என் மலர்
நீலகிரி
மஞ்சூர் அருகே கூடுதல் பயணிகள் ஏற அனுமதி மறுத்ததால், அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தப்பட்டது.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு கிராமத்தில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் தங்காடு வழியாக ஊட்டிக்கு அரசு பஸ் புறப்பட்டது. அதில் டிரைவர், கண்டக்டர் மற்றும் சுமார் 25 பயணிகள் இருந்தனர். பயணிகளில் பெரும்பாலானோர் அரசு ஊழியர்கள் ஆவர். கன்னேரி, தங்காடு ஆகிய நிறுத்தங்களில் பஸ் நின்றது. அப்போது 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் ஏற முயன்றனர். ஆனால் அதற்கு டிரைவர் மற்றும் கண்டக்டர் அனுமதி மறுத்தனர். கொரோனா தொற்று பரவி வருவதால், குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் என்று தெரிவித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த பயணிகள் காத்தாடிமட்டம் நிறுத்தத்தில் இறங்கி கொள்வதாக கூறினர். ஆனால் அவர் ஊட்டிக்கு செல்ல வேண்டியவர்கள் ஆவர். தொடர்ந்து அவர்களை ஏற்றிக்கொண்டு பஸ் புறப்பட்டது. காத்தாடிமட்டம் நிறுத்தம் வந்ததும், பஸ்சில் இருந்து அந்த பயணிகள் இறங்கவில்லை. தொடர்ந்து ஊட்டிக்கு பஸ்சை இயக்கும்படி டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, பயணிகளை கீழே இறங்க கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மற்றும் ஊட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எடக்காட்டில் இருந்து ஊட்டிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அதே பஸ்சில் அவர்கள் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஊட்டியில் கள்ளக்காதலியுடன் கணவன் பேசியதால் ஆத்திரமடைந்த மனைவி நடுரோட்டில் காலணியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஊட்டி:
ஊட்டியில் கள்ளக்காதலியுடன் கணவன் பேசியதால் ஆத்திரமடைந்த மனைவி நடுரோட்டில் காலணியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேரிங்கிராஸ் பகுதியில் பகதூர் சிங் என்பவர் தனது கள்ளகாதலி ஆதயாவுடன் பேசிகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மனைவி லக்சிமா கணவரின் செயலை கண்டு ஆத்திரமடைந்தார்.
கள்ளக்காதலியை காலணியால் தாக்கிய மனைவியை பகதூர் சிங் தடுக்க முயன்றார். ஆனாலும் கள்ளக்காதலி அதயாவுக்கு பலத்த அடி விழுந்தது. அங்கிருந்தவர்கள் சண்டையை விலக்கி விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டியில் கள்ளக்காதலியுடன் கணவன் பேசியதால் ஆத்திரமடைந்த மனைவி நடுரோட்டில் காலணியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேரிங்கிராஸ் பகுதியில் பகதூர் சிங் என்பவர் தனது கள்ளகாதலி ஆதயாவுடன் பேசிகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மனைவி லக்சிமா கணவரின் செயலை கண்டு ஆத்திரமடைந்தார்.
கள்ளக்காதலியை காலணியால் தாக்கிய மனைவியை பகதூர் சிங் தடுக்க முயன்றார். ஆனாலும் கள்ளக்காதலி அதயாவுக்கு பலத்த அடி விழுந்தது. அங்கிருந்தவர்கள் சண்டையை விலக்கி விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என சிறப்பு குழுக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர காரணம், பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காததே ஆகும். தொற்று உறுதியானவர்களுக்கு சிகிச்சை அளிக்க ‘கோவிட் கேர் சென்டர்’ அதிகரிக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கபடுவதை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் 10 நாட்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனங்களிலும் பாதுகாப்பு வழிமுறைகளை சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர் உறுதி செய்ய வேண்டும். இதை மீறினால் அபராதம் விதிப்பதோடு, ‘சீல்’ வைக்கப்படும்.
