என் மலர்
நீலகிரி
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் குறித்து தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஏ.உதயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மோகோல் கோப்பைகள், உணவுப்பொருட்களை பார்சல் செய்ய பயன்படுத்தும் பிளாஸ்டிக் பேப்பர்கள், குடிநீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவற்றை தயாரிப்பது, விற்பது, உபயோகிப்பது, வினியோகிப்பது, சேமித்து வைப்பது, போக்குவரத்து செய்வது போன்றவை தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை ஐகோர்ட்டு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவை தொடர்ந்து அரசுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
பிளாஸ்டிக் தடையை செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆய்வு மற்றும் புகார் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து அதனை மூடுவதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
இருப்பினும் சட்டவிரோதமாக செயல்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது.
எனவே, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள், சட்டவிரோதமாக இயங்கும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் குறித்த தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களிடம் புகார் அளிக்கலாம். https://tnpcb.gov.in/contact.php என்ற இணையதள முகவரியிலும், மின்னஞ்சல், கடிதம், செல்போன், வாட்ஸ் அப் வாயிலாகவும் புகாரை பதிவு செய்யலாம்.
புகார் அளிப்பவர்கள் தங்களது பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் பங்கு பெறும் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்களுக்கு பாராட்டும், வெகுமதியும் அளிக்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஏ.உதயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மோகோல் கோப்பைகள், உணவுப்பொருட்களை பார்சல் செய்ய பயன்படுத்தும் பிளாஸ்டிக் பேப்பர்கள், குடிநீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவற்றை தயாரிப்பது, விற்பது, உபயோகிப்பது, வினியோகிப்பது, சேமித்து வைப்பது, போக்குவரத்து செய்வது போன்றவை தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை ஐகோர்ட்டு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவை தொடர்ந்து அரசுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
பிளாஸ்டிக் தடையை செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆய்வு மற்றும் புகார் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து அதனை மூடுவதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
இருப்பினும் சட்டவிரோதமாக செயல்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது.
எனவே, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள், சட்டவிரோதமாக இயங்கும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் குறித்த தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களிடம் புகார் அளிக்கலாம். https://tnpcb.gov.in/contact.php என்ற இணையதள முகவரியிலும், மின்னஞ்சல், கடிதம், செல்போன், வாட்ஸ் அப் வாயிலாகவும் புகாரை பதிவு செய்யலாம்.
புகார் அளிப்பவர்கள் தங்களது பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் பங்கு பெறும் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்களுக்கு பாராட்டும், வெகுமதியும் அளிக்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நீலகிரியில் 10-ம் கட்ட முகாமில் 13 ஆயிரத்து 761 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 10-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. 256 நிலையான மையங்கள் மற்றும் 20 வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதல் டோஸ் செலுத்தி 2-வது டோஸ் செலுத்தாமல் உள்ள நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போடப்பட்டது. முதல் டோஸ் 45 வயதுக்கு மேல் 220 பேர், 18 வயது முதல் 44 வயதுக்குள் 434 பேர் என 654 பேருக்கு செலுத்தப்பட்டது. 2-வது டோஸ் 45 வயதுக்கு மேல் 6 ஆயிரத்து 695 பேர், 18 வயது முதல் 44 வயதுக்குள் 6,412 பேர் என மொத்தம் 13 ஆயிரத்து 107 பேருக்கு போடப்பட்டது. 10-ம் கட்ட முகாமில் 13 ஆயிரத்து 761 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சின்னசேலம், தியாகதுருகம், நாகலூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் தாலுகா பெத்தாசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நயினார்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்தூர், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, பூண்டி, தத்தாதிரிபுரம், குரால், காளசமுத்திரம், தாகம்தீர்த்தாபுரம், பாக்கம்பாடி, அ.வாசுதேவனூர், கூகையூர், வீரபயங்கரம், லட்சுமணாபுரம், ஈரியூர், பெருமங்கலம், கருங்குழி, கீழ்நாரியப்பனூர், சின்னசேலம் (காந்திநகர்) ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
