என் மலர்
நீங்கள் தேடியது "Kilvelur"
நாகப்பட்டினம்:
நாகை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருக்குவளை தாசில்தார் இளங்கோவன் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் நாகை கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகையில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்ற ஒரு வேனை மடக்கி சோதனை செய்தனர்.
அப்போது பூம்புகார் மீனவர் காலனியை சேர்ந்த செல்லத்துரை என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு லட்சம் ரொக்கம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி கீழ்வேளூர் தாசில்தார் கபிலனிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்வேளூர்:
திருவாரூர் மாவட்டம் பேரளம் வெள்ளித் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி ராசாத்தி (வயது 55).
சம்பவதன்று இவர் தனது மகள் அனிதாவை நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த பொரவச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் லேப் டெக்னிசன் பயிற்சி படிப்பதற்காக சேர்த்து விட்டு கல்லூரி வாசலில் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்து அவரை பொதுமக்கள் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






