என் மலர்
செய்திகள்

கொரோனா பரிசோதனை
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 88 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 88 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 3,944 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் விவரங்களை முழுமையாக சேகரித்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த முதல்நிலை தொடர்பாளர்களை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் இதுவரை 88 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. தொற்று அறிகுறி தென்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களி எண்ணிக்கை 277 ஆக உயர்ந்து உள்ளது. அந்த இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், ஜிங்க் மாத்திரைகள், வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 2,989 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
Next Story






