என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விழா நடைபெறும்.
    • சிறப்பு பாடல், கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.

    நாகப்பட்டினம்:

    கீழ்திசை நாடுகளின் லூர்துநகரம் என அழைக்கப்ப டும் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கும்.

    இந்தாண்டு பெருவிழா நாளை (29-ந்தேதி) கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ், உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோரால் கொடி புனிதம் செய்யப்பட்டு ஊர்வலத்துக்கு பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து ஆலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர், தமிழ் திருப்பலி நடைபெறும்.

    வரும் 30-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம், ஆலயம் மேல் கோயில், கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    வரும் 1-ந்தேதி மாலை சிலுவை பாதையும், 7-ந்தேதி மாலை தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபமும் நடைபெறும் அதை தொடர்ந்து சிறப்பு பாடல் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.

    8-ந்தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் கொண்டா டப்படுகிறது.

    காலை 8 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

    இரவு 8 மணிக்கு பெரிய தேர்பவனி நடக்கிறது. இதன்பின்பு கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம், ஆலய நிர்வாகம், வேளாங்கண்ணி பேரூராட்சி, போலீஸ்துறையினர் செய்து வருகின்றனர்.

    • கடந்த 23-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை விழா தொடங்கியது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி மேலகொத்தமங்கலம் கிராமத்தில் காலபைரவர் கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 23-ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை,மகா சங்கல்பம், கணபதி, நவகிரக, லட்சுமி ஹோமத்துடன் தொடங்கியது.

    கடந்த 24-ம் தேதி வாஸ்து சாந்தி, பிரவேச பலி,அஷ்டபைரவ ஹோமம், அருட்பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

    25-ம் தேதி அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம்,மண்டப பூஜை,காலபைரவர் மூல மந்திர ஹோமம், முதற்கால பூர்ணஹீதி, தீபாரதனை நடைபெற்றது.

    தொடர்ந்து 26-ம் தேதி 2-ம் கால யாகசாலை பூஜை,மண்டப பூஜை,கால பைரவர் மகா மந்திர ஹோமம், காயத்ரி ஹோமம், சோம பூஜை, அஷ்ட பைரவர் சாந்தி ஹோமம், கன்யா பூஜை, வடுகபூஜை, சுமங்கலி பூஜை,லட்சுமி பூஜை,தனபூஜை காலபைரவர் மூலசக்தி ஹோமம் நடைபெற்றது.

    கோ பூஜை,பிம்பசுத்தி,ருத்ர ஹோமத்தை தொடர்ந்து காலை 9 மணியளவில் கடங்கள் புறப்பாடு நடை பெற்று காலை 9.30 மணிக்கு விமானங்கள் மற்றும் கோபுரங்கள் கும்பாபிஷே கமும், தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடை பெற்றது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • காரைக்கால்- தஞ்சாவூர் டெமு ரெயில் திருச்சி ஜங்ஷன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரு வழித்தடத்திலும் இயக்கப்பட உள்ளன.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்த திருவிழாவில் தமிழகம் மற்றும் பல்வேறு வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    அவர்களின் வசதிக்காக கூடுதல் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சில ரெயில்க ளின் சேவைகள் நீட்டிக்கப்பட்டு ள்ளன.

    அவற்றின் விவரம் வருமாறு :-

    காரைக்கால்- தஞ்சாவூர் டெமு ரெயில் (06835) இன்று முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை திருச்சி ஜங்ஷன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி - வேளாங்கண்ணி முன்பதிவில்லா டெமு ரெயில் (06866) திருச்சி ஜங்ஷனில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    வேளாங்கண்ணி- தஞ்சாவூர் முன்பதிவில்லா டெமு ரயில் (06863)வேளாங்கண்ணியில் இருந்து அதிகாலை 3.05 மணிக்கு புறப்பட்டு 5.35 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.

    விழுப்புரம்- நாகப்பட்டினம்- விழுப்புரம் முன்பதிவில்லா டெமு ரயில் (06865/ 06864) இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை, செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரு வழித்தடத்திலும் இயக்கப்பட உள்ளன.

    அதன்படி விழுப்புரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.50 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும்.

    மறு வழித்தடத்தில் நாகப்பட்டி னத்தில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 5.40 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

    நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி முன்பதிவில்லா டெமு ரெயில் (06857/ 06858) (06868/ 06867) நாளை முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை இயக்கப்படுகிறது.

    இதில், வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் (06858) ரெயில் வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினத்தை பிற்பகல் 12.55 மணிக்கு சென்றடையும்.