நாகலூர் துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாகலூர், கண்டாச்சிமங்கலம், வடபூண்டி, கொங்கராயபாளையம், பட்டி, உச்சிமேடு, உடைய நாச்சி, முகமதியர்பேட்டை, கூத்தக்குடி, ஐவதுகுடி, வரஞ்சரம், வேளாக்குறிச்சி, ஈய்யனூர், ஒகையூர், பொரசக்குறிச்சி, கனங்கூர், விருகாவூர், முடியனூர், சாத்தனூர், மலைக்கோட்டாலம், விளம்பாவூர், சித்தலூர், வேங்கைவாடி, குடியநல்லூர், வானவரெட்டி, லட்சியம், நிறைமதி, நீலமங்கலம், தண்டலை, பெருவங்கூர், ஆ.மரூர், சேதுவராயன்குப்பம் ஆகிய பகதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மின்சார வாரியத்தின் கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, தியாகை, எலவனாசூர்கோட்டை, ரிஷிவந்தியம், பாவந்தூர், நூரோலை, அய்யனார்பாளையம், பழையசிறுவங்கூர், சூளாங்குறிச்சி, மாடூர், மடம், பிரிதிவிமங்களம், வீரசோழபுரம், வீ. பாளையம், கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருக்கோவிலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.
காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்ற பின்னர் வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடந்து சென்றனர்.
ஊட்டி:
ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதிகளை ஒட்டி உள்ளதால் காட்டுயானை, கரடி, காட்டெருமை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இந்த நிலையில் கல்லட்டி மலைப்பாதை 19-வது கொண்டை ஊசி வளைவில் காட்டுயானை ஒன்று நடமாடியது. சாலையோரம் நின்றபடி மேய்ச்சலில் ஈடுபட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிறிது தூரம் முன்பாகவே வாகனங்களை நிறுத்தினர். ஒரு மணி நேரம் அங்கேயே நின்றதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். பின்னர் காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்ற பின்னர் வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடந்து சென்றனர்.
பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை பயிற்சி அளிக்கப்படும்.
திருப்பூர்:
திருப்பூர்-அவிநாசி ரோடு அனுப்பர்பாளையம் புதூரில் கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் காம்ப்ளக்ஸ் இரண்டாவது மாடியில் கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இயங்குகிறது.
இம்மையத்தில் செல்போன் பழுது நீக்கும் இலவச பயிற்சி வருகிற 27-தொடங்குகிறது. வல்லுனர்கள் பங்கேற்று செல்போன் பழுது கண்டுபிடித்தல் மற்றும் சரி செய்வது குறித்து பயிற்சி அளிக்கின்றனர். இப்பயிற்சியில் திருப்பூர் மாவட்ட கிராமப்புற வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர் மட்டும் பங்கேற்கலாம்.
பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி நாளில் காலை, மாலை டீ,மதிய உணவு மற்றும் பயிற்சி உபகரணங்கள், சீருடை வழங்கப்படும். பயிற்சியின் ஒரு பகுதியாக தொழில் தொடங்க கடன் பெறுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும். பயிற்சி முடிவில் தேர்ச்சி பெறுவோருக்கு மத்திய அரசின் ஸ்கில் இந்தியா சான்று வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 99525 18441 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் வரத்து குறைவால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற மலைக்காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. சமவெளி பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் நீலகிரிக்கு சரக்கு வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. சமீப நாட்களாக சமவெளி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் விளைநிலங்களில் காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் ஊட்டிக்கு காய்கறி வரத்து வெகுவாக குறைந்ததால் சமவெளி காய்கறிகள் விலை கிடு, கிடு என உயர்ந்து வருகிறது. ஊட்டி உழவர் சந்தையில் நேற்று காலை பொதுமக்கள் காய்கறிகளை வாங்க வந்தனர். அங்கு கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த தக்காளி பழமாக இல்லாமல் காயாக இருந்தது. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, தினமும் உழவர் சந்தைக்கு கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து 2,200 கிலோ தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். தொடர் மழை காரணமாக 1,700 கிலோ விற்பனைக்கு வருகிறது. மழையால் பழங்கள் சேதம் அடைந்ததால் காய்களாக பறித்து அனுப்பப்படுகிறது என்றார்.
உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ.70, கத்தரிக்காய் ரூ.75, வெண்டைக்காய் ரூ.60, சின்ன வெங்காயம் ரூ.48, பெரிய வெங்காயம் ரூ.42, முருங்கைக்காய் ரூ.95, பச்சை மிளகாய் ரூ.40 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை கடந்த 2 வாரங்களில் 2 மடங்காக விலை அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் காய்கறிகள் வாங்கும் அளவை குறைத்து இருக்கின்றனர். மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100, கத்தரிக்காய் ரூ.120, வெண்டைக்காய் ரூ.120, சின்ன வெங்காயம் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.60, முருங்கைக்காய் ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற மலைக்காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. சமவெளி பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் நீலகிரிக்கு சரக்கு வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. சமீப நாட்களாக சமவெளி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் விளைநிலங்களில் காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் ஊட்டிக்கு காய்கறி வரத்து வெகுவாக குறைந்ததால் சமவெளி காய்கறிகள் விலை கிடு, கிடு என உயர்ந்து வருகிறது. ஊட்டி உழவர் சந்தையில் நேற்று காலை பொதுமக்கள் காய்கறிகளை வாங்க வந்தனர். அங்கு கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த தக்காளி பழமாக இல்லாமல் காயாக இருந்தது. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, தினமும் உழவர் சந்தைக்கு கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து 2,200 கிலோ தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படும். தொடர் மழை காரணமாக 1,700 கிலோ விற்பனைக்கு வருகிறது. மழையால் பழங்கள் சேதம் அடைந்ததால் காய்களாக பறித்து அனுப்பப்படுகிறது என்றார்.
உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ.70, கத்தரிக்காய் ரூ.75, வெண்டைக்காய் ரூ.60, சின்ன வெங்காயம் ரூ.48, பெரிய வெங்காயம் ரூ.42, முருங்கைக்காய் ரூ.95, பச்சை மிளகாய் ரூ.40 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை கடந்த 2 வாரங்களில் 2 மடங்காக விலை அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் காய்கறிகள் வாங்கும் அளவை குறைத்து இருக்கின்றனர். மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100, கத்தரிக்காய் ரூ.120, வெண்டைக்காய் ரூ.120, சின்ன வெங்காயம் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.60, முருங்கைக்காய் ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திருக்குவளையில் குளத்தில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
பரமக்குடி ஆரியநேந்தல் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகன் இருளன்சேதுபதி (வயது 19). இவர் திருக்குவளையில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து இருளன்சேதுபதி மற்றும் அவரது நண்பர்களான நவீன்வரதன், கவுசிக்ராஜன், நிஷாந்த், கோகுல்ராஜன், கோகுல் ஆகியோருடன் திருக்குவளையில் உள்ள தியாகராஜ சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளனர்.
பின்னர் அங்கு உள்ள குளத்தில் நவீன்வரதன், கவுசிக்ராஜன், இருளன்சேதுபதி ஆகிய 3 பேரும் குளித்துள்ளனர். அப்போது திடீரென இருளன்சேதுபதி தண்ணீரில் மூழ்கி மாயமானார். உடனே அருகில் இருந்தவர்கள் குளத்தில் இறங்கி தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த தலைஞாயிறு தீயணைப்பு வீரர்கள், திருக்குவளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் இறங்கி இருளன் சேதுபதியின் உடலை மீட்டனர்.
பின்னர் உடலை நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமக்குடி ஆரியநேந்தல் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகன் இருளன்சேதுபதி (வயது 19). இவர் திருக்குவளையில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து இருளன்சேதுபதி மற்றும் அவரது நண்பர்களான நவீன்வரதன், கவுசிக்ராஜன், நிஷாந்த், கோகுல்ராஜன், கோகுல் ஆகியோருடன் திருக்குவளையில் உள்ள தியாகராஜ சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளனர்.
