என் மலர்
நாமக்கல்
- நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று மாவட்ட அவை தலைவர் மணிமாறன் தலைமையில் நாமக்கல்லில் நடந்தது. வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
- நாமக்கல் மாவட்டத்தில் ரூ.140 கோடியில் போதமலைக்கு சாலை அமைக்கின்ற திட்டம், ரூ.190 கோடி மதிப்பில் நாமக்கல் புறவழிச்சாலை திட்டம் என 2 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இது எந்த அரசியல் கட்சியாலும் செய்ய முடியாத திட்டமாக அமைந்து உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று மாவட்ட அவை தலைவர் மணிமாறன் தலைமையில் நாமக்கல்லில் நடந்தது. வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்–போது அவர் கூறியதாவது:-
வருகிற டிசம்பர் மாதம் 17-ந் தேதி சேலத்தில், இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடக்கிறது. அதில் பங்கேற்கும் இளைஞரணி பட்டியல் இறுதி செய்யப்பட்டதில், தமிழகத்திலேயே அதிக அளவில் பெயர் கொடுத்த முதல் 2 மாவட்டங்களில் ஒன்று நாமக்கல், மற்றொன்று சேலம்.
இதையொட்டி வருகிற 18-ந் தேதி காலையில் சேலத்தில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதியம் நாமக்கல் மாவட்டம் வருகை தருகிறார். அன்று மாலை 4 மணிக்கு நாமக்கல் பொம்மைகுட்டைமேடு பகுதியில் நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசுகிறார். இதில் பங்கேற்கும் அனைவரும் வெள்ளை சீருடையில் கலந்து கொள்ள வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் ரூ.140 கோடியில் போதமலைக்கு சாலை அமைக்கின்ற திட்டம், ரூ.190 கோடி மதிப்பில் நாமக்கல் புறவழிச்சாலை திட்டம் என 2 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இது எந்த அரசியல் கட்சியாலும் செய்ய முடியாத திட்டமாக அமைந்து உள்ளது. இந்த திட்டங்களுக்கு விதித்திட்டவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவார்.
மேலும் எருமப்பட்டி, சேந்தமங்கலம், மோகனூர், பரமத்திவேலூர், கபிலர்மலை, நாமக்கல் ஒன்றியங்களை இணைத்து ரூ.750 கோடி மதிப்–பில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை இல்லாத நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார். நாமக்கல் வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பது என்றும், செயல்வீரர்கள் கூட்டத்தில் கிழக்கு மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் இளைஞர்களை பங்கேற்க செய்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை (கிசான் கிரிடிட் கார்டு) விண்ணப்பம் பெறும் முகாம்
- முகாமில் ரூ.1,60,000 வரை வட்டி இல்லா பயிர் கடனுக்கான பரிந்துரை செய்யபடும்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை (கிசான் கிரிடிட் கார்டு) விண்ணப்பம் பெறும் முகாம் பாண்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெற உள்ளது. முகாமில் ரூ.1,60,000 வரை வட்டி இல்லா பயிர் கடனுக்கான பரிந்துரை செய்யபடும். ஆகவே கேசிசி அட்டை இதுவரை பெறாத விவசாயிகள் ஆதார், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம்-1 ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறும் கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.
- சேலத்தில் சீலநாயக் கன்பட்டி, அம்மாப்பேட்டை, ஆத்தூர் மற்றும் திருச்சி, கரூர், நாமக்–கல் மாவட்–டம் என பல மாவட்டங்களில் இந்த கடைகள் செயல்பட்டு வந்தது.
- நாமக்கல் மாவட்டத்தில் 10-க்கும் மேற்–பட்ட கிளை அலு–வ–ல–கங்–கள் மூலம் பணம் வசூல் செய்–யப்–பட்டு உள்–ளது. ஆனால் வாக்–கு–றுதி அளித்–த–படி நகை–களை வழங்–கா–மல் கடை–யின் உரி–மை–யா–ளர் தலை–ம–றை–வாகி விட்–டார். மேலும் கடை–களும் பூட்–டப்–பட்டு உள்ளன.
நாமக்–கல்:
சேலத்தை தலை–மை–யி–ட–மாக கொண்டு எஸ்.விஎஸ் நகைக்–கடை செயல்–பட்டு வந்–தது. இந்த கடை–க–ளின் சார்–பில் வாடிக்–கை–யா–ளர் சேவை மையங்–களை ஆங்–காங்கே தொடங்கி பொது–மக்–க–ளி–டம் இருந்து தீபாவளி சீட்டு, நகை சேமிப்பு திட்டம் , கூடுதல் வட்டி உள்பட பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்து பணம் வசூ–லித்து வந்–த–னர்.
