search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kotagiri bear"

    • உயிலட்டி, குன்னியட்டி பகுதிகளில் 3 கரடிகள் சுற்றி திரிந்து மக்களை அச்சுறுத்தி வந்தது.
    • வனத் துறையினா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரடியை பிடிப்பதற்காக உயிலட்டி கிராமத்தின் சாலையோரம் கூண்டு வைத்தனர்.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகர், அரவேணு, ஜக்கனாரை, ஆடந்தொரை சாலை, மிளிதேன், உயிலட்டி பகுதிகளில் கடந்த சில தினங்களாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    உயிலட்டி, குன்னியட்டி பகுதிகளில் 3 கரடிகள் சுற்றி திரிந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர்.மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளின் கதவை உடைத்தது. விவசாய நிலங்களில் பயிரிட்டிருந்த பயிர்களையும் சேதப்படுத்தியது.

    இதனால் கரடியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடா்ந்து, வனத் துறையினா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரடியை பிடிப்பதற்காக உயிலட்டி கிராமத்தின் சாலையோரம் கூண்டு வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை வனத்துறையினர் வைத்த கூண்டில், 3 கரடிகளில் 2 கரடிகள் சிக்கி கொண்டது. மற்றொரு கரடி தப்பியோடி விட்டது.பிடிபட்ட 2 கரடிகளையும் வாகனத்தில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு எடுத்து சென்று துணை இயக்குநா், வனக் கால்நடை மருத்துவா், வனச் சரக அலுவலா் முன்னிலையில் அடா்ந்த வனப் பகுதிக்குள் விடப்பட்டன.

    தொடர்ந்து இந்த பகுதியில், சுற்றி திரியும் மற்றொரு கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.மேலும் அந்த கரடியையும் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விடுவதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

    கோத்தகிரி டானிங்டனில் இன்று அதிகாலை வீட்டின் கேட்டில் கரடியின் தலை சிக்கி கொண்டது. இதனால் அதிகாலையில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கொலக்கம்பை, தூதூர்மட்டம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் உள்ளனர்.

    இன்று அதிகாலை டானிங்டன்னை சேர்ந்த ஜெகநாதன் என்பவரது வீட்டு முன்பு ஒரு பெண் கரடி 2 குட்டிகளுடன் வந்தது. அந்த கரடிகள் கேட் வழியாக வீட்டுக்குள் நுழைந்தது. வீட்டில் இருந்து வெளியேற முயன்ற போது 2 குட்டிகளில் ஒரு கரடி குட்டியின் தலை கேட்டில் சிக்கி கொண்டது.

    தலை வெளியே வராததால் கரடி சத்தம் போட்டது. குட்டி வரமுடியாமல் தவித்ததால் தாய் கரடி மற்றொரு குட்டியுடன் அங்கேயே நின்று கொண்டு இருந்தது.

    கரடியின் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். பின்னர் இது குறித்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அங்கு குட்டியுடன் நின்று கொண்டு இருந்த தாய் கரடியை தீ பந்தம் கொளுத்தி காட்டுக்குள் விரட்டினர். பின்னர் கேட்டில் சிக்கிய குட்டி கரடியை மீட்டு காட்டுக்குள் கொண்டு சென்று விட்டனர்.

    இதனால் அதிகாலையில் டானிங்டன்னில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×