நீலகிரியில் இதுவரை ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது உள்ள இ-பாஸ் நடைமுறையில் மாற்றம் எதுவும் இல்லை. பொதுமக்கள் தேவை இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில்தான் அரசு பஸ்கள் அதிகமாக இயக்கப்படுகிறது. 70 சதவீத பஸ்கள் அதாவது 178 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர காரணம், பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காததே ஆகும். தொற்று உறுதியானவர்களுக்கு சிகிச்சை அளிக்க ‘கோவிட் கேர் சென்டர்’ அதிகரிக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கபடுவதை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் 10 நாட்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனங்களிலும் பாதுகாப்பு வழிமுறைகளை சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர் உறுதி செய்ய வேண்டும். இதை மீறினால் அபராதம் விதிப்பதோடு, ‘சீல்’ வைக்கப்படும்.
நீலகிரியில் இதுவரை ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது உள்ள இ-பாஸ் நடைமுறையில் மாற்றம் எதுவும் இல்லை. பொதுமக்கள் தேவை இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில்தான் அரசு பஸ்கள் அதிகமாக இயக்கப்படுகிறது. 70 சதவீத பஸ்கள் அதாவது 178 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதுமலையில் வன உயிரின வார விழா தொடங்கியது. வன உயிரின வார விழா ஆண்டுதோறும் அக்டோபர் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
கூடலூர்:
வன உயிரின வார விழா, ஆண்டுதோறும் அக்டோபர் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அதன்படி முதுமலையில் வன உயிரின வார விழா தொடங்கியது. இதையொட்டி புலிகள் காப்பக சீகூர் வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். இதில் வெளி மண்டல துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் மற்றும் வனத்துறையினர், இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல், துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கூறியதாவது:-
வன உயிரின வார விழா மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 150 மரக்கன்றுகள் நடப்பட்டது. சீசர் வனத்தில் 4 வகையான கழுகுகள் உள்ளன. பெரும்பாலும் நீர் மரடு, டெர்மினியா அர்ஜூனா மரங்களில் கழுகுகள் வாழ்கின்றன. இதனால் அவைகளின் வாழ்விடங்களை பாதுகாக்கும் வகையில் குறிப்பிட்ட வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
இது தவிர 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வருகிற 8-ந் தேதி பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளது. வளமான காடுகளை உருவாக்குவதில் புலிகளின் பங்கு என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளில் பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பள்ளிகளில் இருந்து 2 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். முதலில் பதிவு செய்யும் 20 போட்டியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் வருகிற 6-ந் தேதிக்குள் wIw 2020mtr@gmail.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். தமிழ் பேச்சுப்போட்டி காலை 10:30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், ஆங்கில பேச்சுபோட்டி மதியம் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வன உயிரின வார விழா, ஆண்டுதோறும் அக்டோபர் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அதன்படி முதுமலையில் வன உயிரின வார விழா தொடங்கியது. இதையொட்டி புலிகள் காப்பக சீகூர் வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். இதில் வெளி மண்டல துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் மற்றும் வனத்துறையினர், இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல், துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கூறியதாவது:-
வன உயிரின வார விழா மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 150 மரக்கன்றுகள் நடப்பட்டது. சீசர் வனத்தில் 4 வகையான கழுகுகள் உள்ளன. பெரும்பாலும் நீர் மரடு, டெர்மினியா அர்ஜூனா மரங்களில் கழுகுகள் வாழ்கின்றன. இதனால் அவைகளின் வாழ்விடங்களை பாதுகாக்கும் வகையில் குறிப்பிட்ட வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
இது தவிர 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வருகிற 8-ந் தேதி பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளது. வளமான காடுகளை உருவாக்குவதில் புலிகளின் பங்கு என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளில் பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பள்ளிகளில் இருந்து 2 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். முதலில் பதிவு செய்யும் 20 போட்டியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் வருகிற 6-ந் தேதிக்குள் wIw 2020mtr@gmail.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். தமிழ் பேச்சுப்போட்டி காலை 10:30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், ஆங்கில பேச்சுபோட்டி மதியம் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து உள்ளதால், சவாரி கிடைக்காமல் வாடகை வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு 150 பேருக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இது தவிர தோட்டக்கலை பூங்காக்கள் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக ஊட்டியில் படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்படவில்லை. இதனால் வார விடுமுறை நாட்களை தவிர பிற நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாகவே உள்ளது.
