search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medical Test"

    • வருடம் ஒரு முறை குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்வது அவசியம்.
    • வருடத்துக்கு ஒரு முறை குழந்தைகளுக்கு சில மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டியது முக்கியம்.

    குழந்தைகளின் உடல்நலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் மட்டுமே மருத்துவரிடம் சிகிச்சைக்காக கூட்டிச்செல்வது வழக்கம். அதே சமயம் 'வருமுன் காப்போம்' என்ற அடிப்படையில், வருடத்துக்கு ஒரு முறை குழந்தைகளுக்கு சில மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டியது முக்கியம். இதன்மூலம் ஆரம்ப நிலையில் இருக்கும் பாதிப்புகளை கண்டறிந்து, அவை தீவிரமாகாமல் தடுக்க முடியும்.

    கண் பரிசோதனை:

    ஊட்டச்சத்து குறைபாடு, டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவது ஆகிய காரணங்களால் குழந்தைகள் கண்ணாடி அணிவது அதிகரித்து வருகிறது. முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் மூலம், பாதிப்புகளைக் கண்டறிந்து கண் பார்வைக் குறைபாட்டைத் தடுக்க முடியும். எனவே வருடம் ஒரு முறை குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்வது அவசியம்.

    பல் பரிசோதனை:

    சொத்தைப்பல், ஈறுகளில் பிரச்சினை போன்ற பாதிப்புகள் ஏற்படும்போதுதான் பலரும் பல் மருத்துவரைச் சந்திக்கிறார்கள். குழந்தைகள் அதிகப்படியான இனிப்புகள், சாக்லேட் வகைகள், ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிடுவதால் பற்களில் கிருமிகளின் தாக்கம் இருக்கலாம். இவை பாதிப்பை ஏற்படுத்தும்வரை காத்திராமல், முன்கூட்டியே பல் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் பற்களின் ஆரோக்கியம் காக்கலாம்.

    உடல் எடை:

    மோசமான உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது போன்றவற்றால் குழந்தைகளின் எடை அதிகரித்து வருகிறது. குழந்தைகளின் வளர்ச்சி சீராக உள்ளதா? உடல் எடை சரியாக உள்ளதா? எனப் பரிசோதிக்க பொதுமருத்துவரைச் சந்திப்பது நல்லது. மேலும் குழந்தைகளிடம் குறட்டை, காது நோய்த்தொற்றுகள், டான்சிலிடிஸ், சைனஸ் போன்றவற்றின் அறிகுறிகள் இருந்தால் காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் அழைத்துச்சென்று பரிசோதனை செய்வதன் மூலம், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தக்க சிகிச்சைகளின் மூலம் அவற்றை குணப்படுத்த முடியும்.

    தடுப்பூசி:

    குழந்தைகள் பிறந்தது முதல் 1 வருடம் வரையும், அதற்கு பிறகு 2 முதல் 12 வருடங்கள் வரையும் தடுப்பூசிகள் போட வேண்டும். இதற்கான தடுப்பூசி அட்டவணையை மருத்துவரிடம் பெற்று, உரிய இடைவெளியில் கால தாமதம் இல்லாமல் தடுப்பூசி போடுவது பல நோய்களைத் தடுக்க உதவும்.

    ஆண்களுக்கு உடலில் ஏதேனும் சீர்கேடு ஏற்பட்டால் பின் விளைவுகள் அதிகம் ஏற்படும். எனவே 30 வயதை நெருங்கும் ஆண்கள் சில பரிசோதனைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
    பொதுவாகவே நமக்கு வயசு கூட கூட உடலில் ஹார்மோன் மாற்றங்கள் அதிக அளவில் ஏற்படும். இந்த ஹார்மோன்கள் தான் நமது உடலின் ஒவ்வொரு செயலையும் பெரும்பாலும் நிர்ணயிக்கிறது. ஆண்களுக்கு இதில் ஏதேனும் சீர்கேடு ஏற்பட்டால் பின் விளைவுகள் அதிகம்.

