என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழ்வேளூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய சிறுவன் உள்பட 3 பேர் கைது
Byமாலை மலர்30 Dec 2020 10:27 AM GMT (Updated: 30 Dec 2020 10:27 AM GMT)
கீழ்வேளூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே ஆலங்குடி பகுதியில் கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் மணல் இருந்தது தெரிய வந்தது.
இதற்கிடையே டிராக்டரில் வந்த 4 பேரில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். பின்னர் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், வடுகச்சேரி வடக்குதெருவை சேர்ந்த குமார் மகன் விக்னேஷ்(26), அதே பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் விஜய் (24), மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், இவர்கள் ஆலங்குடி கடுவையாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் உள்பட 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மேலதண்ணிலப்பாடியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X