என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊட்டியில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்3 Oct 2020 8:20 AM GMT (Updated: 3 Oct 2020 8:20 AM GMT)
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய வேளாண் மசோதாக்கள், மின்சார வாரிய திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊட்டி:
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய வேளாண் மசோதாக்கள், மின்சார வாரிய திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் சஞ்சீவிராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து, மின்வாரியம் போன்ற அரசு துறைகளில் ஓய்வு நாளிலேயே ஓய்வூதிய பலன்கள் அனைத்தையும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு, 3 வேளாண் மசோதாக்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X