search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tea powder"

    • சி.டி.டி.ஏ ஏல மையத்தில் நடப்பு ஆண்டுக்கான 39-வது ஏலம் நேற்று நடைபெற்றது.
    • மீதம் உள்ள 30 சதவீதம் தேயிலை இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் 63 ஆயிரம் சிறு-குறு விவசாயிகள் உள்ளனர்.

    இங்கு உற்பத்தியாகும் தேயிலைதூள்கள், சி.டி.டி.ஏ தனியார் ஏலமையம் மற்றும் அரசுக்கு சொந்தமான இன்கோசர்வ் ஏலமையம் ஆகியவை மூலம் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாட்டை சேர்ந்த வர்த்தகர்க ளும் பான் இந்தியா திட்ட த்தின்கீழ் தேயிலைதூள்களை கொள்முதல் செய்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் பசுந்தேயிலை மகசூல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் குன்னூரில் உள்ள சி.டி.டி.ஏ ஏல மையத்தில் நடப்பு ஆண்டுக்கான 39-வது ஏலம் நேற்று நடைபெற்றது.

    இதில் 22,8,778 கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. அவற்றில் டஸ்ட் ரகம் 5,694 லட்சம் கிலோவும், இலைரகம் 17,0884 லட்சம் கிலோவும் அடங்கும்.

    குன்னூர் ஏலமையத்தில் விற்பனை சுறுசுறுப்பாக தொடங்கியது. இதில் 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனர். அப்போது டஸ்ட்ரகம் கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.80 முதல் 85 வரையிலும், இலைரகம் கிலோவுக்கு குறைந்தபட்சமாக ரூ.90 முதல் 110 வரையிலும், அதிகப ட்சமாக கிலோ ஒன்றிற்கு ரூ.120 முதல் ரூ.160 வரையி லும் விலை கிடைத்து உள்ளது.

    ஆகமொத்தம் 70 சதவீதம் தேயிலைதூள்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. எனவே மீதம் உள்ள 30 சதவீதம் தேயிலை இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது.

    • டேன் டீயில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.
    • 2018-ல் மூடப்பட்ட 2 தொழிற்சாலைகளை மீண்டும் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் டேன் டீயில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கெண்டார். அப்போது, தோட்ட தொழிலாளர் சம்பள பிரச்சனை, குடியிருப்பு வசதி, மற்றும் டேன் டீயை எவ்வாறு லாபத்தில் கொண்டு செல்வது ஓய்வு பெற்ற டேன் டீ ஊழியர்களுக்கு முதலமைச்சர் அறிவித்தபடி வீடு கட்டி கொடுப்பது மற்றும் ரேஷன் கடைகளில் டேன் டீ யில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூளை விற்பனை செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் வற்புறுத்தினர்.

    இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் தெரித்தார்.

    பின்னர் அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    டேன் டீ ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் வகையில் டேன்டீ நிறுவனத்தை லாபத்தில் கொண்டு செல்வது என ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் ரேஷன் கடை மற்றும் சுற்றுலா தலங்களில் டேன் டீ தேயிலை தூளை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 2018-ல் மூடப்பட்ட 2 தொழிற்சாலைகளை மீண்டும் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    லாரியில் கொண்டு வரப்பட்ட 25 டன் டீத்தூளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    கோயம்புத்தூர் ஜி.எம். மில் ராகவேந்திரன் காலனியை சேர்ந்தவர் ராம்வீர்சிங்.

    இவருக்கு சொந்தமான 25 டன் டீத்தூளை அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து பொள்ளாச்சிக்கு கடந்த பிப்ரவரி 4-ந்தேதி லாரியில் ஏற்றப்பட்டது. லாரியை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த லாலாபாஷா ஓட்டி வந்தார்.

    இந்த லாரி திருவண்ணாமலை குறிஞ்சி குப்பம் பகுதியைச் சேர்ந்த காண்டீபன் என்பவருக்கு சொந்தமானதாகும்.

