என் மலர்tooltip icon

    நீலகிரி

    • 150 பயனாளிகளுக்கு உணவுப் பொருள்களுடன் கூடிய மஞ்சப்பைகளை வழங்கப்பட்டது.
    • விசாயிகளுக்கு புதிய அடையாள அட்டைகள், தொழில் முனைவோருக்கு வங்கி கடன் உத்தரவு ஆகியவற்றையும் அமைச்சா் வழங்கினாா்.

    ஊட்டி:

    கூடலூா் பஸ் நிலையம் அருகே வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் புதுப்பொலிவுடன் கூடிய உழவா் சந்தையை வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் திறந்துவைத்து, முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா்.

    பின்னர் அவர் பேசுகையில், உழவா் சந்தை மூலம் இடைத்தரகா் இல்லாமல் விவசாயிகள் தங்களது பண்ணை காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்யவும், அதற்கு சரியான விலையையும் பெறலாம். மேலும், நுகா்வோா் தரமான பொருள்களை வெளிசந்தையை விட குறைந்த விலையில் வாங்க முடியும் என்றாா். இதைத் தொடா்ந்து விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டைகள், தொழில் முனைவோருக்கு வங்கி கடன் உத்தரவு ஆகியவற்றையும் அமைச்சா் வழங்கினாா்.

    மேலும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலநாடு உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு உறுப்பினா்களின் பங்குத் தொகைக்கு, இணை பங்குத் தொகையாக ரூ.5 லட்சம் அரசு மானியத்தையும், முதுமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு ரூ.2.01 லட்சம் மானியமும் வழங்கினாா்.

    பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றாக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக 150 பயனாளிகளுக்கு உணவுப் பொருள்களுடன் கூடிய மஞ்சப்பைகளை வழங்கினாா்.

    தேவாலா பகுதியில் காட்டு யானைகள் தாக்கி வீடுகள் சேதமடைந்த பாதிக்கப்பட்ட நபா்களுக்ககு நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினாா். இதில் கலெக்டர் அம்ரித், மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், கூடலூா் கோட்டாட்சியா் சரவணக்கண்ணன், தோட்டக்கலை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, தோட்டக்கலை உதவி இயக்குநா் விஜியலட்சுமி, நகா்மன்றத் தலைவா் பரிமளா, நகர செயலாளர் இளஞ்செழியன்பாபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • உயிலட்டி, குன்னியட்டி பகுதிகளில் 3 கரடிகள் சுற்றி திரிந்து மக்களை அச்சுறுத்தி வந்தது.
    • வனத் துறையினா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரடியை பிடிப்பதற்காக உயிலட்டி கிராமத்தின் சாலையோரம் கூண்டு வைத்தனர்.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகர், அரவேணு, ஜக்கனாரை, ஆடந்தொரை சாலை, மிளிதேன், உயிலட்டி பகுதிகளில் கடந்த சில தினங்களாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    உயிலட்டி, குன்னியட்டி பகுதிகளில் 3 கரடிகள் சுற்றி திரிந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர்.மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளின் கதவை உடைத்தது. விவசாய நிலங்களில் பயிரிட்டிருந்த பயிர்களையும் சேதப்படுத்தியது.

    இதனால் கரடியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடா்ந்து, வனத் துறையினா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரடியை பிடிப்பதற்காக உயிலட்டி கிராமத்தின் சாலையோரம் கூண்டு வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை வனத்துறையினர் வைத்த கூண்டில், 3 கரடிகளில் 2 கரடிகள் சிக்கி கொண்டது. மற்றொரு கரடி தப்பியோடி விட்டது.பிடிபட்ட 2 கரடிகளையும் வாகனத்தில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு எடுத்து சென்று துணை இயக்குநா், வனக் கால்நடை மருத்துவா், வனச் சரக அலுவலா் முன்னிலையில் அடா்ந்த வனப் பகுதிக்குள் விடப்பட்டன.

    தொடர்ந்து இந்த பகுதியில், சுற்றி திரியும் மற்றொரு கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.மேலும் அந்த கரடியையும் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விடுவதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

    • போலீசாரின் பல முக்கிய ரகசிய விபரங்கள் போலீஸ் நிலைய கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டு இருந்தது.
    • போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் அலியார், ரியாஸ், அப்துல் சமது ஆகிய 3 பேரும் இந்த தகவல்களை திருடியது உறுதியானது.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே உள்ள கரிமன்னூர் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தவர் அனஸ். இவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் குறித்த ரகசிய விபரங்களை போலீஸ் நிலையத்தில் இருந்த கம்ப்யூட்டரில் திருடி பயங்கரவாத தொடர்பில் இருந்த ஒரு இயக்கத்துக்கு கொடுத்ததாக புகார் எழுந்தது.