இதனால் அவர்களை நம்பி பிழைப்பு நடத்தி வரும் வாடகை வாகன ஓட்டிகள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்வதன் மூலம் கிடைக்கும் வாடகை பணத்தை அவர்கள் தங்களது குடும்பங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருவதால் சவாரி கிடைக்காமல் வாகனங்களை வாடகைக்கு இயக்க முடியவில்லை.
இதனால் காபி ஹவுஸ், லோயர் பஜார் உள்ளிட்ட சாலையோரங்களில் வாடகை வாகனங்கள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் தங்களது சொந்த வாகனங்களில் வருவதால் சவாரி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே அவர்கள் வாகனங்களை வாங்க தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று உள்ளனர். தற்போது வருமானம் இல்லாத நிலையில் கடனை செலுத்தக்கோரி தனியார் நிதி நிறுவனத்தினர் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது. இதனால் வாடகை வாகன ஓட்டிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இதுகுறித்து ஊட்டி சுற்றுலா கார், சுமோ, மேக்சிகேப் ஓட்டுனர் நலச்சங்க தலைவர் கோவர்த்தன் கூறியதாவது:-
ஊரடங்கு தொடர்ந்து வரும் நிலையில், வாடகை வாகன ஓட்டிகளுக்கு அரசு நிவாரண உதவி வழங்கவில்லை. ஒவ்வொரு நாளும் குடும்ப செலவுக்கு பணமின்றி தவித்து வருகிறோம். வாகனங்களே இயக்கப்படாத நிலையில், சாலை வரி கட்ட வற்புறுத்தப்படுகிறோம். மேலும் கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவனத்தினர் உடனடியாக திரும்ப கட்ட சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். அவர்களிடம் கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் வாங்கி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு 150 பேருக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இது தவிர தோட்டக்கலை பூங்காக்கள் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக ஊட்டியில் படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்படவில்லை. இதனால் வார விடுமுறை நாட்களை தவிர பிற நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாகவே உள்ளது.
இதனால் அவர்களை நம்பி பிழைப்பு நடத்தி வரும் வாடகை வாகன ஓட்டிகள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்வதன் மூலம் கிடைக்கும் வாடகை பணத்தை அவர்கள் தங்களது குடும்பங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருவதால் சவாரி கிடைக்காமல் வாகனங்களை வாடகைக்கு இயக்க முடியவில்லை.
இதனால் காபி ஹவுஸ், லோயர் பஜார் உள்ளிட்ட சாலையோரங்களில் வாடகை வாகனங்கள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் தங்களது சொந்த வாகனங்களில் வருவதால் சவாரி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே அவர்கள் வாகனங்களை வாங்க தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று உள்ளனர். தற்போது வருமானம் இல்லாத நிலையில் கடனை செலுத்தக்கோரி தனியார் நிதி நிறுவனத்தினர் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது. இதனால் வாடகை வாகன ஓட்டிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இதுகுறித்து ஊட்டி சுற்றுலா கார், சுமோ, மேக்சிகேப் ஓட்டுனர் நலச்சங்க தலைவர் கோவர்த்தன் கூறியதாவது:-
ஊரடங்கு தொடர்ந்து வரும் நிலையில், வாடகை வாகன ஓட்டிகளுக்கு அரசு நிவாரண உதவி வழங்கவில்லை. ஒவ்வொரு நாளும் குடும்ப செலவுக்கு பணமின்றி தவித்து வருகிறோம். வாகனங்களே இயக்கப்படாத நிலையில், சாலை வரி கட்ட வற்புறுத்தப்படுகிறோம். மேலும் கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவனத்தினர் உடனடியாக திரும்ப கட்ட சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். அவர்களிடம் கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் வாங்கி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன் சிக்னலுக்காக மாணவர்கள் வனப்பகுதிக்குள் செல்கின்றனர். இதனால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் நிலவுகிறது.
