search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephant herd"

    • யானைகள் தேயிலை தோட்டங்களில் உலா வந்து கொண்டிருந்தது.
    • கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியையொட்டி வனப்பகுதிகளில் வனவிலங்குகள் அதிகமாக வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி, ஊருக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. சில நேரங்களில் வீடுகளை சேதப்படுத்துவதுடன், மனிதர்களை தாக்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. இந்நிலையில் நாடு காணி, பொன்னுார் மற்றும் பொன்வயல் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

    இந்த யானைகள் அங்கிருந்து, பாண்டியார் டான்டீ குடியிருப்பு அருகே உள்ள தேயிலை தோட்டங்களில் நேற்று உலா வந்து கொண்டிருந்தது. யானைகள் உலா வருவதை பார்த்த சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து பொது மக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானைகள் நடமாட்டத்தால் வெளியில் வரவே அச்சமாக உள்ளது. எனவே இங்கு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகள் ஊருக்குள் வராதவாறு கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • 3 பேர் சாலையோரம் நின்று தங்களது செல்போனில் ‘செல்பி’ எடுத்து கொண்டிருந்தனர்.
    • அந்த வழியாக கூட்டமாக சென்ற யானைகள் 3 பேரையும் விரட்டி உள்ளன.

    உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் துத்வா புலிகள் சரணாலய பகுதி வழியாக 3 பேர் சென்றுள்ளனர். நேபாளத்திற்கு செல்லும் வழி பாதையான இப்பகுதி வழியாக வன விலங்குகள் கூட்டமாக செல்வது வழக்கம். இந்நிலையில் இவ்வழியாக சென்ற 3 பேர் சாலையோரம் நின்று தங்களது செல்போனில் 'செல்பி' எடுத்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கூட்டமாக சென்ற யானைகள் 3 பேரையும் விரட்டி உள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 3 பேர் தலை தெறிக்க ஓடி உள்ளனர். இதை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் யானைகள் கூட்டமாக செல்லும் போது அவைகளுக்கு இடையூறு விளைவிக்க கூடாது என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இணைய பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • குட்டிகளுடன் உலா வந்த கரடி
    • செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூா், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஹில்குரோவ், குரும்பாடி, பா்லியாறு போன்ற பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான தோட்டங்களில் பலா மரங்களில் பலாப் பழங்கள் விளைந்துள்ளன.

    இவற்றை உண்பதற்காக குன்னூா், மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் அவ்வப்போது யானைகள் வந்து செல்கின்றன.இந்தநிலையில் நேற்று குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பாா்க் பகுதியில் யானைகள் கூட்டம் சாலையைக் கடந்து ரன்னிமேடு வனப் பகுதிக்குள் சென்றது.

    யானைகள் சாலையை கடக்கும் வரை அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. யானைகள் வனப் பகுதிக்குள் சென்றபின் வாகனங்கள் சென்றன. கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன. இநத்நிலையில் கோத்தகிரி அருகே பன்னீர் கிராமத்தில் தேயிலைத் தோட்டத்தில் இரண்டு குட்டியுடன் கரடி ஒன்று உலா வந்தது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். சற்று தொலைவிலேயே கிராம மக்கள் பாதுகாப்பாக நின்று கொண்டு தங்களது செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் குட்டிகளுடன் உலா வரும் கரடிகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×