கோவை சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பணிகளை துரிதப்படுத்தினர்.

    இறந்த 8 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு குன்னூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். காயம் அடைந்தவர்கள் குன்னூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    செல்லம்மா என்ற மூதாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தொடர்ந்து வேறு யாராவது பஸ்சில் சிக்கி இருக்கிறார்களா என்பதை அறிய இன்று காலையும் மீட்பு பணி தொடர்ந்தது.

    அப்போது பஸ்சின் அடிப்பகுதியில் இருந்து பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். அவரது பெயர் பத்மராணி (57) என்பது தெரியவந்தது. அவரது உடலையும் மீட்டுபிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதனால் விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

    தொடர்ந்து பள்ளத்தில் சிக்கிய பஸ்சை வெளியே கொண்டு வரும் பணியை தொடங்கி உள்ளனர். கிரேன் உதவியுடன் பஸ்சை மீட்கும் பணி நடந்தது.

    சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து, 9 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் நீலகிரிக்கு விரைந்து வந்துள்ளனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

    விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர்(வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை) பிரபாகர், கலெக்டர் அருணா, டி.ஐ.ஜி.சரவணசுந்தர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மேலும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறினர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர்.

    பஸ்சில் சரியாக பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த பஸ் சரியாக பராமரிக்கப்பட்டு உள்ளதா, அதற்கான சான்றுகள் உள்ளதா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

    • சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து.
    • பயணிகளில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் மரப்பாலம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அதில் பயணம் செய்த பயணிகளில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் குன்னூர் மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து தொடர்பாக அவசர உதவி எண்களை மாவட்ட நிர்வாக அறிவித்துள்ளது. இதன்படி 1077, 0423 2450034 மற்றும் 94437 63207 என்ற உதவி எண்களில் விபத்து குறித்த தகவல்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரசார விவாதம் செய்தனர்.
    • பொதுக்கழிப்பிடத்தை சீரமைக்கும் பணி, தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது.

    அருவங்காடு,

    குன்னூர் நகரமன்ற மாதாந்திர கூட்டம் தலைவர் ஷீலாகேத்ரின் தலைமையில் நடந்தது.

    நகராட்சி கமிஷனர் ஏகராஜ், நகரமன்ற துணைத் தலைவர் வாசிம்ராஜா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரசார விவாதம் செய்தனர்.

    வாசிம்ராஜா:

    உழவர் சந்தை பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை சீரமைக்கும் பணி, தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு நீண்ட நாட்களாக பணிகள் முடியவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்கு உள்ள காலியிடத்தில் சிறப்பு நிதிஒதுக்கீடு செய்து, சமுதாயக் கூடமோ, உள்விளையாட்டு அரங்கமோ கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    ஜாகிர்உசேன் (தி.மு.க):

    குன்னூர் நகராட்சியில் பிறப்பு-இறப்பு சான்றிதழ் வழங்க அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். அங்கு பணியாற்றும் ஒருசிலர் பணம் வசூலித்து வருவதாக புகார் எழுந்து உள்ளது. அத்தகைய நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சுசீலா: நகரப் பகுதியில் உள்ள 30 வார்டுகளிலும் தெருநாய் தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி அங்கு வரும் சுற்றுலா பயணிகளும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே தெருநாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமசாமி: எனது வாடில் இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகளை கண்டித்து வரும் நாட்களில் போராட்டம் நடத்தப்படும்.

    முன்னாள் நகராட்சி கமிஷனர் மவுண்ட்பிளசன்ட் பகுதியில் விதிமுறைக்கு புறம்பாக கட்டப்பட்ட 2 கட்டிடங்களுக்கு சீல் வைத்து உள்ளார். ஆனால் இந்தக் கட்டிடங்கள் அனுமதி இன்றி திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு அனுமதி கொடுத்தவர் யார்?

    நகராட்சி கமிஷனர்:

    அதிகாரிகள் சீல் வைத்த கட்டிடங்களை யார் திறந்தாலும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு குன்னூர் மாநகராசி கூட்டத்தில் விவாதம் நடந்தது.

    • சி.டி.டி.ஏ ஏல மையத்தில் நடப்பு ஆண்டுக்கான 39-வது ஏலம் நேற்று நடைபெற்றது.
    • மீதம் உள்ள 30 சதவீதம் தேயிலை இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் 63 ஆயிரம் சிறு-குறு விவசாயிகள் உள்ளனர்.

    இங்கு உற்பத்தியாகும் தேயிலைதூள்கள், சி.டி.டி.ஏ தனியார் ஏலமையம் மற்றும் அரசுக்கு சொந்தமான இன்கோசர்வ் ஏலமையம் ஆகியவை மூலம் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாட்டை சேர்ந்த வர்த்தகர்க ளும் பான் இந்தியா திட்ட த்தின்கீழ் தேயிலைதூள்களை கொள்முதல் செய்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் பசுந்தேயிலை மகசூல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் குன்னூரில் உள்ள சி.டி.டி.ஏ ஏல மையத்தில் நடப்பு ஆண்டுக்கான 39-வது ஏலம் நேற்று நடைபெற்றது.