கூடலூர்:
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. எனினும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை பி.எஸ்.என்.எல். செல்போன் சிக்னலை தவிர பிற தனியார் செல்போன் சிக்னல் சரிவர கிடைப்பது இல்லை. இதனால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் பெரும்பாலான கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக கூடலூர் பகுதியில் பி.எஸ்.என்.எல். உள்பட அனைத்து செல்போன் சிக்னல்களும் முழுமையாக கிடைப்பது இல்லை. இதன் காரணமாக மாணவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து, செல்போன் சிக்னல் கிடைக்கும் இடங்களை தேடி சென்று, அங்கிருந்து கொண்டு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.
கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஒவேலி பேரூராட்சியிலும் செல்போன் சிக்னல் முடங்கி உள்ளது. இதனால் அந்த பகுதி மாணவர்கள் வனப்பகுதியில் உள்ள மேடான இடத்துக்கு சென்று ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று, கல்வி பயின்று வருகின்றனர். இதேபோன்று கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அல்லூர்வயல் பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் நடந்து சென்று காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று படிக்கும் அவல நிலையை காண முடிகிறது. இதனால் எந்த நேரத்திலும் வனவிலங்குகளால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:-
ஒவ்வொரு நாளும் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படுகிறது. இதனை மாணவர்கள் பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காத காரணத்தினால் பாடங்களை மாணவர்கள் தொடர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் செல்போன் சிக்னல் கிடைக்கும் இடங்களை தேடி மாணவர்கள் சென்று படிக்கும் சூழல் காணப்படுகிறது. வனப்பகுதிக்குள் மேடான பகுதிக்கு செல்வதால், வனவிலங்குகள் தாக்கி விடுமோ? என்ற அச்சம் நிலவுகிறது. எனவே கூடலூர் பகுதியில் செல்போன் சிக்னல் சீராக கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. எனினும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை பி.எஸ்.என்.எல். செல்போன் சிக்னலை தவிர பிற தனியார் செல்போன் சிக்னல் சரிவர கிடைப்பது இல்லை. இதனால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் பெரும்பாலான கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக கூடலூர் பகுதியில் பி.எஸ்.என்.எல். உள்பட அனைத்து செல்போன் சிக்னல்களும் முழுமையாக கிடைப்பது இல்லை. இதன் காரணமாக மாணவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து, செல்போன் சிக்னல் கிடைக்கும் இடங்களை தேடி சென்று, அங்கிருந்து கொண்டு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.
கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஒவேலி பேரூராட்சியிலும் செல்போன் சிக்னல் முடங்கி உள்ளது. இதனால் அந்த பகுதி மாணவர்கள் வனப்பகுதியில் உள்ள மேடான இடத்துக்கு சென்று ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று, கல்வி பயின்று வருகின்றனர். இதேபோன்று கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அல்லூர்வயல் பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் நடந்து சென்று காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று படிக்கும் அவல நிலையை காண முடிகிறது. இதனால் எந்த நேரத்திலும் வனவிலங்குகளால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:-
ஒவ்வொரு நாளும் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படுகிறது. இதனை மாணவர்கள் பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காத காரணத்தினால் பாடங்களை மாணவர்கள் தொடர்ந்து படிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் செல்போன் சிக்னல் கிடைக்கும் இடங்களை தேடி மாணவர்கள் சென்று படிக்கும் சூழல் காணப்படுகிறது. வனப்பகுதிக்குள் மேடான பகுதிக்கு செல்வதால், வனவிலங்குகள் தாக்கி விடுமோ? என்ற அச்சம் நிலவுகிறது. எனவே கூடலூர் பகுதியில் செல்போன் சிக்னல் சீராக கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய வேளாண் மசோதாக்கள், மின்சார வாரிய திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊட்டி:
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய வேளாண் மசோதாக்கள், மின்சார வாரிய திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் சஞ்சீவிராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து, மின்வாரியம் போன்ற அரசு துறைகளில் ஓய்வு நாளிலேயே ஓய்வூதிய பலன்கள் அனைத்தையும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு, 3 வேளாண் மசோதாக்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முதுமலையில் வன உயிரின வார விழா தொடங்கியது. இதையொட்டி புலிகள் காப்பக சீகூர் வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது.