பின்னர் அங்கு உள்ள குளத்தில் நவீன்வரதன், கவுசிக்ராஜன், இருளன்சேதுபதி ஆகிய 3 பேரும் குளித்துள்ளனர். அப்போது திடீரென இருளன்சேதுபதி தண்ணீரில் மூழ்கி மாயமானார். உடனே அருகில் இருந்தவர்கள் குளத்தில் இறங்கி தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த தலைஞாயிறு தீயணைப்பு வீரர்கள், திருக்குவளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் இறங்கி இருளன் சேதுபதியின் உடலை மீட்டனர்.
பின்னர் உடலை நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளான அருவங்காடு, எல்லநள்ளி, பாய்ஸ் கம்பெனி, பர்லியார் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்தமழை பெய்து வருகிறது.
ஊட்டி:
வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண்சரிவு, மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதவிர சில வீடுகளும் சேதம் அடைந்தன.
தொடர் மழையால் ஆறுகள், நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தொடர்ந்து நேற்று இரவில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் இன்று காலை முதல் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.
ஊட்டி மஞ்சனக்கொரை அருகேயுள்ள அன்பு அண்ணா காலனியில், ஏராளாமான மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் கூலி வேலைக்கு சென்று தங்கள் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக இந்த பகுதியையொட்டி நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த பகுதியில் உள்ள சில வீடுகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றன. சில வீடுகளின் சுவர்களில் விரிசலும் விழுந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே உள்ளே வசித்து வருகிறார்கள்.
உடனடியாக இதற்கு ஒரு நிரந்த தீர்வு காண வேண்டும் என்றும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளான அருவங்காடு, எல்லநள்ளி, பாய்ஸ் கம்பெனி, பர்லியார் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்தமழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றோரங்களில் மேய்ச்சலுக்காக விடப்படும் கால்நடைகள் தண்ணீரில் அடித்து செல்லப்படும் நிலை உள்ளது.
கோவை மாநகர் பகுதிகளான பாப்பநாயக்கன் பாளையம், காந்திபுரம், ராமநாதபுரம், ரெயில்நிலை உள்ளிட்ட பல இடங்களிலும் நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால், மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மண்சரிவு, மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதவிர சில வீடுகளும் சேதம் அடைந்தன.
தொடர் மழையால் ஆறுகள், நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தொடர்ந்து நேற்று இரவில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் இன்று காலை முதல் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.
ஊட்டி மஞ்சனக்கொரை அருகேயுள்ள அன்பு அண்ணா காலனியில், ஏராளாமான மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் கூலி வேலைக்கு சென்று தங்கள் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக இந்த பகுதியையொட்டி நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த பகுதியில் உள்ள சில வீடுகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றன. சில வீடுகளின் சுவர்களில் விரிசலும் விழுந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே உள்ளே வசித்து வருகிறார்கள்.
உடனடியாக இதற்கு ஒரு நிரந்த தீர்வு காண வேண்டும் என்றும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளான அருவங்காடு, எல்லநள்ளி, பாய்ஸ் கம்பெனி, பர்லியார் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்தமழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றோரங்களில் மேய்ச்சலுக்காக விடப்படும் கால்நடைகள் தண்ணீரில் அடித்து செல்லப்படும் நிலை உள்ளது.
கோவை மாநகர் பகுதிகளான பாப்பநாயக்கன் பாளையம், காந்திபுரம், ராமநாதபுரம், ரெயில்நிலை உள்ளிட்ட பல இடங்களிலும் நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது. இந்த திடீர் மழையால், மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
தொடர்ந்து பெய்த மழையால் 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்களில் பயிர்கள், 526 ஹெக்டேர் தோட்டப்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகில் கரையை கடந்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது.
சென்னையில் பல வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. சாலைகளிலும், தெருக்களிலும் மழை வெள்ளம் ஆறுபோல ஓடியது. டெல்டா பகுதிகளில் பயிர்கள் மழை வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டன.