    இதில் 22,8,778 கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. அவற்றில் டஸ்ட் ரகம் 5,694 லட்சம் கிலோவும், இலைரகம் 17,0884 லட்சம் கிலோவும் அடங்கும்.

    குன்னூர் ஏலமையத்தில் விற்பனை சுறுசுறுப்பாக தொடங்கியது. இதில் 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனர். அப்போது டஸ்ட்ரகம் கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.80 முதல் 85 வரையிலும், இலைரகம் கிலோவுக்கு குறைந்தபட்சமாக ரூ.90 முதல் 110 வரையிலும், அதிகப ட்சமாக கிலோ ஒன்றிற்கு ரூ.120 முதல் ரூ.160 வரையி லும் விலை கிடைத்து உள்ளது.

    ஆகமொத்தம் 70 சதவீதம் தேயிலைதூள்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. எனவே மீதம் உள்ள 30 சதவீதம் தேயிலை இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது.

    • கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியை யொட்டி வருகிற 2-ந்தேதி கிராமசபை கூட்டம், அந்தந்த பகுதிகளில் உள்ள ஊராட்சித்தலைவர் தலைமையில் நடக்க உள்ளது. இதில் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரேலியா-பந்துமி அணைகள் மற்றும் கரன்சி தடுப்பணை ஆகியவற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
    • தினமும் 50 லட்சம் லிட்டர் குடிநீர் வீதம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    அருவங்காடு,

    குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது.

    இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு ரேலியா-பந்துமி அணைகள் மற்றும் கரன்சி தடுப்பணை ஆகியவற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

    பின்னர் அவை ஊட்டி அருகே உள்ள எமரால்டு கூட்டுகுடிநீர் திட்டத்தின்கீழ், சிம்ஸ் பூங்கா அருகே உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து தினமும் 50 லட்சம் லிட்டர் குடிநீர் வீதம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    குன்னூரில் தொடர்மழை காரணமாக ரேலியா அணை நிரம்பியது. இதனால் அங்கு நீர்மட்டம் கொள்ளளவை தாண்டி உள்ளது.

    எனவே வரும் நாட்களில் நகரப்பகுதியில் உள்ள 30 வார்டுகளுக்கும் தடையின்றி 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • டேன் டீயில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.
    • 2018-ல் மூடப்பட்ட 2 தொழிற்சாலைகளை மீண்டும் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் டேன் டீயில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கெண்டார். அப்போது, தோட்ட தொழிலாளர் சம்பள பிரச்சனை, குடியிருப்பு வசதி, மற்றும் டேன் டீயை எவ்வாறு லாபத்தில் கொண்டு செல்வது ஓய்வு பெற்ற டேன் டீ ஊழியர்களுக்கு முதலமைச்சர் அறிவித்தபடி வீடு கட்டி கொடுப்பது மற்றும் ரேஷன் கடைகளில் டேன் டீ யில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூளை விற்பனை செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் வற்புறுத்தினர்.

    இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் தெரித்தார்.

    பின்னர் அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    டேன் டீ ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் வகையில் டேன்டீ நிறுவனத்தை லாபத்தில் கொண்டு செல்வது என ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் ரேஷன் கடை மற்றும் சுற்றுலா தலங்களில் டேன் டீ தேயிலை தூளை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 2018-ல் மூடப்பட்ட 2 தொழிற்சாலைகளை மீண்டும் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பணியில் இருந்த போலீஸ்காரர் கட்சி தலைவருடன் புகைப்படம் எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • போலீஸ்காரர் கணேசனை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

    ஊட்டி:

    'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    இவர் கடந்த 27-ந்தேதி நீலகிரி மாவட்டத்துக்கு வந்தார். கூடலூரில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை, அன்று மாலை ஊட்டிக்கு வந்து சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து ஏ.டி.சி திடல் நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்.

    அப்போது ஊட்டி காபி ஹவுஸ் சதுக்கத்தில் பணியில் இருந்த ஹில்காப் போலீஸ்காரர் கணேசன் கூட்டத்துக்குள் நுழைந்து அண்ணாமலையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.

    அவர் சீருடையில் அண்ணாமலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. மேலும் பணியில் இருந்த போலீஸ்காரர் கட்சி தலைவருடன் புகைப்படம் எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் போலீஸ்காரர் கணேசனை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, அரசுப் பணியாளர்கள், தாங்கள் பணியில் இருக்கும் போது அரசு தொடர்பில்லாத அரசியல்வாதிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க கூடாது என்பது விதி.

    இதை மீறி சீருடையில் அண்ணாமலையுடன் போலீஸ்காரர் கணேசன் புகைப்படம் எடுத்திருக்கிறார். எனவே ஒழுங்கு நடவடிக்கையாக அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றனர்.

    ×