    மறு வழித்தடத்தில் நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி (06857) ரயில், நாகப்பட்டினத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    இதேபோல, வேளாங்கண்ணி- நாகப்பட்டினம் (06868) ரெயில், வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு, நாகப்பட்டினத்துக்கு பிற்பகல் 2.20 மணிக்கும், நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி ரெயில் (06867) நாகப்பட்டினத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, வேளாங்கண்ணிக்கு பிற்பகல் 3.50 மணிக்கும் சென்றடையும்.

    மேற்கண்ட தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • திட்டச்சேரி பேரூராட்சியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
    • திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்வதற்காக நாகப்பட்டினம் வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகமது ஷா நவாஸ் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நாகப்பட்டினம் தொகுதி சார்ந்த கோரிக்கை மனுவை அளித்தார்.

    அதில் கூறியிப்பதாவது:-

    155 ஆண்டுகள் பழமையான நாகப்பட்டினம் நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும். நாகப்பட்டினம் நகராட்சியில், பாரம்பரிய நகர்மன்ற கட்டடம் பாழடைந்து உள்ளது. தொன்மையான அந்தக் கட்டடத்தை பாதுகாக்கும் வகையில் புனரமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம் நகராட்சி பாரதி மார்க்கெட் மிகவும் பழுதடைந்துள்ளது.

    அதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும். நாகூர் பேருந்து நிலையம் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம் புதிய கடற்கரை மற்றும் நாகூர் சில்லடி கடற்கரையில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

    நாகையில் அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும். நாகையில் தமிழறிஞர் மறைமலை அடிகள் நினைவாக, கலையரங்கம் கட்ட வேண்டும்.

    நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வரும் அவசர சிகிச்சைப் பிரிவை, நாகை மக்களின் நலன்கருதி தொடர்ந்து அங்கேயே இயங்கச் செய்ய வேண்டும்.

    நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை உள்ளது.

    இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.

    நாகப்பட்டினம் சூடாமணி விகாரம் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களை காட்சிப்படுத்தும் வகையில், கீழடி போல் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

    திட்டச்சேரி பேரூராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலை உள்ளது.

    எனவே, அங்கு சிறப்பு கவனம் செலுத்தி, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தை தனி வட்டமாக (தாலுகா) அறிவிக்க வேண்டும்.

    திருச்செங்காட்டங்குடி அருள்மிகு உத்திராபதீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்க வேண்டும்.

    ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உலக நன்மை வேண்டி 18-ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ராஜாளிகாடு பகுதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி, விவசாயம் செழிக்கவும், மக்கள் நோயின்றி வாழ வேண்டி 18-ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.

    முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின், அம்மனுக்கு வெள்ளி அங்கி அணிவித்து, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர், பக்தர்களுக்கு பிரசாத பைகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, அம்பாளுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    கள்ளிமேடு கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கிராம கமிட்டி மற்றும் லட்சார்ச்ச னை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • நாகை மாவட்டம் தி.மு.க.வின் கோட்டையாக உள்ளது.
    • நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு குறித்த செயல்வீரர்கள் கூட்டம் நாகை அவுரி திடலில் நடைபெற்றது.

    திமுக இளைஞரணி செய லாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன் மற்றும் ஆயிரக்கணக்கான திமுக இளைஞரணியினர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    நாகை, கலைஞர் போட்டியிட விரும்பிய தொகுதி. விவசாயிகள், மீனவர்கள் நிரம்பிய நாகை மாவட்டம் தி.மு.க.வின் கோட்டையாக உள்ளது.

    இந்த கூட்டத்தை நாகையில் நடத்துவதில் பெருமைப்படுகிறேன்.

    தி.மு.க. இளைஞரணியை பொறுத்தவரை உழைத்தால் யார் வேண்டுமானாலும் உயரலாம்.

    தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து மத்திய அரசு மற்றும் கவர்னரை கண்டித்து தி.மு.க. இளைஞரணி சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்கட்சியாக இருந்தபோதும் போராட்டம் நடத்தினோம்.

    தற்போதும் நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை தாண்டி உண்மையாக போராடுகிறோம்.

    நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் நான் மாணவர்களுக்கு என்றும் துணை நிற்பேன்.

    பதவி பொறுப்புக்காக தொடங்கப்பட்டது அல்ல, தி.மு.க. மாநில சுயாட்சிக்காகவும், கல்வி உரிமைக்காகவும் தான் தொடங்கப்பட்டது.

    வருகிற டிசம்பர் மாதம் 17-ந்தேதி சேலத்தில் நடக்கும் தி.மு.க. இளைஞரணி மாநாடு வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
    • தாக்குதலால் மீனவர்களுக்கு ஏற்படும் இழப்பீட்டிற்கு அரசு நிவராணம் வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டு துறை, புஷ்பவனம், வெள்ளப் பள்ளம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 9 படகுகளை சென்ற 22 மீனவர்களை தாக்கி ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலை மற்றும் பொருட்களை இலங்கை கடற்கொ ள்ளை யர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.

