என் மலர்
நாகப்பட்டினம்
அதிமுக சார்பில் எம்எல்ஏ-வாக இருக்கும் ஓ.எஸ். மணியன் மீண்டும் களம் இறங்கியுள்ளார். திமுக சார்பில் எஸ்.கே. வேதரத்தினம் நிறுத்தப்பட்டுள்ளார்.
சொத்து மதிப்பு விவரம்
எஸ்.கே. வேதரத்தினம்
1. கையிருப்பு- ரூ. 6 லட்சம்
2. அசையும் சொத்து- ரூ. 30,61,451
3. அசையா சொத்து- ரூ. 28,00,000
ஓ.எஸ்.மணியன்
1. கையிருப்பு- ரூ. 4,84,983
2. அசையும் சொத்து- ரூ. 1,13,87,930.01
3. அசையா சொத்து- ரூ. 47,00,000
நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி கடந்த 1962-ம் ஆண்டு திருத்துறைப்பூண்டி தொகுதியில் இருந்து பிரிந்து வேதாரண்யம் தொகுதியாக உருவானது. இந்த தொகுதியில் பெரும்பாலும் விவசாயிகளும், மீனவர்களும், உப்பளத் தொழிலாளர்கள் நிறைந்த தொகுதியாகும்.

ஓ.எஸ். மணியன், வேதரத்தினம்
இத்தொகுதியில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 278 மக்கள் உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 342 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 94275. பெண் வாக்காளர்கள் 98067. மூன்றாம் பாலின வாக்காளர்கள் அறவே இந்த தொகுதியில் இல்லை.
2016 தேர்தல் வெற்றி விவரம்:
ஓ.எஸ். மணியன் (அ.தி.மு.க)- 60,836
பி.வி.ராஜேந்திரன் (காங்.)- 37,838
வேதரத்தினம் (பா.ஜ.க)- 37,086
வைரவநாதன் (தே.மு.தி.க)- 4,594
உஷா கண்ணன் (பா.ம.க)- 2,081
ராஜேந்திரன் (நாம் தமிழர்)- 1,386
இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:
1962 என்.எசு.இராமலிங்கம் (காங்கிரசு)
1967 பி.வி.தேவர் (காங்கிரசு)
1971 எம்.மீனாட்சி சுந்தரம் (தி.மு.க)
1977 எம்.மீனாட்சி சுந்தரம் (தி.மு.க)
1980 எம்.எசு. மாணிக்கம் (அ.தி.மு.க)
1984 எம்.மீனாட்சி சுந்தரம் (தி.மு.க)
1989 பி.வி.ராஜேந்திரன் (காங்கிரசு)
1991 பி.வி.ராஜேந்திரன் (காங்கிரசு)
1996 எஸ்.கே.வேதரத்தினம் (தி.மு.க)
2001 எஸ்.கே.வேதரத்தினம் (தி.மு.க)
2006 எஸ்.கே.வேதரத்தினம் (தி.மு.க)
2011 என்.வி.காமராஜ் (அ.தி.மு.க)
2016 ஓ.எஸ்.மணியன் (அ.தி.மு.க)
வேதாரண்யம் தொகுதி உருவானதிலிருந்து இந்த தொகுதி தி.மு.க.வின் கோட்டையாக விளங்கி வந்துள்ளது. இந்த தொகுதியில் 11 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 6 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது.
எதிர்பார்ப்புகள்
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் நீண்ட காலமாக மக்களின் எதிர்பார்ப்பாக விளங்கி வரும் உப்பள தொழிற்சாலை வேதாரண்யம் தாலுகாவில் 9 ஆயிரம் ஹெக்டேரில் சிறு, குறு உப்பு உற்பத்தியாளர்கள் 2 தனியார் தொழிற்சாலைகளும் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 30 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உப்பை மூலப்பொருளாகக் கொண்டு காஸ்டிக் சோடா தொழிற்சாலை தொடங்கப்படும் என அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். ஆனால் அதை ஏட்டு அளவிலேயே இன்றளவும் உள்ளது. இதற்கான எந்தவிதமான பணியும் தொடங்கப்படவில்லை.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய இதுவரை அகல ரயில்பாதை அமைத்து உப்பை ஏற்றுமதி செய்வதற்கு எந்த வழியும் தெரியவில்லை கடந்த 15 ஆண்டுகளாக அகல ரயில் பாதை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. அகல ரயில் பாதை அமைத்துக் கொடுத்தால் மட்டுமே ஏதுவாக உப்பை ஏற்றுமதி செய்ய முடியும் என்பது உப்பு உற்பத்தியாளர்களின் கருத்து.
