search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி  அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    ஊட்டி அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்

    • மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்பு

    ஊட்டி:

    ஊட்டியில் பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 9 -ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை பிரம்ம கலச பூஜை மற்றும் பரிகார கலச பூஜையும், மாலையில் சந்தியா தீபாராதனை, அதிவாச ஹோமம், பகவதி சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நேற்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரை 300 கலச பூஜை, கலச அபிஷேகம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் 12 மணிக்கு நடைபெற்றது.

    இதில் கேரள மாநிலம், தீயன்னூா் கோவில் தந்திரி முரளிதரன் நம்பூதிரி, ஊட்டி அய்யப்பன் கோவில் மேல்சாந்தி கோவிந்தன் நம்பூதிரி ஆகியோா் கலந்துகொண்டு கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா்.

    மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.அத்தாழ பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று நடந்தன. நடைபெறுகின்றன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவா் ஜெயராம் தாஸ், பொதுச் செயலாளா் ராமச்சந்திரன் தலைமையில் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

    Next Story
    ×