என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
குன்னூர் மலைப்பாதையில் பேருந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு
- டிரைவர் முத்துக்குட்டி சுற்றுலா வாகன ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகியோர் சிகிச்சையில் உள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் தவிர 40-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரின், போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கர் அறிவுறுத்தலின் பேரில் குன்னூர் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து தனியார் டிராவல்ஸ் பஸ் உரிமையாளர் சுப்பிரமணி (வயது 63), டிரைவர்கள் முத்துக்குட்டி (65), கோபால் (32) மற்றும் சுற்றுலா வாகன ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதில் டிரைவர் முத்துக்குட்டி சுற்றுலா வாகன ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகியோர் சிகிச்சையில் உள்ளனர். தனியார் டிராவல்ஸ் பஸ் உரிமையாளர் மற்றும் டிரைவர் கோபால் எங்கு உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்