    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பயங்கரவாத இயக்கத்துக்கு ரகசிய விபரங்களை அனஸ் கொடுத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.

    மூணாறு போலீஸ் நிலையத்தில் இருந்தும் சில முக்கிய ரகசிய விபரங்கள் பயங்கரவாத இயக்கத்துக்கு கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த மூணாறு டி.எஸ்.பி. மனோஜூக்கு அப்போதைய எஸ்.பி. கருப்பசாமி உத்தரவிட்டார். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    போலீசாரின் பல முக்கிய ரகசிய விபரங்கள் போலீஸ் நிலைய கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டு இருந்தது. இதனை கடந்த மே மாதம் 15-ந் தேதி தங்களது செல்போனில் பதிவு செய்ததும் கண்டறியப்பட்டது. அதே போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் அலியார், ரியாஸ், அப்துல் சமது ஆகிய 3 பேரும் இந்த தகவல்களை திருடியது உறுதியானது.

    இதனையடுத்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கம்ப்யூட்டரில் இருந்த ரகசிய விபரங்களை திருடி பயங்கரவாத அமைப்பினருக்கு வழங்கியது உறுதி செய்யப்பட்டது. இதில் அலியார் என்பவர் பல மாதங்களாக முல்லைப்பெரியாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர். எனவே இவர் பெரியாறு அணையின் பாதுகாப்பு ரகசியங்கள் குறுத்தும் பயங்கரவாத அமைப்பினருக்கு வழங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

    3 பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி இடுக்கி மாவட்ட எஸ்.பி.யிடம் டி.எஸ்.பி. மனோஜ் அறிக்கை தாக்கல் செய்தார். இதனையடுத்து 2 பேர் எர்ணாகுளம் மாவட்டத்துக்கும், ஒருவர் கோட்டயம் மாவட்டத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தும் பட்சத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ராட்சத குழாய்களை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • குடிநீர் வினியோகத்தில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

    ஊட்டி:

    கூடலூர் நகராட்சி பகுதியில் சுமார் 1 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஓவேலி பேரூராட்சியில் ஹெலன், ஆத்தூர், பல்மாடி உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டி குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இப்பகுதியில் உள்ள அணைகளில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் கூடலூருக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் கடந்த 2 வாரங்களாக தொடர் கன மழை பெய்தது. இதன் காரணமாக பாண்டியாறு, மாயாறு உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் குடிநீர் திட்ட தடுப்பணைகளிலும் சேறும், சகதியுமான தண்ணீர் அடித்து வரப்பட்டது. குழாய்களில் உடைப்பு இதன் காரணமாக ராட்சத குழாய்களில் பல இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டது.

    தொடர்ந்து ராட்சத குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு வந்தது.

    இதையடுத்து கூடலூர் பகுதியில் மழையின் தாக்கம் பரவலாக குறைந்து விட்டது. இதன் காரணமாக உடைப்பு ஏற்பட்ட ராட்சத குழாய்களை சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கெவிப்பாரா பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி தலைமையில் குடிநீர் ஆய்வாளர் ரமேஷ், கவுன்சிலர் வெண்ணிலா உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் நிலத்தை தோண்டினர்.

    சீரமைப்பு பணி தொடர்ந்து ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணி மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டது. இதேபோல் நகராட்சி பகுதியில் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் ஊழியர்கள் சீரமைப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். எனவே குடிநீர் வினியோகத்தில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • தமிழகத்தில் உள்ள உழவா் சந்தைகள் வேளாண்மை துறையின் மூலம் நிா்வகிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை தோட்டக்கலை துறைக்கு தரவேண்டும்.
    • வளா்ந்து வரும் தோட்டக்கலைத் துறைக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் கூடுதல் இணை இயக்குநா்கள், துணை இயக்குநா்கள் நியமிக்க வேண்டும்

    ஊட்டி:

    தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலா்கள் நலச் சங்க உறுப்பினா்களின் மாநில அளவிலான பொதுக் குழுக் கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

    கூட்டத்தில் வளா்ந்து வரும் தோட்டக்கலைத் துறைக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் கூடுதல் இணை இயக்குநா்கள், துணை இயக்குநா்கள் நியமிக்க வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள உழவா் சந்தைகள் வேளாண்மை துறையின் மூலம் நிா்வகிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை தோட்டக்கலை துறைக்கு தரவேண்டும். நஞ்சில்லா விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக தோட்டக்கலைத் துறையில் அங்கக துறை சான்று என்னும் புதிய பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மக்கும் குப்பைகளைக்கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்க மக்கும் குப்பைகளை பிரிப்பதற்கு எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
    • கிராமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உபதலை ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.

    ஊட்டி:

    உபதலை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் சுமார் 27.25 லட்சம் மதிப்பீட்டில் மக்கும், மக்காத குப்பைகளை பிரிக்க கூடாரம் அமைத்து மக்கும் குப்பைகளைக்கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்க மக்கும் குப்பைகளை பிரிப்பதற்கு எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த எந்திரத்தின் சோதனை ஒட்டம் தொடங்கியது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், உதவியாளர் ஜெயந்தி, தூய்மைபாரத ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், ஊராட்சி செயலாளர் சுரேஷ்குமார், உபதலை ஊராட்சிமன்ற தலைவர் சி.பாக்கியலட்சுமி சிதம்பரம் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    அனைத்து வார்டு உறுப்பினர்களையும் தூய்மை காவலர்களையும் அழைத்து எந்திரத்தை இயக்கி, கிராமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உபதலை ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.

    • வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து, பாரம்பரிய இசைகளை முழங்கி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

    அரவேணு:

    இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றி பெற்றார்.

    இதன் மூலம் பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி, 2-வது பெண் ஜனாதிபதி, மிகவும் இளைய ஜனாதிபதி என பல்வேறு பெருமைகளை திரவுபதி முர்மு பெற்றார்.

    வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பழங்குடியின மக்களும் தங்கள் இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் நாட்டின் மிகப்பெரிய பதவியை அலங்கரிக்க போவதால் அதனை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    அந்த வகையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பழங்குடியின கோத்தர் இன மக்கள் மற்றும் பா.ஜ.க.வினர் காமராஜர் சதுக்கத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து, பாரம்பரிய இசைகளை முழங்கி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

    காமராஜர் சதுக்கத்தில் தொடங்கிய ஊர்வலமானது நேரு பூங்கா வளாகத்தில் உள்ள கோத்தர் பழங்குடியின மக்களின் குல தெய்வ கோவிலான அய்யனோர் அம்மனோர் கோவிலுக்கு சென்றது.

    அங்கு பழங்குடியின மக்கள் வழிபாடு நடத்தினர். பின்னர் அங்கிருந்து அவர்கள் காமராஜர் சதுக்கம், மார்க்கெட் திடல் வழியாக வெற்றி கோஷங்களை எழுப்பியவாறு, ஊர்வலமாக சென்று பஸ் நிலையத்தை அடைந்தனர்.

    மேலும் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை பழங்குடியின மக்கள் மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்முவின், பழங்குடியின வெற்றி தினமாக கொண்டாட உள்ளதாக தெரிவித்தனர். அவருக்கு கிடைத்த வெற்றி எங்கள் பழங்குடியின மக்களின் வெற்றி எனவும் அவர்கள் கூறினர்.

    இதில் நீலகிரி வனவாசி கேந்திர தலைவர் ராஜன், நீலகிரி ஆதிவாசிகள் நலசங்க நிர்வாகி புஷ்பகுமார், புது கோத்தகிரி ஊர்த்தலைவர் சுப்பிரமணி, பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் இட்டக்கல் போஜராஜன், அம்பிகை கணேசன், அன்பரசன், ஹால்தொரை , உதயகுமார், முட்டை கடை முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தின் அருகே காட்டேரி பூங்கா உள்ளது.
    • ரன்னிமேடு ரெயில் நிலையத்திற்கு முப்படைத்தளபதி பெயர் சூட்டுவது தொடர்பாக ரெயில்வே துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் முப்படைத்தளபதி பிபின்ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

    ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தின் அருகே காட்டேரி பூங்கா உள்ளது. இந்த நிலையில் இந்த பூங்காவுக்கு பிபின் ராவத்தின் பெயர் சூட்ட வேண்டும் என்று வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய முன்னாள் துணை தலைவர் வினோத்குமார் பிரதமருக்கு கடிதம் அனுப்பினார்.

    தற்போது இந்த கடிதமானது தோட்டக்கலை இணை இயக்குனருக்கு பரிசீலனைக்காக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி பூங்கா மற்றும் ரன்னிமேடு ரெயில் நிலையத்திற்கு முப்படைத்தளபதி பிபின் ராவத் பெயர் சூட்ட கேட்டிருந்தார்.

