என் மலர்tooltip icon

    நீலகிரி

    ஊட்டி நகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 250 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    ஊட்டி:

    ஊட்டி நகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து குப்பைகளை வீடு, வீடாக சென்று சேகரிப்பது, நகர் பகுதிகளை சுத்தமாக வைப்பது போன்ற பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா ஏற்படுவதை தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஊட்டி அப்பர் பஜாரில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. சுகாதார குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். முதலில் வெளிநோயாளிகள் சீட்டு வழங்கப்பட்டு உயரம், எடை சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளதா? என்று பரிசோதிக்கப்பட்டது. ஸ்கேன் வசதியும் செய்யப்பட்டு இருந்தது.

    மேலும் தூய்மை பணியாளர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 250 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை ஊட்டி நகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
    குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் 16 கூட்டுறவு தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருமானம் ஈட்டுகின்றனர்.

    இதைத்தொடர்ந்து தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் நடத்தப்படும் ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர். தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 கிழமைகளில் ஏலம் நடைபெறுகிறது. அதன்படி

    விற்பனை எண் 45-க்கான ஏலம் கடந்த 5, 6-ந் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 19 லட்சத்து 15 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. அதில் 14 லட்சத்து 51 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 4 லட்சத்து 64 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 12 லட்சத்து 81 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் ஏலம் போனது. இது 68 சதவீத விற்பனை ஆகும். விற்பனையான தேயிலைத்தூளின் ரொக்க மதிப்பு ரூ.19 கோடியே 15 லட்சம் ஆகும். அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கடந்த ஏலத்தை விட ரூ.2 விலை வீழ்ச்சி ஏற்பட்டது. சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.301, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.247 என இருந்தது.

    சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.110 முதல் ரூ.119 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.170 முதல் ரூ.200 வரையும், டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.136 முதல் ரூ.139 வரையும், உயர் வகை கிலோவுக்கு ரூ.180 முதல் ரூ.225 வரையும் இருந்தது.

    வருகிற 14-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், அடுத்து வரும் 12, 13-ந் தேதிகளில் ஏலம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் விற்பனை எண் 46-க்கான ஏலம் 19, 20-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
    நீலகிரி, வால்பாறையில் நூலகம் மற்றும் நடு நிலைப்பள்ளி கதவுகளை சூறையாடியது. குட்டியுடன் 9 காட்டுயானைகள் இந்த பகுதியில் சுற்றித்திரிவதால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பேரூராட்சி அலுவலக வளாகத்திற்குள் நேற்று இரவு புகுந்த 9 காட்டு யானை கூட்டம் அங்கிருந்த மின்சாதனப் பொருட்களை அடித்து நொறுக்கியது.

    பின்னர் அருகில் உள்ள நூலகம் மற்றும் நடு நிலைப்பள்ளி கதவுகளை சூறையாடியது. குட்டியுடன் 9 காட்டுயானைகள் இந்த பகுதியில் சுற்றித்திரிவதால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதேபோன்று மசின குடிக்கு பயணிகளுடன் வந்த பஸ்சை வழிமறித்து தாக்கியது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அதிர்ஷ்டவமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    இதேபோன்று வால்பாறை வனப்பகுதியில் இருந்து 20 யானைகள் தோனிமுடி எஸ்டேட்டுக்குள் புகுந்தன. அதில் இருந்த சில யானைகள் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் பொருட்களை வைக்கும் அறையை நொறுக்கியது. இதைப்பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    மானாம்பள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காட்டுயானை கூட்டத்தை விரட்டினர். ஆனால் யானைகள் கெஜமுடி மற்றும் தாய்முடி எஸ்டேட்டுகளுக்குள் நுழைந்தன. அங்கிருந்த மகளிர் சுயஉதவிக்குழு ரேசன் கடையை உடைத்து அங்கிருந்த ரேசன் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்தது. பின்னர் வனப்பகுதிக்குள் யானை கூட்டம் செல்லாமல் குட்டியுடன் தாய்முடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால் தேயிலை பறிக்க தொழிலாளர்களுக்கு வனத்துறை அனுமதி அளிக்கவில்லை.

    பொதுமக்கள் தனியே செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை கூட்டம் பல்வேறு எஸ்டேட்டுகளுக்குள் புகுந்துள்ளன. ஒரு இடத்தில் விரட்டினால் வேறு எஸ்டேட்டுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டு வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கூடுதல் வனத்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினர். யானைகள் கூட்டம் கூட்டமாக எஸ்டேட்டுகளில் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

    ஊட்டி, கோத்தகிரி மற்றும் கூடலூரில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்திருந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர்கள் ராஜேந்திரன், குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் பாலச்சந்திரன், நாசர், மோகன்ராஜ் உள்பட வருவாய்த்துறையினர், போலீசார் நேற்று காலை 11 மணிக்கு கூடலூர் நகரில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் பதுக்கி வைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 16 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதுபோன்று கடை உரிமையாளர்களுக்கு ரூ.31 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

    கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி, கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், கிராம உதவியாளர்கள் கொண்ட குழுவினர், நேற்று கோத்தகிரி மார்க்கெட், பஸ் நிலையம், ராம்சந்த் சதுக்கம், காமராஜர் சதுக்கம், டானிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் ஒரு சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்பாட்டுக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருந்த பொது மக்களுக்கு ரூ.1000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஊட்டி நகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு), சுகாதார ஆய்வாளர் மகாராஜன் மற்றும் அலுவலர்கள் மார்க்கெட் மற்றும் கமர்சியல் சாலையில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தினர். அப்போது முககவசம் அணியாமல் இருந்தவர்களுக்கு ரூ.2,600 அபராதம் விதிக்கப்பட்டது. அதுபோன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    கூடலூரில் 3 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கூடலூர்:

    கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்துவிட்டு சென்றனர். அப்போது நள்ளிரவு அதே பகுதியில் அடுத்தடுத்து உள்ள 3 கடைகளில் திடீரென தீ பிடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக இருந்தது.

    இதை அறிந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது வாகனங்களுக்கு பெயிண்டிங் செய்யும் ஒர்க் ஷாப் மற்றும் வீட்டு உபயோக பர்னிச்சர் பொருட்கள் செய்யும் கடை, துணி பை தயாரிக்கும் மற்றொரு கடை ஆகியவை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்தது.

    இது குறித்த தகவலின்பேரில் போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கடைகளுக்குள் எந்திரங்கள் மற்றும் எளிதில் தீ பரவக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள், துணிப்பைகள் இருந்ததால் தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை. எனினும் தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் அதன் உள்ளே இருந்த எந்திரங்கள், பர்னிச்சர்கள், துணிப்பைகள் தயாரிப்பதற்கான தளவாடங்கள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட் கள் எரிந்து நாசமானது. தீ விபத்து எப்படி நடந்தது என்பது தெரியவில்லை.

    இது குறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கூடலூரில் 3 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை போராடி அணைத்தனர்.
    கூடலூர்:

    கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்துவிட்டு சென்றனர். அப்போது நள்ளிரவு அதே பகுதியில் அடுத்தடுத்து உள்ள 3 கடைகளில் திடீரென தீ பிடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக இருந்தது.

    இதை அறிந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தனர். அப்போது வாகனங்களுக்கு பெயிண்டிங் செய்யும் ஒர்க் ஷாப் மற்றும் வீட்டு உபயோக பர்னிச்சர் பொருட்கள் செய்யும் கடை, துணி பை தயாரிக்கும் மற்றொரு கடை ஆகியவை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்தது.

    இது குறித்த தகவலின்பேரில் போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கடைகளுக்குள் எந்திரங்கள் மற்றும் எளிதில் தீ பரவக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள், துணிப்பைகள் இருந்ததால் தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை. எனினும் தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் அதன் உள்ளே இருந்த எந்திரங்கள், பர்னிச்சர்கள், துணிப்பைகள் தயாரிப்பதற்கான தளவாடங்கள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து எப்படி நடந்தது என்பது தெரியவில்லை.

    இது குறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத 1,300 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதுடன், மறு ஏலம் விடப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    ஊட்டி நகராட்சி மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்களில் செயல்பட்டு வரும் கடைகளில் வாடகை தொகை கடந்த 2016-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது. ரூ.10 கோடிக்கும் மேல் பாக்கி தொகை இருந்ததால் போதிய நிதி இல்லை.

    எனவே ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே வாடகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள் வாடகை கட்டணத்தை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி உத்தரவின்படி கடந்த 2016-ம் ஆண்டு முதல் கடைகளின் அளவீடை பொறுத்து வியாபாரிகள் செலுத்த வேண்டிய வாடகையை உடனடியாக செலுத்துமாறு நகராட்சி மார்க்கெட்டில் உள்ள 1,300-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    அதில் நகராட்சிக்கு சொந்தமான கடையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருபவர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகையை குறிப்பிட்டபடி செலுத்தவில்லை. பலமுறை தங்களை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் இதுவரை செலுத்தப்படவில்லை. எனவே, இந்த நோட்டீஸ் கிடைத்த 3 நாட்களுக்குள் கடை வாடகை முழுவதையும் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் குத்தகை நிபந்தனைகளின்படி கடையின் குத்தகையை ரத்து செய்து, மறுஏலம் விட்டு அதனால் நகராட்சிக்கு ஏற்படும் இழப்புகளை சட்டப்படி தங்களிடம் இருந்து வசூல் செய்யப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
    சட்டசபை தேர்தலில் தேமுதிக அதிக இடங்களை கைப்பற்றும் என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
    ஊட்டி:

    தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மகன்கள் சண்முக பாண்டியன், விஜயபிரபாகரன் ஆகியோர் நேற்று ஊட்டியில் நடந்த கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் விஜயபிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தே.மு.தி.க. தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. 40 ஆண்டு காலமாக விஜயகாந்த் ரசிகர் மன்றம் உள்ளது. தற்போது தேர்தல் களத்தில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லை. களத்தில் உள்ள முதல்- அமைச்சர் வேட்பாளர்களும் முதல் முறையாக நிற்கின்றனர். அவர்களுக்கு அனுபவம் இருந்தாலும், இந்த தேர்தல் முதல் தேர்தல் போன்றதது தான்.