சேலத்தில் சீலநாயக் கன்பட்டி, அம்மாப்பேட்டை, ஆத்தூர் மற்றும் திருச்சி, கரூர், நாமக்–கல் மாவட்–டம் என பல மாவட்டங்களில் இந்த கடைகள் செயல்பட்டு வந்தது. இதன் மூலம் 100 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ள தாக புகார் எழுந்துள்ளது. அதன் உரிமையாளர் சபரி சங்கர் உள்பட நிர்வாகிகள் கடையை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து உரிமையாளர் சபரி சங்கர், மேலாளர் மற்றும் உதவி மேலாளர் ஆகியோர் மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து வருகிறார்கள்.
இந்த நிறுவனத்தில் கிளைகள் நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டிலும் செயல்பட்டு வந்தது. இந்த கடைகள் தற்போது பூட்டப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 10-க்கும் மேற்–பட்ட கிளை அலு–வ–ல–கங்–கள் மூலம் பணம் வசூல் செய்–யப்–பட்டு உள்–ளது. ஆனால் வாக்–கு–றுதி அளித்–த–படி நகை–களை வழங்–கா–மல் கடை–யின் உரி–மை–யா–ளர் தலை–ம–றை–வாகி விட்–டார். மேலும் கடை–களும் பூட்–டப்–பட்டு உள்ளன.
இத–னால் அதிர்ச்சி அடைந்த முத–லீட்–டா–ளர்–கள், நாமக்–கல் மாவட்ட போலீஸ் சூப்–பி–ரண்டு அலு–வ–ல–கத்–தில் புகார் அளித்–த–னர். பின்–னர் அவர்–கள் கூறுகையில், எஸ்.வி.எஸ். நகை கடை உரிமையாளர், வாடிக்–கை–யா–ளர் சேவை மையம் மூலம் நூற்–றுக்–க–ணக்–கான நபர்–க–ளி–டம் இருந்து சுமார் ரூ.50 லட்–சத்–துக்கு மேல் பணத்தை பல்–வேறு கவர்ச்–சி–க–ர–மான திட்–டங்–கள் மூலம் வசூல் செய்–து–விட்டு, பணம் மற்–றும் நகை–களை திருப்பி தரா–மல், மோசடி செய்து விட்டு, கடை–யை–யும் பூட்–டி–விட்டு தலை–ம–றை–வாகி விட்–டார். எனவே போலீ–சார் உரிய நட–வ–டிக்கை எடுத்து எங்–க–ளின் பணத்தை மீட்டு தர வேண்–டும் என்–ற–னர்.
- பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா 2-ம் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா 2-ம் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
கந்த சஷ்டி விழா 2-ம் நாளை முன்னிட்டு பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
அதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், நன்செய் இடையாறு ராஜா சாமி கோவிலில் உள்ள ராஜாசாமி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி கோவில், மோகனூர் பாலசுப்பிரமணிய சாமி கோவில் மற்றும் கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெரு மானுக்கு கந்தசஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் செல்லவேல் புகார் அளித்தார்.
- சசிரேகா, சதீஷ் மற்றும் வெங்கடாஜலபதி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் செல்லவேல் (48). இவர் பேரூர் தி.மு.க. செயலாளராகவும், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலராகவும் உள்ளார். இவருக்கு ராசிபுரம் நகராட்சி 12-வது வார்டு சுயேட்சை கவுன்சிலராக இருக்கும் சசிரேகா, இவரது கணவர் சதீஷ், மாமனார் வெங்கடாஜலபதி ஆகியோர் 2020-ல் அறிமுகமாகினர்.
அப்போது சதீஷ் தான் ஏரியல் டிரோபோடிக்ஸ் என்ற பெயரில் சீன பொருட்களின் மொத்த வியாபாரம், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து சுற்றுலாவிற்கு பயன்படுத்தி வருவதாக செல்லவேலிடம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொழிலில் முதலீடு செய்தால் பாதி விலையில் கார்களை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.
இதை நம்பிய செல்லவேல் கடந்த 2020 டிசம்பர் மாதம் 29-ந்தேதி புதிய சொகுசு காரை வாங்கி தரும்படி சதீஷ், அவரது மனைவி சசிரேகாவிடம் நாமக்கல்லில் ரூ.17.70 லட்சத்தை கொடுத்துள்ளார். மேலும் நேரடியாகவும், வங்கி கணக்கு மூலமும் பல கட்டங்களாக ரூ.2 கோடியே 49 லட்சத்து 40 ஆயிரம் வரை கொடுத்துள்ளார்.
