என் மலர்tooltip icon

    நீலகிரி

    • 5 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

     ஊட்டி:

    ஊட்டி நகரில் அரசு தலைமை மருத்துவமனை, மத்திய பஸ் நிலையம் ஆகிய இடங்கள் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 5 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    காலையில் இட்லி, சாம்பார், மதியம் தயிர் சாப்பாடு, எலுமிச்சை சாப்பாடு, கலவை சோறு ஆகியவை வழங்கப்படுகின்றன. ரூ.1 முதல் 5 ரூபாய் வரை‌யில் உணவுகள் கிடைப்பதால் ஏழை உழைப்பாளர்கள் மற்றும் நகரங்களில் வறிய நிலையில் உள்ள மக்கள் உணவருந்திச் செல்கின்றனர்.

    இந்த நிலையில் உதகை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் நகரசபை தலைவி வாணீஸ்வரி, ஆணையாளர் காந்தி ராஜ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்ஆகொண்டனர். வருகை பதிவேடுகள், தினசரி குறிப்புகள் மற்றும் தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    எனது குப்பை எனது பொறுப்பு ஊட்டி நகராட்சி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நகரசபை தலைவி வாணீஸ்வரி, ஆணையாளர் காந்திராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைததனர். தொடர்ந்து தூய்மை பணிகள் நடந்தன.

    • மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்பு

     ஊட்டி:

    ஊட்டியில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 9 -ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை பிரம்ம கலச பூஜை மற்றும் பரிகார கலச பூஜையும், மாலையில் சந்தியா தீபாராதனை, அதிவாச ஹோமம், பகவதி சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நேற்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரை 300 கலச பூஜை, கலச அபிஷேகம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் 12 மணிக்கு நடைபெற்றது.

    இதில் கேரள மாநிலம், தீயன்னூா் கோவில் தந்திரி முரளிதரன் நம்பூதிரி, ஊட்டி அய்யப்பன் கோவில் மேல்சாந்தி கோவிந்தன் நம்பூதிரி ஆகியோா் கலந்துகொண்டு கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா்.

    மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.அத்தாழ பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று நடந்தன. நடைபெறுகின்றன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவா் ஜெயராம் தாஸ், பொதுச் செயலாளா் ராமச்சந்திரன் தலைமையில் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

    • நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரா பகுதியை ஒட்டி அடர்ந்த தேயிலை தோட்டம் உள்ளது.
    • ஊட்டியின் மையப்பகுதியில் கரடி நடமாடியது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரா பகுதியை ஒட்டி அடர்ந்த தேயிலை தோட்டம் உள்ளது.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக வந்த கரடி ஒன்று ஊட்டியின் மையப்பகுதியான புது அக்ரஹாரம் பகுதியில் நடமாடியது பொதுமக்களுக்கு அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த கரடியை கண்டு அங்கிருந்த நாய்கள் பயந்து ஓடின.

    கரடி அங்கும் இங்குமாக சுற்றி திரிந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.

    ஊட்டியின் மையப்பகுதியில் கரடி நடமாடியது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
    • நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

    ஊட்டி,

    ஊட்டி உல்லத்தி ஊராட்சி, அம்மநாடு பழங்குடியினர் கிராமத்தில் 2020-2021ம் ஆண்டின் பசுமை வீடு திட்டத்தின்கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் பழங்குடியின பெண் சாலனி என்பவருக்கு வீடு கட்ட உத்தரவு வழங்கப்பட்டது.

    இந்த பணிகளை கலெக்டர் அம்ரித் கடந்த ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி நேரில் ஆய்வு செய்தார். அப்போது வீடு முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் ஜன்னல் மட்டத்திற்குகட்டப்பட்டு இருந்தது. இதனை விரைவில் கட்டி முடிக்குமாறு பணி மேற்பார்வையாளர் பொன் மொழி என்பவருக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்நிலையில் கலெக்டர் அம்ரித் நேற்று முன் தினம் மீண்டும் நேரில் ஆய்வு செய்தார். அப்போது 6 மாதம் கடந்தும் கூரை மட்ட அளவிற்கு மட்டுமே பணி நடந்திருந்தது.

    இதேபோல் பல்வேறு திட்டப்பணிகளில் முன்னேற்றம் இல்லாமலும். பணிகள் முடிக்கப்படாமலும் மேற்பார்வையாளர் பொன்மொழி அலட்சியமாக இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

    • ஊட்டி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
    • ஒரு அமர்வுக்கு ரூ.1500 மதிப்பூதியம் வழங்கப்படும்.