கூடலூர்:
வன உயிரின வார விழா, ஆண்டுதோறும் அக்டோபர் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அதன்படி முதுமலையில் வன உயிரின வார விழா தொடங்கியது. இதையொட்டி புலிகள் காப்பக சீகூர் வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். இதில் வெளி மண்டல துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் மற்றும் வனத்துறையினர், இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல், துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கூறியதாவது:-
வன உயிரின வார விழா மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 150 மரக்கன்றுகள் நடப்பட்டது. சீசர் வனத்தில் 4 வகையான கழுகுகள் உள்ளன. பெரும்பாலும் நீர் மரடு, டெர்மினியா அர்ஜூனா மரங்களில் கழுகுகள் வாழ்கின்றன. இதனால் அவைகளின் வாழ்விடங்களை பாதுகாக்கும் வகையில் குறிப்பிட்ட வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
இது தவிர 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வருகிற 8-ந் தேதி பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளது. வளமான காடுகளை உருவாக்குவதில் புலிகளின் பங்கு என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளில் பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பள்ளிகளில் இருந்து 2 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். முதலில் பதிவு செய்யும் 20 போட்டியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் வருகிற 6-ந் தேதிக்குள் wIw 2020mtr@gmail.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். தமிழ் பேச்சுப்போட்டி காலை 10:30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், ஆங்கில பேச்சுபோட்டி மதியம் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வன உயிரின வார விழா, ஆண்டுதோறும் அக்டோபர் 2-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அதன்படி முதுமலையில் வன உயிரின வார விழா தொடங்கியது. இதையொட்டி புலிகள் காப்பக சீகூர் வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். இதில் வெளி மண்டல துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் மற்றும் வனத்துறையினர், இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல், துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கூறியதாவது:-
வன உயிரின வார விழா மற்றும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 150 மரக்கன்றுகள் நடப்பட்டது. சீசர் வனத்தில் 4 வகையான கழுகுகள் உள்ளன. பெரும்பாலும் நீர் மரடு, டெர்மினியா அர்ஜூனா மரங்களில் கழுகுகள் வாழ்கின்றன. இதனால் அவைகளின் வாழ்விடங்களை பாதுகாக்கும் வகையில் குறிப்பிட்ட வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
இது தவிர 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வருகிற 8-ந் தேதி பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளது. வளமான காடுகளை உருவாக்குவதில் புலிகளின் பங்கு என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளில் பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பள்ளிகளில் இருந்து 2 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். முதலில் பதிவு செய்யும் 20 போட்டியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் வருகிற 6-ந் தேதிக்குள் wIw 2020mtr@gmail.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். தமிழ் பேச்சுப்போட்டி காலை 10:30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், ஆங்கில பேச்சுபோட்டி மதியம் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஊட்டியில் கார் ஓட்டி பழக சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி:
ஊட்டியில் கார் ஓட்டி பழக சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை இயக்க கற்று கொடுக்கும் தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இங்கு நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஓட்டுனர் பயிற்சி பெற்று, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலம் ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பித்து, அதனை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஊட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் இளம்பெண் ஒருவர் கார் ஓட்டும் பயிற்சி பெற்றார். அவருக்கு, ஓட்டுனர் பயிற்சியாளரான அருண் என்பவர் கார் ஓட்ட கற்றுக்கொடுத்தார்.