    லாரி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வந்த போது லாரி உரிமையாளர் காண்டீபன் டிரைவருக்கு போன் செய்து பொள்ளாச்சிக்கு செல்ல வேண்டாம். லாரியை செங்குன்றத்துக்கு வந்து விடு என தெரிவித்தார்.

    லாரியை காண்டீபன் லாரியை டிரைவர் லாலா பாஷாவிடமிருந்து பெற்று கொண்டு அதில் இருந்த 25 டன் டீத்தூளை சென்னை கொடுங்கையூர் டி.வி.கே லிங்க் சாலையை சேர்ந்த ராஜாவிடம் ரூ.17 லட்சத்திற்கு விற்று விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    லாரி வராததால் ராம்வீர்சிங் செங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா, விஜய், பழனி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான காண்டீபன் தேவராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட 3 பேரி டம் இருந்து 25 டன் டீத் தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

    குன்னூர் ஏல மையத்தில் நடைபெறும் 46-வது ஏலத்தில் தேயிலைத்தூளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரி கூறினார்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்ட தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் குன்னூர் ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏலம் ஆன்லைன் மூலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் அதிகளவில் கலந்துகொள்கின்றனர். இந்த ஆண்டு தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கடந்த 6-ந் தேதி கொண்டாடப்பட்டது. 7-ந் தேதி வடமாநிலங்களில் கொண்டாடப்பட்டது. இதனால் வடமாநில வர்த்தகர்களின் பங்களிப்பு இருக்காது என்பதால், கடந்த 8 மற்றும் 9-ந் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த 45-வது ஏலம் ரத்து செய்யப்பட்டது. எனவே வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் 46-வது ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்துக்கு 17 லட்சத்து 86 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் பி.எஸ்.சுந்தர் கூறியதாவது:-

    குன்னூர் ஏல மையத்தில் 46-வது ஏலம் 15 நாட்கள் கழித்து நடைபெற உள்ளது. இதனால் தேயிலைத்தூளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த 44-வது ஏலத்தில் தேயிலைத்தூளின் சராசரி விலையாக கிலோவுக்கு 97 ரூபாய் 44 பைசாவாக இருந்தது.

    இது 43-வது ஏலத்தை ஒப்பிடும்போது 4 ரூபாய் கூடுதல் ஆகும். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் சராசரி விலை 79 ரூபாய் 59 பைசாவாக இருந்தது. இதனை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 44-வது ஏலத்தில் விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. வழக்கமாக டிசம்பர் மாத 2-வது வாரம் முதல் மார்ச் மாத இறுதி வாரம் வரை பனி காலம் என்பதால் தேயிலை மகசூல் குறையும். இதனால் தேயிலை தொழிற்சாலைகள் இயங்க கடினமாக இருக்கும்.

    இதனை கருத்தில் கொண்டு முதல் முறையாக வடமாநிலங்களில் பனி காலத்தில் தேயிலை உற்பத்தியை நிறுத்த தேயிலை வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கு வடமாநிலங்களில் தரமற்ற தேயிலையை உற்பத்தி செய்து, சந்தையில் விற்பனை செய்வது தான் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே வடமாநிலங்களில் இருந்து நல்ல தேயிலையும், எதிர்பார்த்த அளவும் அடுத்த ஆண்டு(2019) ஏப்ரல் மாதம் தான் சந்தைக்கு வரும். இதனால் வடமாநில தேயிலைத்தூளின் வரத்து அடுத்த மாதம்(டிசம்பர்) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இருக்காது. இதன் காரணமாக வட இந்திய தேயிலை வர்த்தகர்கள் தென்னிந்திய தேயிலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் நிலை ஏற்படும். எனவே 46-வது ஏலத்தில் வடஇந்திய வர்த்தகர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்து, தேயிலைத்தூளுக்கு விலை உயர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×