search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்"

    • தேர்தல் வாக்குறுதி 313-ன் படி முறையான சிறப்பு பென்சன் வழங்கவேண்டும்.
    • உண்ணாவிரதம் கூட்ட அமர்வில் ஒப்புக்கொண்ட மருத்துவ காப்பீடு ஈமச்சடங்கு நிதி ரூ.25000 வழங்க வேண்டும்.

    தருமபுரி, 

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட துணைத்தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் மாநில துணைத்தலைவர் கணேசன், மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் மதலைமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் காவேரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் குப்புசாமி, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், நிர்வாகி கேசவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    தேர்தல் வாக்குறுதி 313-ன் படி முறையான சிறப்பு பென்சன் வழங்கவேண்டும். உண்ணாவிரதம் கூட்ட அமர்வில் ஒப்புக்கொண்ட மருத்துவ காப்பீடு ஈமச்சடங்கு நிதி ரூ.25000 வழங்க வேண்டும். சமூகநல முன்னாள் இயக்குநர் ஆப்பிரகாம் உத்தரவுபடி ஓய்வுகால பலன்களை ஓய்வுபெறும் அன்றே முழுமையாக வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • தட்டேந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில்பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    ஓசூர்,

    தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில், கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலி தட்டேந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர், தளி ஒன்றிய சங்கத்தின் சார்பில், ஓசூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் நஞ்சுண்ட ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சீனிவாசன் தொடக்க உரையாற்றினார்.

    ஒன்றிய செயலாளர் வெங்கடகிரியப்பா, குணவதி சீனிவாசலு, ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.துரை ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

    முடிவில், ஒன்றிய பொருளாளர் ராஜண்ணா நன்றி கூறினார். இதில்பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    ×