இந்த தொகுதியில் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மா விவசாயம் நடைபெற்று கொண்டிருக்கிறது. சேலத்திற்கு அடுத்தபடியாக மா உற்பத்தியில் ஆண்டொன்றுக்கு 10 ஆயிரம் டன் இந்த பகுதியில் பல்வேறு வகையான மாம்பழங்கள் விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர். இந்த தொகுதியில் நீண்ட நாள் கோரிக்கையான மாங்கூழ் தயார் செய்யும் தொழிற்சாலை நிறுவப்படவில்லை.
இதேபோல் 5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப் பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த முல்லைப் பூ சாகுபடியை நம்பி சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்த முல்லைப் பூவை மூலப்பொருளாக கொண்டு சென்ட் தொழிற்சாலை துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தொழிற்சாலை இதுவரை வரவில்லை. விவசாயத்தை நம்பிய கடைமடைப் பாசனப் பகுதிதான். வேதாரண்யம் தொகுதியில் இதுவரை ஒரு தொழிற்சாலை கூட தொடங்கப்படவில்லை.
தற்சமயம் ஆயத்த ஆடை பூங்கா தொடங்கப்பட்டு முதல்கட்டமாக 500 பெண்கள் ஆடை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள் மேலும் உணவு பூங்காவும் அமைய உள்ளது இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த தொகுதியில் சுதந்திரம் அடைந்ததிலிருந்து இது வரை தீர்க்கப்படாத ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் இப்பகுதியில் தென்னடார், சிறுதலைக்காடு, கடினல்வயல், கோடியக்கரை, கோடியக்காடு, தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை.
திமுக ஆட்சிக்காலத்தில் கோ.சி.மணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம்தான் இன்னமும் இயங்கி வருகிறது. அந்த குடிநீர் போதுமானதாக இல்லை அதனை மேம்படுத்தி முறையாக குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
வேட்டைக்காரணிருப்பு பகுதியில் ஆசியாவிலேயே இரண்டாவது மிகபெரிய நெல் சேமிப்பு கிடங்காக ரூபாய் 164 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டு வரும் இந்த நெல் சேமிப்பு கிடங்கு கடந்த கஜா புயலில் முற்றிலும் சேதமடைந்து தற்போது மீண்டும் புதுப்பிக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் பெரும்பாலும் கடற்கரையை அதிக அளவில் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இது வரை எந்த ஒரு மீனவ கிராமத்திலும் ஒரு துறைமுகம் கூட கட்டிக் கொடுக்கப்பட வில்லை.
தற்போது வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் ரூ.110 கோடியிலும், ஆறுகாட்டுத்துறை ரூ.150 கோடியிலும் தூண்டில் வளைவு அமைக்க திட்டமிடப்பட்டு வெள்ளப்பள்ளத்தில் மட்டும் தற்போது பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. ஆண்டு முழுவதும் மீன் பிடிக்கும் கோடியக்கரை கடல் பகுதியில் 1982-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஜட்டி ஒன்று கட்டப்பட்டது. மீனவர்களின் படகுகளை கடல் ஆலையில் இருந்து பாதுகாப்பாக ஓரமாக அதை நிறுத்திக் கொள்வதற்கான வசதி இருந்தது.
