என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஊட்டி அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்
ஊட்டி:
ஊட்டியில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 9 -ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை பிரம்ம கலச பூஜை மற்றும் பரிகார கலச பூஜையும், மாலையில் சந்தியா தீபாராதனை, அதிவாச ஹோமம், பகவதி சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரை 300 கலச பூஜை, கலச அபிஷேகம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் 12 மணிக்கு நடைபெற்றது.
இதில் கேரள மாநிலம், தீயன்னூா் கோவில் தந்திரி முரளிதரன் நம்பூதிரி, ஊட்டி அய்யப்பன் கோவில் மேல்சாந்தி கோவிந்தன் நம்பூதிரி ஆகியோா் கலந்துகொண்டு கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா்.
மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.அத்தாழ பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று நடந்தன. நடைபெறுகின்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவா் ஜெயராம் தாஸ், பொதுச் செயலாளா் ராமச்சந்திரன் தலைமையில் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்