என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரியில் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- தேர்தல் வாக்குறுதி 313-ன் படி முறையான சிறப்பு பென்சன் வழங்கவேண்டும்.
- உண்ணாவிரதம் கூட்ட அமர்வில் ஒப்புக்கொண்ட மருத்துவ காப்பீடு ஈமச்சடங்கு நிதி ரூ.25000 வழங்க வேண்டும்.
தருமபுரி,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட துணைத்தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் மாநில துணைத்தலைவர் கணேசன், மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் மதலைமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் காவேரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் குப்புசாமி, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், நிர்வாகி கேசவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தேர்தல் வாக்குறுதி 313-ன் படி முறையான சிறப்பு பென்சன் வழங்கவேண்டும். உண்ணாவிரதம் கூட்ட அமர்வில் ஒப்புக்கொண்ட மருத்துவ காப்பீடு ஈமச்சடங்கு நிதி ரூ.25000 வழங்க வேண்டும். சமூகநல முன்னாள் இயக்குநர் ஆப்பிரகாம் உத்தரவுபடி ஓய்வுகால பலன்களை ஓய்வுபெறும் அன்றே முழுமையாக வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்