    நாங்கள் ஏற்கனவே தேர்தலை சந்தித்து உள்ளதால் தே.மு.தி.க. எதிர்நீச்சல் போட்டு செல்கிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் 3-வது அணி அமைய வாய்ப்புள்ளது. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை. சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து விஜயகாந்த் முடிவு எடுப்பார். எது எப்படி இருந்தாலும் இந்த முறை பல இடங்களில் நாங்கள் வெற்றியை பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரஜினி அரசியலுக்கு வருவாரா? என நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜயபிரபாகரன், அவர் முதலில் அரசியலுக்கு வரட்டும். அதன்பின்னர் எங்களது கருத்தை சொல்கிறோம் என்றார். முன்னதாக ஊட்டியில் குதிரை சவாரி ஓட்டும் தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி, குதிரைகளுக்கு சத்தான உணவு வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.
    நீலகிரி மாவட்டத்தில் புதிதாக நேற்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 6 ஆயிரத்து 867 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்து 900 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 39 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 6 ஆயிரத்து 577 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 283 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    குன்னூர் அருகே காட்டுப்பன்றிக்கு வைத்த சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தைப்புலி இறந்தது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சேலாஸ் பகுதியில் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதைச்சுற்றி உள்ள வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் அடிக்கடி தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் குன்னூர் வனச்சரகர் சசிகுமார் தலைமையில் வனவர்கள் சபரிசன், ராஜ்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்ததில் சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தைப்புலி இறந்தது தெரியவந்தது. பின்னர் கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு சிறுத்தைப்புலியின் உடற்கூறுகள் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் அக்கம் பக்கத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், கீழ் கக்காச்சியை சேர்ந்த முருகன் (வயது 38), கிளிஞ்சாடாவை சேர்ந்த செல்வன் (40) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், இருவரும் சேர்ந்து கடந்த சில மாதங்களாக வனப்பகுதிகளை ஒட்டி உள்ள தேயிலை தோட்டங்களில் சுருக்கு கம்பி வைத்து காட்டுப்பன்றி, மான், முயல் போன்ற வனவிலங்குகளை வேட்டையாடியது தெரியவந்தது.

    மேலும் வனப்பகுதியில் இருந்து வரும் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக தேயிலை தோட்டம் பகுதியில் சுருக்கு கம்பி வைத்ததும் இதில் சிறுத்தைப்புலி சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனை 2 பேரும் ஒப்புக்கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் 2 பேரையும் கைது செய்தனர். வனவிலங்குகளை வேட்டையாடினால் வன பாதுகாப்பு சட்டத்தின்படி 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு குன்னூர் கடமானை வேட்டையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க சுருக்கு கம்பி வைப்பது, மின் வேலி அமைப்பது போன்றவற்றை வனத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    பெண்ணை தாக்கி கொன்ற காட்டு யானை குடியிருப்புக்குள் மீண்டும் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் வனப்பகுதியையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடலூர் அருகே உள்ள கோக்கால் பகுதியை சேர்ந்த கமலாட்சி என்ற பெண் அப்பகுதியில் உள்ள நீரோடையில் துணி துவைக்க சென்றபோது காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்கக்கோரி போராட்டம் நடத்த முயன்றனர்.

    பின்னர் போலீசார், வனத்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கோக்கால் மலையடிவாரத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானையை விரட்டி அடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். மேலும் ஊருக்குள் மீண்டும் வராத வகையில் காட்டு யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை 5 மணிக்கு தனியார் தேயிலை தோட்டம் வழியாக மேல் கூடலூர் பஜாருக்குள் காட்டு யானை புகுந்தது. அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் காட்டு யானையை கண்டதும் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் காட்டு யானை ஓ.வி.எச்.சாலை வழியாக நடந்து சென்று கோக்கால் பகுதியை அடைந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

    தொடர்ந்து சிலர் பட்டாசுகளை வெடித்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டுயானை அங்கேயே முகாமிட்டிருந்தது. சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு கோக்கால் மலையடிவாரத்துக்கு காட்டு யானை சென்றது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    பெண்ணை தாக்கி கொன்ற காட்டு யானை தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டு வருவதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். சம்பவம் நடந்து சில தினங்கள் மட்டுமே வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். ஆனால் மீண்டும் காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. எனவே காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் வராத வகையில் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த காட்டு யானையை முதுமலை வனத்துக்குள் விரட்டியடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    பணி நேரத்தை குறைக்கக்கோரி குன்னூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஊட்டி:

    டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு 2019-2020-ம் ஆண்டிற்கான தீபாவளி போனஸ் வழங்க ஆவன செய்ய வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் குன்னூரில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு நேற்று நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு நிர்வாகி நவீன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    ×