இதற்கிடையில் சம்பவத்தன்று லவ்டேல் பகுதியில் கார் ஓட்ட கற்று கொடுத்து கொண்டு இருந்தபோது, அந்த இளம்பெண்ணுக்கு அருண் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த இளம்பெண் நேற்று முன்தினம் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஓட்டுனர் பயிற்சியின்போது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அருண் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்து உள்ள நிலையில், அதனை மீட்கும் வகையில் ஊட்டி படகு இல்லம் திறக்கப்படுமா? என்று வியாபாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஊட்டி:
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டு, நீலகிரியில் தோட்டக்கலை பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுகிறது. ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் வனத்துறையின் கீழ் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உள்ளன. தற்போது 6 மாதங்களுக்கும் மேலாக சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு சுற்றுலா பயணிகளை நம்பி வியாபாரம் செய்து வந்தவர்கள் வருமானம் இன்றி வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், பைக்காரா படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த சுற்றுலா தலங்களில் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த பொருட்கள் வீணாகியதோடு, சேதமடைந்ததால் நஷ்டம் ஏற்பட்டது. ஊட்டி படகு இல்லத்தில் தேநீர், சாக்லேட், பழங்கள், கம்பிளி ஆடைகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இது தவிர சாலையோர வியாபாரிகள் சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்தனர். ஆனால் சுற்றுலா பயணிகள் வராததால் அவர்கள் வருமானம் இன்றி உள்ளனர். மேலும் மாற்று வேலைக்கு கூட செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர இ-பாஸ் கட்டாயம் என்பதால், குறைந்த எண்ணிக்கையில்தான் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் கொரோனா அச்சத்தால் ஓரிரு நாட்கள் மட்டுமே தங்குகின்றனர். சிலர் ஒரே நாளில் வந்துவிட்டு திரும்புகின்றனர்.
தோட்டக்கலை பூங்காக்கள் திறக்க அனுமதித்ததை போல் ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும். மேலும் இ-பாஸ் நடைமுறை மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வர ஆர்வம் காட்டவில்லை. எனவே இ-பாஸ் முறையை ரத்து செய்து வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தவிர வியாபாரம் நடத்துவதற்காக தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் தொகை பெற்றோம். வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம். எப்போது பழைய நிலைமை திரும்பும் என்று எதிர்பார்த்து உள்ளோம். வழக்கமாக கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும். இரண்டாவது சீசனான செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் சுற்றுலா பயணிகள் கணிசமாக வருவார்கள். ஆகவே வாழ்வாதாரத்தை இழந்த வியாபாரிகள், தொழிலாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர்களை கருத்தில் கொண்டு மற்ற சுற்றுலா தலங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டு, நீலகிரியில் தோட்டக்கலை பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுகிறது. ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் வனத்துறையின் கீழ் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உள்ளன. தற்போது 6 மாதங்களுக்கும் மேலாக சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு சுற்றுலா பயணிகளை நம்பி வியாபாரம் செய்து வந்தவர்கள் வருமானம் இன்றி வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், பைக்காரா படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த சுற்றுலா தலங்களில் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த பொருட்கள் வீணாகியதோடு, சேதமடைந்ததால் நஷ்டம் ஏற்பட்டது. ஊட்டி படகு இல்லத்தில் தேநீர், சாக்லேட், பழங்கள், கம்பிளி ஆடைகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இது தவிர சாலையோர வியாபாரிகள் சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்தனர். ஆனால் சுற்றுலா பயணிகள் வராததால் அவர்கள் வருமானம் இன்றி உள்ளனர். மேலும் மாற்று வேலைக்கு கூட செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர இ-பாஸ் கட்டாயம் என்பதால், குறைந்த எண்ணிக்கையில்தான் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் கொரோனா அச்சத்தால் ஓரிரு நாட்கள் மட்டுமே தங்குகின்றனர். சிலர் ஒரே நாளில் வந்துவிட்டு திரும்புகின்றனர்.