தற்போது அந்த ஜட்டி முற்றிலும் அழிந்துவிட்டது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் அக்டோபர் முதல் மார்ச் வரை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடித்து வருகின்றனர் 40 ஆண்டு காலமாக நடைபெறும் இந்த மீன்பிடி சீசன் காலத்தில் படகுகளை நிறுத்துவதற்கு ஒரு தூண்டில் வளைவு அல்லது ஒரு சிறிய துறைமுகம் கட்டவேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தலைஞாயிறு பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட், டீக்கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் முககவசம் அணியாமல் பணிபுரிந்த 20 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வாய்மேடு:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், ஓட்டல்கள், காய்கறி கடைகள், டீக்கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் முககவசம் அணிந்து பணியாற்றுகிறார்களா? என பேரூராட்சி செயல் அலுவலர் பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார். இதில் தலைஞாயிறு பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட், டீக்கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் முககவசம் அணியாமல் பணிபுரிந்த 20 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வேளாங்கண்ணி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் குழிதோண்டி புதைத்து வைக்கப்பட்டிருந்த 120 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே புதுப்பள்ளி கடற்கரையில் மறைவான இடத்தில் சிலர் குழிதோண்டி கஞ்சா மூட்டைகள் புதைத்து வைத்திருப்பதாக நாகை கடலோர காவல் குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் கீழ்வேளூர் கடலோர காவல் குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மண்வெட்டியால் தோண்டினர். அப்போது சில அடி ஆழத்தில் 3 மூட்டைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதனை வெளியே எடுத்து பிரித்து பார்த்ததில் 120 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது. இதையடுத்து கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்து நாகை கடலோர காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக கஞ்சா மூட்டைகளை புதைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடத்தல்காரர்கள் யார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே புதுப்பள்ளி கடற்கரையில் மறைவான இடத்தில் சிலர் குழிதோண்டி கஞ்சா மூட்டைகள் புதைத்து வைத்திருப்பதாக நாகை கடலோர காவல் குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் கீழ்வேளூர் கடலோர காவல் குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மண்வெட்டியால் தோண்டினர். அப்போது சில அடி ஆழத்தில் 3 மூட்டைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதனை வெளியே எடுத்து பிரித்து பார்த்ததில் 120 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது. இதையடுத்து கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்து நாகை கடலோர காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக கஞ்சா மூட்டைகளை புதைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடத்தல்காரர்கள் யார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யம் அருகே திருமணமான 14-வது நாளில் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் மேலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று மாலை இவர் மோட்டார் சைக்கிளில் கரியாப்பட்டினம் செங்காத்தலை பாலத்திலிருந்து வேதாரண்யத்துக்கு வந்து கொண்டிருந்தார்
மணக்காடு கிராமம் பிள்ளையார் குளம் அருகே வந்தபோது ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் செல்வம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இவருக்கு திருமணமாகி 14 நாட்களே ஆகிறது. இதுகுறித்து கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமரன் வழக்குப் பதிவு செய்து செல்வத்தின் உடலை வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்து வருகிறார்.
வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் மேலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று மாலை இவர் மோட்டார் சைக்கிளில் கரியாப்பட்டினம் செங்காத்தலை பாலத்திலிருந்து வேதாரண்யத்துக்கு வந்து கொண்டிருந்தார்
மணக்காடு கிராமம் பிள்ளையார் குளம் அருகே வந்தபோது ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் செல்வம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இவருக்கு திருமணமாகி 14 நாட்களே ஆகிறது. இதுகுறித்து கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமரன் வழக்குப் பதிவு செய்து செல்வத்தின் உடலை வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்து வருகிறார்.
அதிமுகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நேருக்குநேர் மோதும் நாகப்பட்டினம் தொகுதி கண்ணோட்டம்.
சொத்தி மதிப்பு
தங்க.கதிரவன்
1. கையிருப்பு- ரூ. 4,50,000
2. அசையும் சொத்து- ரூ. 1,55,49,712
3. அசையா சொத்து- ரூ. 96,00,000
நாகப்பட்டினம் வட்டத்தில் நாகை, திருமருகல் ஆகிய ஒன்றியங்களை உள்ளடக்கியது நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி. நாகப்பட்டினம் நகராட்சி, திட்டச்சேரி பேரூராட்சி என ஒரு பேரூராட்சியும், ஒரு நகராட்சியும் உள்ளன.
இத்தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை. ஆண்கள்- 95,558, பெண்கள்- 1,01,748, மூன்றாம் பாலித்தவர்- 10. ஆக மொத்தம் 1,97,316 ஆகும்.

இஸ்லாமியர்களின் மிக முக்கிய தலமான நாகூர், இந்துக்களின் முக்கிய தலமான சிக்கல் ஆகியவையும் இந்த சட்டமன்ற தொகுதியில் உள்ளன.