    அதன்படி மாநில தோட்டக்கலை கட்டுப்பாட்டில் உள்ள காட்டேரி பூங்காவுக்கு மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின் பெயர் சூட்டுவதற்கு மாநில அரசின் முடிவுக்கு கட்டுப்பட்டு காட்டேரி பூங்காவுக்கு முப்படை தளபதி பிபின் ராவத் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரன்னிமேடு ரெயில் நிலையத்திற்கு முப்படைத்தளபதி பெயர் சூட்டுவது தொடர்பாக ரெயில்வே துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.
    • மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் சாலையோரங்கள் மற்றும் வனப்பகுதிகளில் அரியவகை பழங்களும், மூலிகைகளும் காணப்படுகிறது. இது இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுத்து வருகிறது.

    அந்த வகையில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் சாலையோரங்களில் அதிகளவில் அத்திமரங்கள் உள்ளன. தற்போது இந்த மரங்கள் முழுவதும் அத்திப்பழங்கள் பழுத்து காய்த்து தொங்குகின்றன. இதனை பறித்து கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

    அத்திப்பழம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது என்பதால் அதனை பலரும் வாங்கி சாப்பிட ஆர்வம் காட்டுவார்கள். இதனால் குன்னூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அத்திபழங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பழங்களை வாங்கி சென்று வருகின்றனர்.

    அத்தி மரங்கள் களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும். அத்திப்பழங்கள் 6-8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன.

    அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி, நாட்டு அத்தி. அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும்.

    ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 பழங்கள் கிடைக்கும். கனிகள் கிடைக்கும் கனிகளை உலர வைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம்

    அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது. தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

    உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். இதுதவிர சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றையும் நீக்குகிறது.

    • வேட்டை தடுப்பு களப்பணியாளா்கள் ரோந்து சென்றனா்.
    • உடலில் காயங்களுடன் கிடப்பதைப் பாா்த்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வனச் சரக பகுதியில் கக்கனஹல்லா வேட்டை தடுப்பு முகாம் களப்பணியாளா்கள் நேற்று ரோந்து சென்றனா்.

    வட்டசாலை பகுதியில் சென்றபோது அங்கு சுமாா் 3 மாத பெண் யானை குட்டியின் சடலம் உடலில் காயங்களுடன் கிடப்பதைப் பாா்த்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா். இதுகுறித்து வனத் துறையினா் ஆய்வு நடத்தி வருகின்றனா்.   

    • ரூ.5 கோடி செலவில் அமைகிறது
    • 286 ஏக்கரில் சோலை காடுகள் அமைந்துள்ளன.

    ஊட்டி:

    தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப் பகுதிகளில் சோலைக் காடுகள் காணப்படுகின்றன. தாவரவியல் ரீதியாக, பல்வேறு தனி சிறப்புகளை கொண்ட இந்த மரங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை, வனத் துறை முடுக்கி விட்டுள்ளது.

    வனப் பகுதிகளில் சோலைக் காடுகள் பரப்பளவை அதிகரிப்பது, மரங்கள் வெட்டப்படுவதை தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.அடுத்த கட்டமாக, சோலைக் காடுகள் பாதுகாப்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் 'லாங்வுட்' வனப் பகுதியில், 286 ஏக்கரில் சோலை காடுகள் அமைந்துள்ளன. தனித்துவமான சூழலில், பல்வேறு வகை உள்ளூர் உயிரினங்களை, அக்காடுகள் பாதுகாத்து வருகின்றன.இதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறியும் வகையில், கோத்தகிரியில் சோலை காடுகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 5.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப் பட்ட வரைவு திட்டம், அரசுக்கு அனுப்பப்பட்டது. சோலை காடுகள் குறித்த தகவல் மையம், நூலகம், பதப்படுத்தப்பட்ட அரிய வகை தாவரங்களின் மாதிரிகள் அடங்கிய காட்சிக்கூடம் இங்கு அமைய உள்ளன. வரைவு திட்டத்துக்கு அரசின் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • வேட்டை தடுப்பு களப்பணியாளா்கள் ரோந்து சென்றனா்.
    • உடலில் காயங்களுடன் கிடப்பதைப் பாா்த்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வனச் சரக பகுதியில் கக்கனஹல்லா வேட்டை தடுப்பு முகாம் களப்பணியாளா்கள் நேற்று ரோந்து சென்றனா்.

    வட்டசாலை பகுதியில் சென்றபோது அங்கு சுமாா் 3 மாத பெண் யானை குட்டியின் சடலம் உடலில் காயங்களுடன் கிடப்பதைப் பாா்த்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா். இதுகுறித்து வனத் துறையினா் ஆய்வு நடத்தி வருகின்றனா்.   

    ×