ஆனால் அவர்கள் கூறியபடி காரை பாதி விலையில் வாங்கி தரவில்லை. இதுகுறித்து செல்லவேல் கேட்டபோது தட்டிக்கழித்து வந்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து செல்லவேல் கேட்டு வந்த நிலையில் ரூ.2.50 கோடிக்கு 3 காசோலைகளை அவர்கள் வழங்கினர். அதில் ரூ.1 கோடிக்கான காசோலையை கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி செல்லவேல் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்க தாக்கல் செய்தார். ஆனால் 3 நாட்களில் வங்கி கணக்கில் பணம் இல்லை என திரும்பியது.
இதைதொடர்ந்து சசிரேகா, சதீஷ் மற்றும் வெங்கடாஜலபதி ஆகியோர் பற்றி செல்லவேல் விசாரித்தபோது அவர்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி பலரிடம் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் செல்லவேல் புகார் அளித்தார். அதில் தன்னை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்து பணத்தை வாங்கிய சதீஷ், சசிரேகா மற்றும் வெங்கடாஜலபதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று ராசிபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்று வெளியே வந்த கவுன்சிலர் சசிரேகாவை நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவரிடம் பகல் 11.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தொடர்ந்து 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் அவரை திருப்பி அனுப்பினர்.
செல்லவேல் அளித்த புகார் தொடர்பாக பலமுறை சம்மன் அனுப்பியும், நேரில் சென்று அழைத்தும் சசிரேகா உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளனர். மோசடி தொடர்பாக இதுவரை எந்த ஆவணமும் கிடைக்காத நிலையில் வருகிற 20-ந் தேதி கணவர் சதீஷூடன் சசிரேகா ஆஜராக வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் சசிரேகா, சதீஷ் மற்றும் வெங்கடாஜலபதி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவும் செய்துள்ளனர்.
- பரமத்தி வேலூர் திருவள்ளுவர் சாலையில் எசன்ஸ் கடை வைத்து நடத்தி வருபவர் வெங்கடசாமி (வயது 40).
- கடைக்கு விற்பனைக்கு தேவையான பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் பைகள் பல்வேறு வகையான எசன்ஸ்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை அடுக்கி வைத்திருந்தார். இந்நிலையில் குடோனில் தீ திடீரென தீப்பிடித்து மளமளவென எரிய ஆரம்பித்தது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் திருவள்ளுவர் சாலையில் எசன்ஸ் கடை வைத்து நடத்தி வருபவர் வெங்கடசாமி (வயது 40). இவர் எதிரே உள்ள ஒரு குடோனில் கடைக்கு விற்பனைக்கு தேவையான பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் பைகள் பல்வேறு வகையான எசன்ஸ்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை அடுக்கி வைத்திருந்தார். இந்நிலையில் குடோனில் தீ திடீரென தீப்பிடித்து மளமளவென எரிய ஆரம்பித்தது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
அதேபோல் பொத்தனூர் தேவராய சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (50). இவர் குடும்பத்தினருடன் கூரை வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் அந்தப் பகுதியில் இளைஞர்கள் பட்டாசுகள் ெவடித்துக் கொண்டி ருந்தனர். அப்போது வெடித்த பட்டாசு ஒன்று தீயுடன் கார்த்திகேயனுக்கு சொந்தமான கூரை வீட்டின் மீது விழுந்தது. இதில் கூரைவீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் வேலாயு தம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்து கட்டுப்படுத்தி தீ பக்கத்து வீடுகளுக்கும் பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
- கூட்டுறவு அமைப்புகளின் பங்கு என்னும் முதன்மை மைய கருப்பொருளை அடிப்படையாக கொண்டு இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் நாமக்கல் மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ளது.
- கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, வினாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளது.
நாமக்கல்:
கூட்டுறவுத்துறை சார்பில் 70-வது அனைந்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு என்னும் முதன்மை மைய கருப்பொருளை அடிப்படையாக கொண்டு இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் நாமக்கல் மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ளது.
இது தொடர்பாக மண்டல இணைப்பதிவாளர் செல்வகுமரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.
விழாவின் முதல் நாளான இன்று (14-ந்தேதி) நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் கூட்டுறவு கொடியேற்றி, கூட்டுறவு வார விழா உறுதிமொழி எடுத்துக் கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
2-வது நாளான நாளை (15-ந்தேதி) திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் கூட்டுறவு விற்பனை மேளா நடத்தப்பட உள்ளது. இதேபோல் 16-ந்தேதி ஆர்.பட்டணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் உறுப்பினர் சந்திப்பு முகாம் நடத்தப்படுகிறது.
மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, வினாடி வினா போட்டி நடத்தப்பட உள்ளது. 17-ந்தேதி நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் மருத்துவ முகாம் மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நாமக்கல் வட்டார அலுவலக வளாகத்தில் ரத்ததான முகாம் நடத்தப்பட உள்ளது.
18-ந்தேதி ஆன்றாப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை மருத்துவ முகாம், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நாமக்கல் வட்டார அலுவலக வளாகத்தில் கருத்தரங்கமும், 19-ந்தேதி திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற உள்ளது. விழா நிறைவு நாளான 20-ந்தேதி மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கூட்டுறவு நிர்வாகிகள், பணியாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- நாமக்கல் நகரில் உள்ள துணைமின் நிலைய பகுதியில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
நாமக்கல்:
நாமக்கல் நகரில் உள்ள துணைமின் நிலைய பகுதியில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தம பாளையம், கொண்டி செட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொச வம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, என்.ஜி.ஓ. காலனி, போதுப்பட்டி, வீசானம், சின்னமுதலைப்பட்டி மற்றும் நாமக்கல் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சார வசதி பெறும் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
- பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கபிலர்மலை பாலசுப்பிர மணியசுவாமி கோவில், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமு கக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளை யத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்ட வர், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், நன்செய் இடையாறு ராஜா சுவாமி திருக்கோவில் உள்ள ராஜாசுவாமி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள பாலமுருகன், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி கோவில் மோகனூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் கந்தம்பாளையம் அருணகிரி நாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு கந்தசஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- பழனிசாமி. இவரது மகன் சதீஷ் (வயது 22). மரைன் என்ஜினீயரிங் படித்துள்ளார்.
- இவர் ஓசூரில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள எரையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சதீஷ் (வயது 22). மரைன் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்த சதீஷ் தனது நண்பர்களை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சேலத்துக்கு சென்று விட்டு அங்கிருந்து நேற்று மாலையில் வீடு திரும்பினார்.
சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டகலூர் கேட் அருகே உள்ள வெற்றி நகர் பகுதியில் சதீஷ் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி சதீஷ் மோட்டார்சைக்கிளுடன் சாலைேயாரம் உள்ள கல் மீது விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரகுநாத் (59). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜூலியட் பிரேமலதா(56).
- காலை 10 மணிக்கு புறப்பட்டு காரில் பெங்களூர் நோக்கி சென்றனர். மதியம் 1 மணியளவில் கிருஷ்ணகிரி அருகே ஒரு பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த சுவரின் மீது மோதியது.
நாமக்கல்:
நாமக்கல் பொன்விழா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத் (59). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜூலியட் பிரேமலதா(56).
அரசு பள்ளி ஆசிரியர்
இவர் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் பெங்களூரில் உள்ள தங்கள் மகனைப் பார்ப்பதற்காக கணவன்- மனைவி இருவரும் நாமக்கல்லில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காரில் பெங்களூர் நோக்கி சென்றனர். மதியம் 1 மணியளவில் கிருஷ்ணகிரி அருகே ஒரு பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த சுவரின் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே ஆசிரியை ஜூலியட் பிரேமலதா உயிரிழந்தார். அவரது கணவர் ரகுநாத் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஆசிரியையின் உடல் நாமக்கல் கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலரும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- நாமக்கல்லில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சமுக பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- நாமக்கல் மோகனூர் சாலை அரசினர் தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு நடைபெற்ற பேரணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
நாமக்கல்:
நாமக்கல்லில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சமுக பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் மோகனூர் சாலை அரசினர் தெற்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு நடைபெற்ற பேரணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
கலெக்டர் உமா பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி மோகனூர் சாலை, மணிக்கூண்டு, திருச்சி சாலை, ஸ்டேட் பேங்க், டாக்டர் சங்கரன்சாலை வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.
இதில் சமூக நலத்துறை பணியாளர்கள், செவி லியர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணியாளர்கள், மகளிர் திட்ட பணியாளர்கள், காவல்துறை, பள்ளிக் கல்வித்துறையினர் பங்கேற்று குழந்தை சுயபாதுகாப்பு அளிப்பது, குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது, சமூக ஊடகங்களில் குழந்தைகள் குறித்த ஆபாச பதிவை தவிர்க்க வலியுறுத்தி கோஷமிட்டவாறு விழிப்புணர்வு பதாகை ககளை ஏந்தி சென்றனர்.
இப்பேரணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், தொழிலாளர் உதவி இணை ஆணையர் திருநந்தன், ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