    இத்தக்குதலில் 8 மீனவர்கள் காயம் அடைந்து வேதாரண்யம், நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நமது தமிழக எல்லையில் மீன்பிடிக்கும் மீனவர்களிடம் இலங்கை கடற்கொள்ளை யர்கள் தொடர்ந்து தாக்குவதும் பொருட்களை கொள்ளைய டிப்பதும் நடந்து வருகிறது.

    எல்லை பகுதியில் மீனவர்க ளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய கடற்படை முகாம் வேதாரண்யம் பகுதியில் அமைத்து நாள்தோறும் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் தொடர் தாக்குதலால் மீனவர்களுக்கு ஏற்படும் இழப்பிட்டிற்கு அரசு உடன் நிவராணம் வழங்க வேண்டும்.

    இந்திய எல்லையை ஒட்டிய கடல் பகுதிகளில் கைவரிசை காட்டும் கடல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 2019-ம் ஆண்டு பார்லி மெண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கடல் கொள்ளையர்கள் எதிர்ப்புச் சட்டம் கடந்த ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

    எனவே அந்த சட்டத்தின்படி இலங்கை கடல் கொள்ளைகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்க மீனவர்கள் மீதுதொடர் தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கடலில் கறுப்பு கொடியுடன் இறங்கி போராட்டம் நடத்தபடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை காலை ரெயில் புறப்பட்டு மறுநாள் இரவு வேளாங்கண்ணி சென்றடையும்.
    • அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 12.30 மணிக்கு செகந்தராபாத் சென்றடையும்.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு மும்பை, செகந்திரபாத் ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் இரு மார்க்கமாக இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி மும்பை பாந்திரா ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.15 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் ( வண்டி எண். 09047) புறப்பட்டு மறுநாள் இரவு 8.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    மறுமார்க்கமாக வேளாங்க ண்ணியில் இருந்து 29-ம் தேதி அதிகாலை 4.50 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரெயில் ( வண்டி எண்.09048) மறுநாள் மாலை 5.30 மணிக்கு மும்பை வதோதரா ரயில் நிலையத்துக்கு சென்றடையும்.

    இதேபோல் செகந்திரா பாத்- வேளாங்கண்ணி சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்.07125) அடுத்த மாதம் ( செப்டம்பர்) 4-ம் தேதி காலை 8.40 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    மறு வழிதடத்தில் வேளாங்கண்ணி- செகந்திராபாத் சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்.07126) அடுத்த மாதம் 6-ம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 12.30 மணிக்கு செகந்தராபாத் சென்றடையும்.

    இதேபோல் செகந்தி ராபாத்- வேளாங்கண்ணி இடையே மற்றொரு சிறப்பு கட்டண ரெயில் ( வண்டி எண்.07127) செகந்திராபாத்தில் இருந்து அடுத்த மாதம் 8-ம் தேதி காலை 8 .40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    மறு வழித்தடத்தில் வேளாங்கண்ணியில் இருந்து ( வண்டி எண்.07128) அடுத்த மாதம் 10-ம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு செகந்திராபாத் சென்ற டையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குப்பை கிடங்கில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆய்வு செய்யப்பட்டது.
    • குப்பை கிடங்கு சேமிப்பு வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யம் நகராட்சி சார்பில் நாகை சாலையில் 4 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியினையும், காலை உணவு திட்ட சமையல் கூடத்தை நகராட்சி இயக்குனர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ரூ.2 கோடியே 85 லட்சம் மதிப்பில் கடற்கரை சாலையில் கசடு கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், நகராட்சி குப்பை கிடங்கையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி, மண்டல செயற்பொறியாளர் பார்த்திபன், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் வெங்கட லட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜ், ஓவர்சியர் குமரன் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் குப்பை கிடங்கு சேமிப்பு வளாகத்தில் நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் குப்பை கிடங்கில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இயற்கை சீற்றத்தாலும், உரிய வருமானம் இல்லாததாலும் தென்னை சாகுபடி வெகுவாக குறைந்து வருவது வேதனை அளிக்கிறது
    • வேளாண் திட்டங்களை நிறைவேற்ற சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சிக்கு வந்து அங்கிருந்து மயிலாடுதுறையில் நடந்த தருமபுரம் ஆதீன கல்லூரி விழாவில் பங்கேற்றார்.