    30 வயதை கடந்த ஆண்கள் அனைவரும் முதலில் இந்த ரத்த அணுக்களின் எண்ணிக்கை எந்த அளவில் உடலில் இருக்கிறது என்பதை அறிய வேண்டும். அதற்கு Complete Blood Count டெஸ்ட் மிக முக்கியமாகும். இந்த டெஸ்ட் உங்களை கல்லீரல் புற்றுநோய் முதல் தொற்று நோய்கள் போன்ற பலவித நோய்களை கண்டறிந்து விடும்.

    புற்றுநோய்கள் ஆணுறுப்பில் வருவது இப்போதெல்லாம் அதிகமாகி விட்டது. இதன் வீரியமும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. Prostate-specific Antigen blood test என்பது ஆணுறுப்பில் புற்றுநோய் செல்கள் உள்ளதா என்பதை பரிசோதிக்கும் முறையாகும். ஆண்கள் இந்த பரிசோதனையை நிச்சயம் எடுக்க வேண்டும்.

    இப்போதெல்லாம் ஆண்களுக்கு இந்த சிறுநீரக கோளாறுகள் அதிகமாக ஏற்படுகிறது என ஆய்வுகள் சொல்கிறது. கிரியடினின் அளவு சரியாக இருந்தால் கிட்னியில் கோளாறுகள் உருவாகாது. சராசரியாக 0.6-1.2 அளவு கிரியடினின் இருக்க வேண்டும். இல்லையெனில் கிட்னி முழுமையாக பாதிக்கப்பட்டு மரணம் கூட ஏற்படலாம்.

    நமது உடலில் முக்கிய உறுப்பான கல்லீரலில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் அவ்வளவுதான். எனவே, கல்லீரல் சரியாக வேலை செய்கிறதா..? என்பதை பரிசோதிக்க கல்லீரல் டெஸ்ட் எடுப்பது சிறந்தது. குறிப்பாக மது அருந்துபவர்கள், கொழுப்பு கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள் எடுக்க வேண்டும்.

    பலருக்கு ஒரு சில நோய்கள் வந்தவுடன் அதை தொடர்ந்து இதய நோய்களும் உருவாக தொடங்கும். அவ்வாறு இருக்கும் போது நீங்கள் கட்டாயம் ECG டெஸ்ட் எடுத்து கொள்ள வேண்டும். மேலும் இதை வருடத்திற்கு 1 முறையாவது பரிசோதிப்பது நல்லது.

    ஹார்மோன்களில் மிக முக்கியமானது இந்த தைராய்டு தான். இவற்றின் அளவு சரியாக இல்லையெனில் உங்களுக்கு தான் விளைவுகள் அதிகம். இதனால் உடல் பருமன் முதல் மன அழுத்தம் வரை பலவித மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே, தைராய்டு பரிசோதனை அவசியம் நண்பர்களே.

    பல ஆண்கள் 30 வயதை கடந்த பிறகே திருமணம் செய்து கொள்கின்றனர். இது சில முக்கிய விளைவுகளை அவர்களின் தாம்பத்திய வாழ்வில் ஏற்படுத்துகிறது. குறிப்பாக அவர்களின் தாம்பத்திய வாழ்வில் அவர்கள் நிம்மதியின்றி இருக்கின்றனர். இது போன்ற பிரச்சினைகளை சரி செய்ய விந்தணுக்களின் எண்ணிக்கையை பரிசோதிப்பது அவசியம்.

    30 வயதை நெருக்கும் போதே நீங்கள் நிச்சயம் உடலில் உள்ள சர்க்கரை அளவு என்ன என்பதை பரிசோதிக்க வேண்டும். சர்க்கரை நோய் வந்து விட்டால் பிறகு இதய நோய், பித்தப்பை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை வர தொடங்கி விடும்.

    ஆண்கள் வெளி உணவுகளை அதிகம் உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகாமாக இருக்க கூடும். எனவே, இந்த பரிசோதனையையும் கூடுதலாக எடுக்க வேண்டும்.
    ×