தொகுதியில் மீன்பிடித் தொழிலே பிரதானமாக உள்ளது. இங்கு இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 5 முறை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 3 முறை அதிமுகவும், ஒருமுறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

நாகையில் உள்ள அக்கரைப்பேட்டை கிராமத்திற்கு இதுவரை எந்தவித கட்டமைப்பு வசதிகளை செய்து தரவில்லை என கூறப்படுகிறது. விவசாய உட்கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், தொழிற்சாலைகள் கொண்டு வராததன் காரணமாக மாற்று தொழிலுக்கு வழியில்லாமல் இளைஞர்களும் இன்னலுக்கு ஆளாகி வருவதாக தொகுதி மக்கள் கூறுகின்றனர்.
தொன்மை வாய்ந்த நாகை துறைமுகம் கிடப்பில் போடப்பட்டதால் வர்த்தகர்களும் தொழிலாளர்களும் திருப்பூர் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மும்மதங்கள் சங்கமிக்கும் நாகை சிக்கல் சிங்காரவேலர் கோவில், நாகூர் தர்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த வேண்டும்.
துறைமுக நகராக விளக்கும் நாகையில் உள்ள துறைமுகம் வெறும் பெயரளவுக்கே இருக்கிறது. அதனை மேம்படுத்தி ஏற்றுமதி இறக்குமதி செய்யும் அளவுக்கு கட்டமைப்புக்கள் மேம்படுத்தப்படவில்லை. அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் தனியார் துறைமுகம் அசுர வளர்ச்சியடைந்து கொண்டுள்ளது.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கான தொழிற்சாலைகளோ, நிறுவனங்களோ எதுவும் இங்கு இல்லை. அதனால் வெளி மாவட்டங்களுக்கு பிழைப்பு தேடி செல்லுகிறார்கள் படித்த மற்றும் படிக்காத இளைஞர்கள். மீன்பிடித் தொழில் அளவுக்கு விவசாயமும் முக்கிய தொழிலாக விளங்குகிறது. விவசாயப் பொருட்களையும், மீன், இரால் உள்ளிட்டவற்றையும் சேமித்து வைக்கவோ, பதப்படுத்தி மதிப்பு கூட்டவோ கட்டமைப்பு வசதிகள் இல்லை.

சாலை பிரச்சனை, குடிநீர் பிரச்சனை. கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தடுத்து தடுப்பணை கட்டி கடைமடை பகுதிகளில் பாசனத்திற்கு விடக்கோரும் திட்டம் செயல்படுத்தப்ட வேண்டும்.
தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வேதாரண்யத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கு ஏதுவாக இருந்த ரயில்பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதிமுக சார்பில் தங்க.கதிரவன் நிறுத்தப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் ஆளூர் ஷா நவாஸ் நிறுத்தப்பட்டுள்ளார்.
இதுவரை வெற்றி பெற்றவர்கள்:


1977 உமாநாத் (இ.கம்யூனிஸ்ட்)
1980 உமாநாத் ((இ.கம்யூனிஸ்ட்)
1984 கோ.வீரையன் (இ.கம்யூனிஸ்ட்)
1989 கோ.வீரையன் (இ.கம்யூனிஸ்ட்)
1991 கோடிமாரி (அ.தி.மு.க)
1996 ஜி.நிஜாமுதீன் (இ.தே.லீக்) (தி.மு.க)
2001 ஜீவானந்தம் (அ.தி.மு.க)
2006 கோ.மாரிமுத்து (இ.கம்யூனிஸ்ட்)
2011 கே.ஏ. ஜெயபால் (அ.தி.மு.க)
2016 எம். தமீமுன் அன்சாரி (ம.ஜ.க)
அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ம.க.வும்- திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சொத்து மதிப்பு
நாகை மாலி
1. கையிருப்பு: ரூ. 3850
2. அசையும் சொத்து: 14,11,420.63
3. அசையா சொத்து: ரூ. 80,000
கடந்த தொகுதி சீரமைப்பின்போது புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி இது. நாகப்பட்டினம், வேதாரண்யம், திருவாரூர் ஆகிய மூன்று தொகுதிகளில் இருந்து பகுதிகள் பிரித்து கீழ்வேளூர் தனி தொகுதியாக உருவானது. இதில் கீழ்வேளூர் ஒன்றியத்தில் இருந்து 38 ஊராட்சிகளும், கீழையூர் ஒன்றியத்தில் இருந்து 27, தலைஞாயிறு ஒன்றியத்தில் இருந்து 6, நாகை ஒன்றியத்தில் இருந்து 6 ஊராட்சி பகுதிகள் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டிலேயே அதிக அளவு வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதி காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி. குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட சட்டமன்ற தொகுதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் (தனி) சட்டமன்ற தொகுதியாகும்.

கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 764. இதில் ஆண்கள் 87 ஆயிரத்து 677, பெண்கள் 91 ஆயிரத்து 578.
நாகப்பட்டினம் மாவட்டத்தில், கீழ்வேலூர் வட்டம் மற்றும் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் பேரூராட்சியும் ஆகும். இந்த தொகுதியில் 77 பஞ்சாயத்துகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
இவ்வூரில் காவேரி ஆற்றின் கிளையாறான ஓடம்போக்கி ஆறு பாய்கிறது. கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில் அப்பர், சம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 84-வது சிவத்தலமாகும்.
கிறிஸ்துவர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான வேளாங்கண்ணி, இந்துக்களின் வழிபாட்டு தலமான எட்டுக்குடி, கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை உள்ளிட்ட முக்கிய ஊர்கள் இத்தொகுதிக்குள் உள்ளன. வேளாங்கண்ணி, கீழ்வேளூர் ஆகிய 2 பேரூராட்சிகள் தவிர ஏனையவை எல்லாமே ஊராட்சி பகுதிகள். முழுக்க முழுக்க விவசாயத் தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர்.
தொகுதியில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. தனியார் அரிசி ஆலை உள்ளது. தன்னிறைவு பெறாத தொகுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தொகுதியின் நீண்ட நாள் கோரிக்கை பேருந்து நிலையம், நூலகக் கட்டடம் கட்ட வேண்டும். எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல வேண்டும். இங்கு மீன்பிடி பிரதான தொழிலாக உள்ளது. இதில் முக்கியமான தொழில் விவசாயத்தை நம்பியே வாழ்கிறார்கள். அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட முக்கிய மீன்பிடித் தலங்களும் உள்ளன.

அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் வடிவேல் ராவணனும், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நாகை மாலியும் போட்டியிடுகிறார்கள்.
2011 மகாலிங்கம் (சி.பி.எம்)
2016 உ. மதிவாணன் (தி.மு.க)
ஏழை-எளிய மக்கள் துன்பப்படுகிறார்களோ, அந்த வேதனையை களைவதற்கு நடவடிக்கை எடுக்கும் அரசாங்கமாக அ.தி.மு.க. அரசாங்கம் திகழ்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நாகப்பட்டினம்:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-
மழைக்காலங்களில் உப்பளத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்படுகின்ற அந்த உப்பளத் தொழிலாளர்களுக்கும் மழைக்காலங்களில் மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு தற்போது 5,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதை அ.தி. மு.க. அரசு ஆட்சி அமைந்தவுடன் 7,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும். அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வரப்படும்.
அ.தி.மு.க. நீட் தேர்வை தடை செய்ய முயற்சிக்கவில்லை என்று ஸ்டாலின் சொல்லி வருகிறார். நான் தொடர்ந்து இதற்கு பதில் சொல்லி வருகிறேன். சட்டமன்றத்தில் விரிவான பதிலை எங்களுடைய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் புள்ளி விவரத்தோடு சொன்னார். ஸ்டாலின் அவர்களே மீண்டும் மீண்டும் பொய்யை சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. இந்த நீட் தேர்வு வருவதற்கு காரணமே தி.மு.க.-காங்கிரஸ் தான். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை அ.தி.மு.க. தொடர்ந்து பாடுபடும்.
அதுவரை நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொண்டு வந்தது. இதற்காக எதிர்கட்சிகளும் கோரிக்கை வைக்கவில்லை, பொதுமக்களும் கோரிக்கை வைக்கவில்லை. இந்த ஆண்டு 435 அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் மருத்துவர்கள் ஆகக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கி தந்திருக்கின்றோம். எப்போது எல்லாம் ஏழை-எளிய மக்கள் துன்பப்படுகிறார்களோ, அந்த வேதனையை களைவதற்கு நடவடிக்கை எடுக்கும் அரசாங்கமாக அ.தி.மு.க. அரசாங்கம் திகழ்கிறது.
