என் மலர்
நாகப்பட்டினம்
தரங்கம்பாடி:
தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் நேற்று உதயமானது. நாகை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்படுவதற்கான அரசாணை கடந்த பிப் ரவரி மாதம் வெளியிடப்பட்டது.
மயிலாடுதுறை கல்வி மாவட்ட அலுவலக கட்டுப்பாட்டில் இருந்து வரும் அனைத்து அரசு பள்ளிகளுக்கான பாட புத்தகங்கள் கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்பி வைக்கப்படும். தற்போது கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் பழைய இரும்பு கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையை பெருமாள்சாமி (வயது 55) என்பவர் நடத்தி வருகிறார். இடப் பிரச்சினை காரணமாக இந்த கடையை காலி செய்ய வேண்டும் என்று கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது. அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிகிறது.
இதற்காக மயிலாடுதுறை கோட்டாட்சியர் மகாராணி தலைமையில் அதிகாரிகள் இரும்பு கடைக்கு சென்றனர். அங்கு காலி செய்வதற்கான நோட்டீசை கடை வாசலில் ஒட்டினர். அப்போது இந்த கடையை ஆர்.டி.ஓ. மகாராணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கடையின் ஒரு பகுதியில் 2019-20 ஆம் ஆண்டுக்கான 6 முதல் 12-ம் வகுப்பு வரை 2 டன் எடையில் 3,134 பாடப்புத்தகங்கள் பண்டல், பண்டல்களாக மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து மயிலாடுதுறை போலீசாருக்குதகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கடை உரிமையார் பெருமாள் சாமியை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பாட புத்தகங்களை மாவட்ட பள்ளி கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் லாரியில் ஏற்றி வந்து விற்பனைக்காக எடைக்கு போட்டது தெரிய வந்தது. இதையடுத்து பள்ளி கல்வி ஊழியர் மேகநாதன், இரும்பு கடை உரிமையாளர் பெருமாள்சாமி ஆகிய 2 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இது குறித்து வருவாய்துறை, கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அதில் கல்வி அதிகாரி மேகநாதன் மாணவர்களின் நலனில் அக்கறையின்றி அரசின் இலவச பாட புத்தகங்களை சுய நலத்திற்காக எடைக்கு போட்டது உறுதியானது. அதன்பேரில் அவரை சஸ்பெண்டு செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி இன்று உத்தரவிட்டார்.
விலையில்லா பாட புத்தகங்களை பள்ளி கல்வி அதிகாரியே எடைக்கு போட்ட சம்பவம் கல்வியாளர்கள், பொதுமக்கள் மத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கி நடைபெறும் மீன்பிடி பருவம் சிறப்பு பெற்றது. அந்த வகையில் அக்டோபரில் தொடங்கும் மீன்பிடி பருவ காலமானது மார்ச் வரை நீடிப்பது வழக்கம். ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான படகுகளுடன் குடும்பம், குடும்பமாக கோடியக்கரைக்கு வரும் மீனவா்கள், தற்காலிகமாக முகாமிட்டு தங்குவா். இங்குள்ள படகுத்துறையில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்தி வைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபடுவா்.
இந்த ஆண்டு பருவம் அக்டோபரில் தொடங்கினாலும், அவ்வப்போது புயல் போன்ற காரணங்களால் மீன்பிடி தொழில் மந்தமாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் மீன் பிடிப்பில் ஈடுபட்டு இருந்த ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீனவரின் வலையில் 110 கிலோ எடையுள்ள பால் சுறா மீன் சிக்கியது.
இந்த மீன், சந்தைக்கு விற்பனைக்கு வந்தது. அப்போது நாகை மீன் வியாபாரி ஒருவர் அந்த சுறா மீனை ரூ.26 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.
மயிலாடுதுறையில் உள்ள பழைய இரும்பு கடையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்துறையினருக்கு ரகசியல் தகவல் வந்தது. இதையடுத்து, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பழைய இரும்பு கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 2019-20 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் 5000-க்கும் மேற்பட்டவை பண்டல் பண்டலாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வருவாய்த்துறையினர் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கடை உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் மயிலாடுதுறை கிட்டப்பா மேல்நிலைப்பள்ளியில் உள்ள புத்தக கிடங்கில் பணியாற்றும் மேகநாதன் என்பவரிடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி விலையில்லாமல் வழங்கும் பள்ளி புத்தகங்களை பழைய இரும்பு கடையில் பதுக்கி வைத்த சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அனுஷியா(வயது 28). திருமணமான இவர், கணவரை விவாகரத்து செய்து விட்டார். இவருக்கு பேஸ்புக் மூலம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மாரிசெல்வம்(25) என்பவருடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டு கோவையில் ஒன்றாக வசித்து வந்தனர். அனுஷியா கடன்பெற்று கணவருக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள மோட்டார்சைக்கிள் வாங்கி கொடுத்தார்.
இந்தநிலையில் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து மாரிசெல்வம், பேஸ்புக் மூலம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த மாலதி(30) என்ற மற்றொரு பெண்ணுடன் பழகி வந்து உள்ளார்.
திடீரென ஒருநாள் அவர் சிவகாசி செல்வதாக கூறி மனைவி அனுஷியாவிடம் பொய் சொல்லி மோட்டார்சைக்கிளில் வேதாரண்யம் வந்துள்ளார். அங்கு மாலதியை அவர் 2-வதாக திருமணம் செய்துகொண்டு அவருடன் அங்கேயே தங்கிவிட்டார்.
இந்தநிலையில், கணவரின் வாட்ஸ்-அப் முகப்பு படத்தில்(புரொபைல் பிக்சர்) அவர் வேறொரு பெண்ணுடன் திருமண கோலத்தில் இருந்தை அனுஷியா பார்த்தார். இதுகுறித்து அனுஷியா விசாரித்தபோது மாரிசெல்வத்துக்கும், மாலதிக்கும் திருமணம் நடந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அனுஷியா, தனது பெற்றோருடன் வேதாரண்யம் சென்று மாரிசெல்வத்தை சந்தித்து கேட்டுள்ளார்.
அப்போது அவர், அனுஷியாவை தகாத வார்த்தைகளால் திட்டி கம்பியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அனுஷியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக கொடுத்த புகாரின்பேரில் போலீசார் மாரிசெல்வத்தை கைது செய்து, மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.