    2-ம் நாளான நேற்று நாகை மாவட்டம் திருக்குவளையில் கருணாநிதி படித்த பள்ளியில் அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் நேற்று மாலை நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய 4 மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கொலை, கொள்ளை, திருட்டு, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிலையில் 3-ம் நாளான இன்று காலை நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வளர்ச்சி பணிகள், புதிய திட்டங்களுக்கான மதிப்பீடுகள், மத்திய மாநில அரசுகளின் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, ஏ.வ.வேலு, பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், ரகுபதி, மாவட்ட கலெக்டர்கள் ஜானிடாம் வர்க்கீஸ் (நாகை), தீபக்ஜேக்கப் (தஞ்சை), சாருஸ்ரீ (திருவாரூர்), மகாபாரதி (மயிலாடுதுறை) மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், துறை சார்ந்த அரசு முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 4 மாவட்ட கலெக்டர்களும் தங்களது மாவட்டங்களில் செய்து முடிக்கப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள், செய்ய வேண்டிய பணிகள், செயல்படுத்தப்பட்ட அரசின் திட்டங்கள், நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து பேசினர்.

    அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி மண்டல வாரியாக ஆய்வு நடத்தி வருகிறேன். இன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கான கள ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மக்களை தேடி மருத்துவம், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறிகள், கனிகள் உற்பத்தி அதிகரிப்பதற்காக வழிமுறைகளை ஆராய வேண்டும்.

    இயற்கை சீற்றத்தாலும், உரிய வருமானம் இல்லாததாலும் தென்னை சாகுபடி வெகுவாக குறைந்து வருவது வேதனை அளிக்கிறது. அதனை உயர்த்த நடவடிக்கை தேவை. விளைபொருட்களுக்கு உரிய சந்தை விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். சந்தை வசதிகளை பெருக்க வேண்டும்.

    வேளாண் திட்டங்களை நிறைவேற்ற சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வேளாண் திட்டங்களோடு இல்லாமல் அனைத்து திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பட்டா மாறுதல், பட்டா திருத்தம் போன்றவற்றிற்காக சான்றிதழ் வழங்குவதில் தாமதம் இருக்க கூடாது.

    6 வயதிற்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் நலன் கருதி ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம் கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. எனவே இந்த குறைகளை களைய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி வீதத்தில் மயிலாடுதுறை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது வேதனை அளிக்கிறது. இனி வரும் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வில் அதிகளவிலான மாணவ-மாணவிகளை தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே மாவட்டங்களில் நடந்து வரும் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    அதிகாரிகளும், அமைச்சர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதும், மாவட்ட நிர்வாகமும், தலைமை செயலகமும் ஒருங்கிணைந்து செயல்படுவதும் தான் நல்லாட்சியின் இலக்கணம்.

    அரசின் திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். எனவே பொதுமக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் சரி செய்வீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து கூட்டம் முடிந்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாங்கண்ணிக்கு சென்று மதிய உணவு அருந்துகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூருக்கு செல்கிறார்.

    இன்று இரவில் திருவாரூரில் உள்ள அவரது வீட்டில் தங்குகிறார். நாளை (ஞாயிற்றுகிழமை) திருவாரூரில் செல்வராஜ் எம்.பி. இல்ல திருமண விழாவில் பங்கேற்கிறார். அதன்பின்னர் திருச்சிக்கு காரில் புறப்பட்டு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    • சுமார் 4.5 கி.மீ தொலைவில் கரை ஓரத்தில் 20 கஞ்சா பொட்டலங்கள் இன்று கரை ஒதுங்கி கிடந்தது.
    • மீனவர்கள் உடனடியாக சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை எனும் மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மீன்பிடி தொழில் பிரதான தொழில் ஆகும். இவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம்.

    இந்நிலையில், வழக்கம்போல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது கடற்கரைக்கு கிழக்கே சுமார் 4.5 கி.மீ தொலைவில் கரை ஓரத்தில் 20 கஞ்சா பொட்டலங்கள் இன்று கரை ஒதுங்கி கிடந்தது.

    இதனை கண்ட மீனவர்கள் உடனடியாக சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சுங்கத்துறை ஊழியர் ராமசுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 40 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், கோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தும்போது கஞ்சா பொட்டலங்கள் தவறி கடலில் விழுந்திருக்கலாம் எனவும், அவை கடலில் விழுந்து சுமார் 1 மாதம் ஆகி இருக்கலாம் எனவும், கஞ்சா பொட்டலங்களில் பாசி பிடித்துள்ளது எனவும் சுங்கத்துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

    • வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் முழு மானியத்தில் குழித்தட்டு மற்றும் மிளகாய் நாற்றுகள் வழங்கப்படவுள்ளது.
    • இணையதள எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறலாம்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டம் திருமருகல் வட்டார விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக முழு மானியத்தில் குழித்தட்டு, கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுகள் வழங்கப்படவுள்ளது.

    இதனை பெற விவசாயிகள் சிட்டா அடங்கல், ஆதார் நகல், போட்டோ ஆகியவற்றை கொண்டு 9715141468 என்ற இைணயதள எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×