தோட்டக்கலை பூங்காக்கள் திறக்க அனுமதித்ததை போல் ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும். மேலும் இ-பாஸ் நடைமுறை மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வர ஆர்வம் காட்டவில்லை. எனவே இ-பாஸ் முறையை ரத்து செய்து வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தவிர வியாபாரம் நடத்துவதற்காக தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் தொகை பெற்றோம். வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம். எப்போது பழைய நிலைமை திரும்பும் என்று எதிர்பார்த்து உள்ளோம். வழக்கமாக கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும். இரண்டாவது சீசனான செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் சுற்றுலா பயணிகள் கணிசமாக வருவார்கள். ஆகவே வாழ்வாதாரத்தை இழந்த வியாபாரிகள், தொழிலாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர்களை கருத்தில் கொண்டு மற்ற சுற்றுலா தலங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 88 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 3,944 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் விவரங்களை முழுமையாக சேகரித்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த முதல்நிலை தொடர்பாளர்களை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் இதுவரை 88 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. தொற்று அறிகுறி தென்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களி எண்ணிக்கை 277 ஆக உயர்ந்து உள்ளது. அந்த இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், ஜிங்க் மாத்திரைகள், வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 2,989 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
அரசு பஸ் டிரைவர்கள் இரட்டை முக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை 3 ஆயிரத்து 807 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 161 பேருக்கு தொற்று பாதித்து புதிய உச்சத்தை எட்டி உள்ளது. தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது மாவட்டங்களுக்கு இடையே அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாலும், வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
நீலகிரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மக்கள் நடமாட்டமும் அதிகரித்து காணப்படுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வர தினமும் 150 இ பாஸ் வழங்கப்படுகிறது. வைரஸ் பரவலை தடுக்க தினமும் 1, 400 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று அதிகம் பேருக்கு உறுதி செய்யப்படுவதால் பரிசோதனையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வருகிற நாட்களில் ஒரு நாளைக்கு 2, 000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து 15 நாட்கள் முககவசம் அணிந்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும். அருகே உள்ள மாவட்டங்களில் நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. பொதுமக்கள் உறவினர்களை சென்று சந்திப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
சுற்றுலா பயணிகள் வந்தாலும், உள்ளூர் மக்களுக்கு அதிகமாக பாதிப்பு ஏற்படுவது முக்கியமான ஒன்றாகும். ஓட்டலில் முன்பதிவு செய்திருந்தால் வர அனுமதிக்கப்படுகிறார்கள். தொழில், வியாபாரம் சம்பந்தமாக வருகிறவர்கள் இ பாஸ் எடுத்து வர வேண்டும். உள்ளூர் மக்கள் ஆதார் அடையாள அட்டை காண்பிக்க வேண்டும். பொதுமக்கள் என்று கூறி சுற்றுலா பயணிகள் இ பாஸ் இல்லாமல் வருவது தெரியவந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டங்களுக்கு இடையே அரசு பஸ் இயக்கப்பட்டு வருவதால் பஸ்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டமாக ஏறக்கூடாது. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பஸ்சை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். டிரைவர்கள், கண்டக்டர்கள் இரட்டை முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் சுற்றுலா தொழிலாளர்கள் நலிவடைந்து உள்ளதை கருத்தில் கொண்டு கூடுதலாக இ பாஸ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் கோவிட் கேர் சென்டர்கள் அதிகரிக்கப்பட்டதோடு, படுக்கை வசதிகளும் போதுமான அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. எஸ்டேட் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. வைரஸ் உறுதியானவர்கள் வீட்டில் தனிமைப்படுத்துதல் ஊக்குவிக்கப்படுகிறது. அவர்களை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






