என் மலர்
நீங்கள் தேடியது "கலெக்டர் செய்தி"
- ரேலியா-பந்துமி அணைகள் மற்றும் கரன்சி தடுப்பணை ஆகியவற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
- தினமும் 50 லட்சம் லிட்டர் குடிநீர் வீதம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அருவங்காடு,
குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது.
இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு ரேலியா-பந்துமி அணைகள் மற்றும் கரன்சி தடுப்பணை ஆகியவற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
பின்னர் அவை ஊட்டி அருகே உள்ள எமரால்டு கூட்டுகுடிநீர் திட்டத்தின்கீழ், சிம்ஸ் பூங்கா அருகே உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து தினமும் 50 லட்சம் லிட்டர் குடிநீர் வீதம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
குன்னூரில் தொடர்மழை காரணமாக ரேலியா அணை நிரம்பியது. இதனால் அங்கு நீர்மட்டம் கொள்ளளவை தாண்டி உள்ளது.
எனவே வரும் நாட்களில் நகரப்பகுதியில் உள்ள 30 வார்டுகளுக்கும் தடையின்றி 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.