    ஊட்டி, ஜூன்.11-

    நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக சேர ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இதற்கான விண்ணப்பத்தை ஊட்டி நீதிமன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக சேர விரும்புபவர்கள் போக்குவரத்துத்துறை, தபால், சுகாதாரத்துறை, கல்வி நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

    மேலும் 62 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு, ஊட்டி-643001 என்ற முகவரிக்கு தபால் மூலம் வருகிற 20-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு அமர்வுக்கு ரூ.1500 மதிப்பூதியம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • கூடலூர் அருகே நள்ளிரவில் குடியிருப்புக்குள் யானை புகுந்தது.
    • தெழிலாளி வீட்டை அந்த யானை சேதப்படுத்தியது.

    கூடலூர், ஜூன்.11-

    கூடலூர் தாலுகா நாடுகாணி அருகே பொன்னூர் பகு தியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. தொழிலாளி. இவர் தனது குடும்பத்தினருடன் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது ஊருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று வீடுகளை முற்றுகையிட்டது. தொடர்ந்து சிரஞ்சீவி வீட்டின் பின்பக்க சுவரை உடைத்து சேதப்படுத்தியது. இந்த சமயத்தில் சத்தம்கேட்டு சிரஞ்சீவி குடும்பத்தினர் எழுந்தனர்.

    தொடர்ந்து கூச்ச லிட்டதால் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகு றித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, காட்டு யானை சேதப்படுத்திய வீட்டை சீரமைக்க வனத்துறையினர் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • 10 குழந்தைகள் மையத்தில் சேர்க்கப்பட்டனர்.

    அரவேனு,

    அரவேனு அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கபட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கோத்தகிரி அரவேனு அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் அங்கன்வாடி மையம் இல்லாததால் குழந்தைகளை விட்டுச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி சிரமப்பட்டு வந்தனர்.

    மேலும் தங்கள் கிராமத்தில் அங்கன்வாடி மையம் திறக்க வேண்டும் என கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஜக்கனாரை ஊராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் திறக்க ஜக்கனாரை ஊராட்சி தலைவர் நடவடிக்கை மேற்கொண்டார். இதன்படி நேற்று வாடகை கட்டிடத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு அங்கன்வாடி மேற்பார்வையாளர் சாந்தி தலைமை வகித்தார். கவுன்சிலர் மனோகரன் வரவேற்றார். ஊராட்சித் தலைவர் சுமதி சுரேஷ் அங்கன்வாடி மையத்தைத் திறந்து வைத்தார். அங்கன்வாடி மையம் திறக்கப்பட்ட முதல் நாளில் சுமார் 10 குழந்தைகள் மையத்தில் சேர்க்கப்பட்டனர்.

    மேலும் ஊராட்சி தலைவர் கூறுகையில் விரைவில் வருவாய்த்துறை அல்லது ஊராட்சிக்கு சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு நிரந்தரமான அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர் சபீலா, உதவியாளர் தீபா உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப் பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • குட்டிகளுடன் உலா வந்த கரடி
    • செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூா், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஹில்குரோவ், குரும்பாடி, பா்லியாறு போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான தோட்டங்களில் பலா மரங்களில் பலாப் பழங்கள் விளைந்துள்ளன.

    இவற்றை உண்பதற்காக குன்னூா், மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் அவ்வப்போது யானைகள் வந்து செல்கின்றன.இந்தநிலையில் நேற்று குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பாா்க் பகுதியில் யானைகள் கூட்டம் சாலையைக் கடந்து ரன்னிமேடு வனப் பகுதிக்குள் சென்றது.

    யானைகள் சாலையை கடக்கும் வரை அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. யானைகள் வனப் பகுதிக்குள் சென்றபின் வாகனங்கள் சென்றன. கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன. இநத்நிலையில் கோத்தகிரி அருகே பன்னீர் கிராமத்தில் தேயிலைத் தோட்டத்தில் இரண்டு குட்டியுடன் கரடி ஒன்று உலா வந்தது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். சற்று தொலைவிலேயே கிராம மக்கள் பாதுகாப்பாக நின்று கொண்டு தங்களது செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் குட்டிகளுடன் உலா வரும் கரடிகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
    • கட்டி முடிக்கப்பட்ட 204 வீடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

    ஊட்டி,

    தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ரூ.17.36 கோடி மதிப்பீட்டில், கட்டி முடிக்கப்பட்ட 204 வீடுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

    இதையடுத்து, ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் 4 பயனாளிகளுக்கு தனி குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணையையும், தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் மானியத்துடன் பயனாளிகளே சுயமாக வீடுகட்டும் திட்டத்தின்கீழ் 20 பேருக்கு பணி ஆணையையும் வழங்கினாா்.

    நிகழ்ச்சியில், ஊட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளா் சுதா்ஷன், உதவிப் பொறியாளா் விவேக் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இதற்கிடையே அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தை பசுமையாக்கல் திட்டம் மற்றும் 33 சதவீதம் வனப்பரப்பை உயர்த்தும் திட்டத்தின் கீழ் வருகிற 2030-ம் ஆண்டிற்குள் தமிழகம் முழுவதும் 261 கோடி மரங்கள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக தற்போது வனத்துறை உள்பட அனைத்து துறைகளிலும் சோலை மரக்கன்றுகள் நாற்று உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 2022-23-ம் ஆண்டிற்குள் 2.5 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்படும்.

    சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் வனத்துறை சார்பில் 1.73 கோடி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. மீதமுள்ள நாற்றுகள் மற்ற துறைகளை கொண்டு உற்பத்தி செய்து நடவு செய்யப்படும். மேலும் தமிழகத்தில் 8 இடங்களில் புதிதாக சூழல் சுற்றுலா உருவாக்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் புதிதாக காட்சி கோபுரம், அலங்கார நடைபாதைகள் அமைக்க ப்படும். லாங்வுட் சோலை பகுதியில் வன ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மழை கொட்டித்தீர்த்தது.
    • ரெயில்வே சுரங்கப்பாதையில் ஆட்டோ சிக்கியது

    ஊட்டி:

    கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கேரளாவை ஒட்டிய மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்கிறது.

    இந்தநிலையில் இன்று மதியம் ஊட்டியில் கருமேகங்கள் திரண்டு திடீரென மழை பெய்தது. மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாவட்டம் முழுவதும் மழை கொட்டித்தீர்த்தது.

    சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பஸ்நிலையம், மார்க்கெட் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து நின்றது. மழை காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. ஊட்டிக்கு சுற்றுலா வந்த சுற்றுலாபயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    பஸ்நிலையத்தில் இருந்து படகு இல்லம் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் ஆட்டோ ஒன்று சிக்கியது. ஆட்டோவில் 5 பேர் இருந்தனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

    • ஊட்டியில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது.
    • நாளை காலை 11.20 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

    ஊட்டி:

    ஊட்டி அரசு ஆஸ்பத்திரி செல்லும் வழியில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 6 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சந்தியா தீபாராதனை, பிரசாத சுத்தி, அஸ்திர கலச பூஜை, அத்தாள பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் இன்று காலையில் பிரம்ம கலச பூஜை, பரிவார கலச பூஜை, மாலையில் சந்தியா தீபாராதனை, அதிவாச ஹோமம், பகவதி சேவை நிகழ்ச்சி நடந்தது.

    நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணி வரை 300 கலச பூஜை, கலச அபிஷேகம் நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் காலை 11.20 மணி முதல் 12 மணிக்குள் நடக்கிறது.

    இதில் கேரள மாநிலம் தீயன்னூர் கோவில் தந்திரி முரளிதரன நம்பூதிரி, ஊட்டி அய்யப்பன் கோவில் மேல்சாநதி கோவிந்தன் நம்பூதிரி ஆகியோர் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்.

    மாலை 6 மணிக்கு கொடியேற்றமும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றம், அத்தாள பூஜையும் நடக்கின்றன. நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 16-ந் தேதி வரை தினமும் உற்சவ நிகழ்ச்சியும் நடக்கிறது. 

    • குன்னூர் பகுதியில் பலாப்பழங்களை ருசிக்க யானைகள் முகாமிட்டுள்ளன.
    • யானைகள் விளையாடி மகிழ்வது சுற்றுலாபயணிகளை கவர்ந்துள்ளது.

    ஊட்டி, ஜூன்.10-

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது வன விலங்குகள், வனத்தில் இருந்து வெளியேறி பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. கூடலூர், குன்னூர் பகுதிகளில் யானைகள் மற்றும் கரடிகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    தற்போது பலாப்பழ சீசன் நடப்பதால் யானைகள் பலாப்பழத்தின் வாசனை அறிந்து அவற்றை தேடி வந்து உட்கொள்கின்றன. குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அதிகளவில் பலா மரங்கள் உள்ளன. இவற்றில் காய்த்து தொங்கும் பலாப்பழங்களை ருசிக்க யானைகள் முகாமிட்டுள்ளன. குட்டியுடன் முகாமிட்டுள்ள யானைகள் கே.என்.ஆர். மற்றும் புதுக்காடு பகுதியில் சுற்றித்திரிகின்றன.

    சாலையை ஒட்டியுள்ள மண்மேட்டில் புரண்டு அந்த யானைகள் உற்சாகத்தில் திளைக்கின்றன. மேலும் ஒரு யானையை மற்றொரு யானை விரட்டியும் விளையாடிய படி உள்ளன. இந்த காட்சிகளை சுற்றுலாபயணிகள் ரசித்தபடி பார்த்து செல்கிறார்கள்.

    அவ்வப்போது அந்த யானைகள் சாலையையும் கடந்து வந்து விடுகின்றன. எனவே வாகன ஓட்டிகள் அந்த சாலையை கவனத்துடன் கடக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் சுற்றுலாபயணிகள் ஆர்வத்தில் செல்போனில் படம் பிடிப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம், யானைகளுக்கு தொந்தரவு அளிக்க வேண்டாம் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ×