என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருக்கடையூர் அருகே தீக்குளித்து மூதாட்டி தற்கொலை

    திருக்கடையூர் அருகே தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
    திருக்கடையூர்:

    திருக்கடையூர் அருகே சின்னங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது 80). இவருடைய கணவர் இடும்பன். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தனியாக வசித்து வந்த லட்சுமி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் மனமுடைந்த லட்சுமி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×