search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the cage"

    • குடிக்காடு கிராமத்தில் பிரத்யேக கூண்டு தயார் செய்து வைத்திருந்தனர்.
    • 2 நாட்களில் அந்த கூண்டில் 20 குரங்குகள் பிடித்து அடைத்து வைக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன் குடிக்காடு கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து காணப்பட்டது.

    வீட்டின் மாடிகளில் காய வைக்கப்பட்ட துணிகள், பொருட்களை தூக்கிக்கொண்டு ஓடியது.

    வீட்டுக்குள் புகுந்து மளிகை பொருட்கள், தின்பண்டங்களை தூக்கி ஓடி தெருவில் வீசி நாசப்படுத்தியது.

    மேலும் வீட்டின் மேற்கூறையில் ஏறி ஓட்டை பிரித்து சேதப்படுத்தியது.

    கடந்த 6 மதங்களாக குரங்குகள் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

    இதையடுத்து கலெக்டர் உத்தரவுப்படி வனத்துறையினர் 2 நாட்களுக்கு முன்பு குரங்க்களை பிடிப்பதற்காக வேங்கைராயன் குடிக்காடு கிராமத்தில் பிரத்யேக கூண்டு தயார் செய்து வைத்திருந்தனர்.

    அந்தக் கூண்டில் பட்டாணி, பொறி உள்ளிட்ட குரங்குகளுக்கு பிடித்த பண்டங்களை வைத்தனர்.

    மேலும் குரங்குகள் பிடிப்பவர்களையும் அழைத்து வந்தனர்.

    இந்த நிலையில் 2 நாட்களில் அந்த கூண்டில் 20 குரங்குகள் பிடித்து அடைத்து வைக்கப்பட்டன.

    இந்த குரங்குகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவதற்கு வனத்துறையினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    தொடர்ந்து அடுத்த கட்டமாகவும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • உயிலட்டி, குன்னியட்டி பகுதிகளில் 3 கரடிகள் சுற்றி திரிந்து மக்களை அச்சுறுத்தி வந்தது.
    • வனத் துறையினா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரடியை பிடிப்பதற்காக உயிலட்டி கிராமத்தின் சாலையோரம் கூண்டு வைத்தனர்.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகர், அரவேணு, ஜக்கனாரை, ஆடந்தொரை சாலை, மிளிதேன், உயிலட்டி பகுதிகளில் கடந்த சில தினங்களாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    உயிலட்டி, குன்னியட்டி பகுதிகளில் 3 கரடிகள் சுற்றி திரிந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர்.மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளின் கதவை உடைத்தது. விவசாய நிலங்களில் பயிரிட்டிருந்த பயிர்களையும் சேதப்படுத்தியது.

    இதனால் கரடியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடா்ந்து, வனத் துறையினா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரடியை பிடிப்பதற்காக உயிலட்டி கிராமத்தின் சாலையோரம் கூண்டு வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை வனத்துறையினர் வைத்த கூண்டில், 3 கரடிகளில் 2 கரடிகள் சிக்கி கொண்டது. மற்றொரு கரடி தப்பியோடி விட்டது.பிடிபட்ட 2 கரடிகளையும் வாகனத்தில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு எடுத்து சென்று துணை இயக்குநா், வனக் கால்நடை மருத்துவா், வனச் சரக அலுவலா் முன்னிலையில் அடா்ந்த வனப் பகுதிக்குள் விடப்பட்டன.

    தொடர்ந்து இந்த பகுதியில், சுற்றி திரியும் மற்றொரு கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.மேலும் அந்த கரடியையும் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விடுவதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

    ×