search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் இன்று இடி-மின்னலுடன் கனமழை
    X

    ஊட்டியில் இன்று இடி-மின்னலுடன் கனமழை

    • மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மழை கொட்டித்தீர்த்தது.
    • ரெயில்வே சுரங்கப்பாதையில் ஆட்டோ சிக்கியது

    ஊட்டி:

    கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கேரளாவை ஒட்டிய மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்கிறது.

    இந்தநிலையில் இன்று மதியம் ஊட்டியில் கருமேகங்கள் திரண்டு திடீரென மழை பெய்தது. மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாவட்டம் முழுவதும் மழை கொட்டித்தீர்த்தது.

    சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பஸ்நிலையம், மார்க்கெட் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து நின்றது. மழை காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. ஊட்டிக்கு சுற்றுலா வந்த சுற்றுலாபயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    பஸ்நிலையத்தில் இருந்து படகு இல்லம் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் ஆட்டோ ஒன்று சிக்கியது. ஆட்டோவில் 5 பேர் இருந்தனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    Next Story
    ×