மேலும் தொடர்ந்து பெய்த மழையால், தென் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதில், அக்டோபர் மாதத்தில் பெய்யும் சராசரி மழை அளவைவிட கூடுதலாக 52 சதவீத மழையும், நவம்பரில் பெய்யும் மழை அளவைவிட 49 சதவீதம் கூடுதலாகவும் மழை பெய்துள்ளது. இதனால் 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்களில் பயிர்கள், 526 ஹெக்டேர் தோட்டப்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும், மழையால் 54 பேர் மரணமடைந்துவிட்டனர். 9,600 குடிசைகளும், 2,100 வீடுகளும் சேதமடைந்துள்ளன. எனவே உடனடி நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.550 கோடியும், முழுமையான நிவாரணமாக ரூ.2,079 கோடியும் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய மந்திரி அமித்ஷாவும் தொலைபேசியில் பேசி வெள்ள நிலைமை பற்றி கேட்டறிந்தார்.
அதையடுத்து, தமிழகத்தில் சேதங்களை நேரடியாக பார்வையிட உடனடியாக மத்திய குழுவை அனுப்பி வைப்பதாகவும், அதன் பிறகு தாக்கல் செய்யப்படும் அறிக்கையின் அடிப்படையில் பேரிடர் நிதி ஒதுக்கப்படும் என்றும் மத்திய மந்திரி அமித்ஷா உறுதி அளித்தார்.
அதன்படி, நேற்று முன்தினம் மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்த மத்திய குழு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ராஜீவ் சர்மா தவிர, மத்திய நிதித்துறை செலவின பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல், மத்திய வேளாண்மைத்துறை (ஐ.டி.) பிரிவு இயக்குநர் விஜய் ராஜ்மோகன், சென்னையில் உள்ள மத்திய நீர்வள அமைச்சகத்தின் நீர் ஆணையத்தின் இயக்குநர் ஆர்.தங்கமணி, டெல்லியில் உள்ள மத்திய எரிசக்தித்துறை உதவி இயக்குநர் பாவ்யா பாண்டே, சென்னையில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மண்டல அதிகாரி ரணஞ்ஜெய் சிங், மத்திய ஊரக வளர்ச்சித்துறை சார்பு செயலர் எம்.வி.என்.வரப்பிரசாத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகில் கரையை கடந்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது.
சென்னையில் பல வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. சாலைகளிலும், தெருக்களிலும் மழை வெள்ளம் ஆறுபோல ஓடியது. டெல்டா பகுதிகளில் பயிர்கள் மழை வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டன.
மேலும் தொடர்ந்து பெய்த மழையால், தென் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். அந்த குழு அளித்த அறிக்கையின்படி மத்திய அரசுக்கான கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டது. அந்த கோரிக்கை மனுவை டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம், பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு வழங்கினார்.

அதில், அக்டோபர் மாதத்தில் பெய்யும் சராசரி மழை அளவைவிட கூடுதலாக 52 சதவீத மழையும், நவம்பரில் பெய்யும் மழை அளவைவிட 49 சதவீதம் கூடுதலாகவும் மழை பெய்துள்ளது. இதனால் 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்களில் பயிர்கள், 526 ஹெக்டேர் தோட்டப்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும், மழையால் 54 பேர் மரணமடைந்துவிட்டனர். 9,600 குடிசைகளும், 2,100 வீடுகளும் சேதமடைந்துள்ளன. எனவே உடனடி நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.550 கோடியும், முழுமையான நிவாரணமாக ரூ.2,079 கோடியும் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய மந்திரி அமித்ஷாவும் தொலைபேசியில் பேசி வெள்ள நிலைமை பற்றி கேட்டறிந்தார்.
அதையடுத்து, தமிழகத்தில் சேதங்களை நேரடியாக பார்வையிட உடனடியாக மத்திய குழுவை அனுப்பி வைப்பதாகவும், அதன் பிறகு தாக்கல் செய்யப்படும் அறிக்கையின் அடிப்படையில் பேரிடர் நிதி ஒதுக்கப்படும் என்றும் மத்திய மந்திரி அமித்ஷா உறுதி அளித்தார்.
அதன்படி, நேற்று முன்தினம் மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்த மத்திய குழு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ராஜீவ் சர்மா தவிர, மத்திய நிதித்துறை செலவின பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல், மத்திய வேளாண்மைத்துறை (ஐ.டி.) பிரிவு இயக்குநர் விஜய் ராஜ்மோகன், சென்னையில் உள்ள மத்திய நீர்வள அமைச்சகத்தின் நீர் ஆணையத்தின் இயக்குநர் ஆர்.தங்கமணி, டெல்லியில் உள்ள மத்திய எரிசக்தித்துறை உதவி இயக்குநர் பாவ்யா பாண்டே, சென்னையில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மண்டல அதிகாரி ரணஞ்ஜெய் சிங், மத்திய ஊரக வளர்ச்சித்துறை சார்பு செயலர் எம்.வி.என்.வரப்பிரசாத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நாளை சென்னைக்கு வரும் இக்குழுவினர், முதலில் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகளை சந்திக்கின்றனர். அதன்பின், சில குழுக்களாக பிரிந்து மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு திரும்பியதும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து பேசுவார்கள்.
இதையும் படியுங்கள்...புதுவையில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரியில் தொடர் மழையால் மின்கம்பங்கள் சேதமடைந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆங்காங்கே சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
ஊட்டி:
வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இந்த மழையால் எல்ஹில் கமரன் நகர் பகுதியில் வீடுகளை ஒட்டி மண்சரிவு ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் மண் சரிவு காரணமாக அந்த பகுதியில் 5 வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. காந்தல் புதுநகரில் தடுப்புசுவர் இடிந்து வீடு சேதமானது.
படகு இல்ல சாலையில் இருந்த தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் சாலையோரம் இருந்த குடிநீர் ஏ.டி.எம் எந்திரம் உள்ளிட்டவை சேதம் அடைந்தன. நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் ஊட்டி எல்ஹில், காந்தல் உள்ளிட்ட பல இடங்களில் மொத்தம் 12-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
அந்த பகுதிகளில் வசித்த மக்கள் அருகே உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை வருவாய்த்துறையினர் செய்து கொடுத்தனர். மேலும் வீடுகள் இடியும் நிலையில் வசிப்பவர்கள் பாதுகாப்பு இல்லாத நிலையில் இருப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு வந்து தங்கி கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி- புதுமந்து சாலை, ஆடாசோலை, கீழ் கவ்வட்டி, எல்ஹில் வண்டிச்சோலை, அணிக்கொரை, எப்பநாடு, துனேரி, முத்தோரை பாலாடா, கேத்தி உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டு சாலையில் விழுந்தன.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மண்சரிவுகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
தொடர் மழையால் மின்கம்பங்கள் சேதமடைந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆங்காங்கே சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அதனை உடனுக்குடன் தீயணைப்பு துறையினர் அகற்றினர்.
இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இந்த மழையால் எல்ஹில் கமரன் நகர் பகுதியில் வீடுகளை ஒட்டி மண்சரிவு ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் மண் சரிவு காரணமாக அந்த பகுதியில் 5 வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. காந்தல் புதுநகரில் தடுப்புசுவர் இடிந்து வீடு சேதமானது.
படகு இல்ல சாலையில் இருந்த தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் சாலையோரம் இருந்த குடிநீர் ஏ.டி.எம் எந்திரம் உள்ளிட்டவை சேதம் அடைந்தன. நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் ஊட்டி எல்ஹில், காந்தல் உள்ளிட்ட பல இடங்களில் மொத்தம் 12-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
அந்த பகுதிகளில் வசித்த மக்கள் அருகே உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை வருவாய்த்துறையினர் செய்து கொடுத்தனர். மேலும் வீடுகள் இடியும் நிலையில் வசிப்பவர்கள் பாதுகாப்பு இல்லாத நிலையில் இருப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு வந்து தங்கி கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி- புதுமந்து சாலை, ஆடாசோலை, கீழ் கவ்வட்டி, எல்ஹில் வண்டிச்சோலை, அணிக்கொரை, எப்பநாடு, துனேரி, முத்தோரை பாலாடா, கேத்தி உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டு சாலையில் விழுந்தன.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மண்சரிவுகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
தொடர் மழையால் மின்கம்பங்கள் சேதமடைந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆங்காங்கே சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அதனை உடனுக்குடன் தீயணைப்பு துறையினர் அகற்றினர்.
இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் நடத்தும் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
புதுடெல்லி:
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர்மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தார். போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து போராட்டம் நடத்தும் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர். இது தங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என கொண்டாடி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்காக ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் தியாகத்திற்கு பலன் கிடைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
குருநானக் ஜெயந்தி கொண்டாடும் இந்த வேளையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் மார்க்கெட்டில் உள்ள 50 கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வியாபாரிகளும், விவசாயிகளும் மிகவும் அவதியடைந்தனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை கோத்தகிரி பகுதிகளில் வெயில் அடித்தது. மதியத்திற்கு பிறகு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மப்பும், மந்தாரமாக காணப்பட்டது. மாலை 3 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை பலத்த காற்று, இடி, மின்னலுடன் பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. இதனால் கோத்தகிரி பஸ் நிலைய சாலை, குன்னூர் சாலை, பஸ் நிலைய பகுதி, மார்க்கெட் பகுதி களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சோலூர் மட்டம், கட்டபெட்டு, கொடநாடு, அரவேணு, தட்டபள்ளம், குஞ்சப்பனை நகர் மற்றும் கிராம பகுதிகளிலும் பெய்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.
தொடர்ந்து பெய்த மழை காரணமாக டானிங்டன் கரும்பாலம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கேத்தின் நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
ஊட்டி, காந்தல் சுற்று வட்டார பகுதிகளிலும் மாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக சேரிங்கிராஸ், கூட்செட், லோயர் பஜார், மத்திய பஸ் நிலைய பகுதி சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. சில இடங்களில் கழிவு நீரும் மழைநீருடன் கலந்து தெருக்களில் ஓடியதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் மார்க்கெட்டில் உள்ள 50 கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வியாபாரிகளும், விவசாயிகளும் மிகவும் அவதியடைந்தனர்.
தொடர் மழைக்கு ஊட்டி படகு இல்ல சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் வெள்ளம் தேங்கியதால் அந்த வழியாக போக்குவரத்து இயக்கம் நிறுத்தப்பட்டது. 2 கார்கள் வெள்ளத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. இதேபோல் தாவரவியல் பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதனை பொதுமக்கள் கயிறு கட்டி மீட்டனர்.
இடி, மின்னலுடன் பெய்த மழை காரணமாக ஊட்டி கோடப்பமந்து கால்வாயில் வெள்ளம் பெருக்கு அதிகரித்து தண்ணீர் அதிகளவில் சென்றது.
காந்தல் பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளிலும், பென்னட் பகுதிகளில் 10-க்கும் அதிகமான வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் விடிய, விடிய தூங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். ஊட்டி- புதுமந்து சாலை மற்றும் வண்டிச்சோலை பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு வீடும் இடிந்து விழுந்தது. ஊட்டி காந்தல் புதுநகரில் தடுப்புசுவர் இடிந்து 2 வீடுகள் மீது விழுந்தது. இதில் 8 பேர் மாட்டி கொண்டு வெளியில் வர முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி 8 பேரையும் காயமின்றி பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து இன்றும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் பழமையான மரங்கள் முறிந்து விழவும், சாலைகளில் மண்சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளான மஞ்சூர், குந்தா, குன்னூர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, கருமத்தம்பட்டி, சோமனூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், மாநகர் பகுதிகளான பாப்பநாயக்கன் பாளையம், காந்திபுரம், டவுன்ஹால் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இரவு முதல் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது.
இந்த மழை காரணமாக வடகோவை மேம்பாலம், அவினாசி ரோடு மேம்பாலம், லங்கா கார்னர் பாலம் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆறுமுக கவுண்டனூர் பகுதியில் உள்ள 30 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததுடன் சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர். அரசு ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கியதால் நோயாளிகள் சிரமம் அடைந்தனர். கோவை மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் நின்றிருந்த 50 ஆண்டு பழமையான மரம் முறிந்து விழுந்ததில் அந்த பகுதியில் 4 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை கோத்தகிரி பகுதிகளில் வெயில் அடித்தது. மதியத்திற்கு பிறகு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மப்பும், மந்தாரமாக காணப்பட்டது. மாலை 3 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை பலத்த காற்று, இடி, மின்னலுடன் பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. இதனால் கோத்தகிரி பஸ் நிலைய சாலை, குன்னூர் சாலை, பஸ் நிலைய பகுதி, மார்க்கெட் பகுதி களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சோலூர் மட்டம், கட்டபெட்டு, கொடநாடு, அரவேணு, தட்டபள்ளம், குஞ்சப்பனை நகர் மற்றும் கிராம பகுதிகளிலும் பெய்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.
தொடர்ந்து பெய்த மழை காரணமாக டானிங்டன் கரும்பாலம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கேத்தின் நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
ஊட்டி, காந்தல் சுற்று வட்டார பகுதிகளிலும் மாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக சேரிங்கிராஸ், கூட்செட், லோயர் பஜார், மத்திய பஸ் நிலைய பகுதி சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. சில இடங்களில் கழிவு நீரும் மழைநீருடன் கலந்து தெருக்களில் ஓடியதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் மார்க்கெட்டில் உள்ள 50 கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வியாபாரிகளும், விவசாயிகளும் மிகவும் அவதியடைந்தனர்.
தொடர் மழைக்கு ஊட்டி படகு இல்ல சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் வெள்ளம் தேங்கியதால் அந்த வழியாக போக்குவரத்து இயக்கம் நிறுத்தப்பட்டது. 2 கார்கள் வெள்ளத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. இதேபோல் தாவரவியல் பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதனை பொதுமக்கள் கயிறு கட்டி மீட்டனர்.
இடி, மின்னலுடன் பெய்த மழை காரணமாக ஊட்டி கோடப்பமந்து கால்வாயில் வெள்ளம் பெருக்கு அதிகரித்து தண்ணீர் அதிகளவில் சென்றது.
காந்தல் பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளிலும், பென்னட் பகுதிகளில் 10-க்கும் அதிகமான வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் விடிய, விடிய தூங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். ஊட்டி- புதுமந்து சாலை மற்றும் வண்டிச்சோலை பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு வீடும் இடிந்து விழுந்தது. ஊட்டி காந்தல் புதுநகரில் தடுப்புசுவர் இடிந்து 2 வீடுகள் மீது விழுந்தது. இதில் 8 பேர் மாட்டி கொண்டு வெளியில் வர முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி 8 பேரையும் காயமின்றி பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து இன்றும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் பழமையான மரங்கள் முறிந்து விழவும், சாலைகளில் மண்சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளான மஞ்சூர், குந்தா, குன்னூர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, கருமத்தம்பட்டி, சோமனூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், மாநகர் பகுதிகளான பாப்பநாயக்கன் பாளையம், காந்திபுரம், டவுன்ஹால் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இரவு முதல் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது.
இந்த மழை காரணமாக வடகோவை மேம்பாலம், அவினாசி ரோடு மேம்பாலம், லங்கா கார்னர் பாலம் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆறுமுக கவுண்டனூர் பகுதியில் உள்ள 30 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததுடன் சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர். அரசு ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கியதால் நோயாளிகள் சிரமம் அடைந்தனர். கோவை மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் நின்றிருந்த 50 ஆண்டு பழமையான மரம் முறிந்து விழுந்ததில் அந்த பகுதியில் 4 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.






