என் மலர்
செய்திகள்

தற்கொலை
நாகையில் ஆசிட் குடித்து பெயிண்டர் தற்கொலை
நாகையில் ஆசிட் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை வெளிப்பாளையம் முனிசிபல் பேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48). பெயிண்டர். இவருடைய மனைவி காஞ்சனா. கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகத்துக்கும், காஞ்சனாவுக்கும் இடையே மீண்டும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஆறுமுகம் வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்துள்ளார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து அவரை மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






