என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலய வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தஞ்சாவூர் மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், வனஉயிரினக் காப்பாளர் கலாநிதி ஆகியோரின் உத்திரவின்படி ரோந்து பணி மேற்கொண்டனர்
அப்பொழுது கீழ ஆறுமுக கட்டளை பகுதியை சேர்ந்த விஜயன் (வயது 35) என்பவர் அப்பகுதியில் உள்ள நாடேட்டி குளத்தில் வரும் பறவைகளை ஏர்கன் மூலம் சுட்டுகொண்டிருந்தார். இதை பார்த்த வனவர் சதீஷ்குமார், வனக்காப்பாளர் முனியசாமி, வேட்டை தடுப்பு காவலர்கள் சுதாகர், லோகநாதன் ஆகியோர் விஜயகுமாரை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியை சேர்ந்தவர் பிரவீனா. இவர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் பணியை முடித்து விட்டு நாகையில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு வந்தார். அப்போது அங்கு குடியிருக்கும் நாகூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் சிவக்குமார்(வயது33) திடீரென பிரவீனாவை தடுத்து நிறுத்தி கீழே தள்ளினார். பின்னர் கன்னத்தில் கடித்து பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
அதிர்ச்சியடைந்த பிரவீனா அவரிடமிருந்து தப்பியோடி நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே சீயாத்தமங்கை மெயின் ரோட்டை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 55). கணவர் பாலசுப்ரமணியன்.
10 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்த விஜயலட்சுமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் காணாமல் போய்விட்டார்.
அவருடைய மகள் தனலட்சுமி (33) திட்டச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.