கடந்த ஆண்டு தை பொங்கலுக்கு ரூ.1,000 வழங்கினோம். கொரோனா காலக்கட்டத்தில் 4 மாதங்களுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லாமல் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை கொடுத்தோம். குடும்பத்திற்கு 1,000 ரூபாய் கொடுத்தோம். இந்தாண்டு பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு கொடுத்தோம். கடந்த ஆண்டு தை பொங்கல் முதல் இந்த ஆண்டு தை பொங்கல் வரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4,500 ரூபாய் வழங்கிய ஒரே அரசு இது தான். தி.மு.க ஆட்சியில் ஒரு 100 ரூபாய் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்தார்களா?
எப்போது எல்லாம் ஏழை-எளிய மக்கள் துன்பப்படுகிறார்களோ, அந்த வேதனையை களைவதற்கு நடவடிக்கை எடுக்கும் அரசாங்கமாக அ.தி.மு.க. அரசாங்கம் திகழ்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல் நாகப்பட்டினத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து பேசியபோது, ‘இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சாதி, மத சண்டைகள் இல்லாமல் அமைதிப்பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் அவர்கள் தான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்பதை போலவும், அ.தி.மு.க. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்காதது போல ஒரு தோற்றத்தை வெளிப்படுத்தி தேர்தல் நேரத்தில் அவர்களின் வாக்குகளை பெற நினைக்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-
மழைக்காலங்களில் உப்பளத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்படுகின்ற அந்த உப்பளத் தொழிலாளர்களுக்கும் மழைக்காலங்களில் மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு தற்போது 5,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதை அ.தி. மு.க. அரசு ஆட்சி அமைந்தவுடன் 7,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும். அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வரப்படும்.
அ.தி.மு.க. நீட் தேர்வை தடை செய்ய முயற்சிக்கவில்லை என்று ஸ்டாலின் சொல்லி வருகிறார். நான் தொடர்ந்து இதற்கு பதில் சொல்லி வருகிறேன். சட்டமன்றத்தில் விரிவான பதிலை எங்களுடைய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் புள்ளி விவரத்தோடு சொன்னார். ஸ்டாலின் அவர்களே மீண்டும் மீண்டும் பொய்யை சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. இந்த நீட் தேர்வு வருவதற்கு காரணமே தி.மு.க.-காங்கிரஸ் தான். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை அ.தி.மு.க. தொடர்ந்து பாடுபடும்.
அதுவரை நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொண்டு வந்தது. இதற்காக எதிர்கட்சிகளும் கோரிக்கை வைக்கவில்லை, பொதுமக்களும் கோரிக்கை வைக்கவில்லை. இந்த ஆண்டு 435 அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் மருத்துவர்கள் ஆகக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கி தந்திருக்கின்றோம். எப்போது எல்லாம் ஏழை-எளிய மக்கள் துன்பப்படுகிறார்களோ, அந்த வேதனையை களைவதற்கு நடவடிக்கை எடுக்கும் அரசாங்கமாக அ.தி.மு.க. அரசாங்கம் திகழ்கிறது.
கடந்த ஆண்டு தை பொங்கலுக்கு ரூ.1,000 வழங்கினோம். கொரோனா காலக்கட்டத்தில் 4 மாதங்களுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லாமல் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை கொடுத்தோம். குடும்பத்திற்கு 1,000 ரூபாய் கொடுத்தோம். இந்தாண்டு பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு கொடுத்தோம். கடந்த ஆண்டு தை பொங்கல் முதல் இந்த ஆண்டு தை பொங்கல் வரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4,500 ரூபாய் வழங்கிய ஒரே அரசு இது தான். தி.மு.க ஆட்சியில் ஒரு 100 ரூபாய் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்தார்களா?
எப்போது எல்லாம் ஏழை-எளிய மக்கள் துன்பப்படுகிறார்களோ, அந்த வேதனையை களைவதற்கு நடவடிக்கை எடுக்கும் அரசாங்கமாக அ.தி.மு.க. அரசாங்கம் திகழ்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல் நாகப்பட்டினத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து பேசியபோது, ‘இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சாதி, மத சண்டைகள் இல்லாமல் அமைதிப்பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் அவர்கள் தான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்பதை போலவும், அ.தி.மு.க. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்காதது போல ஒரு தோற்றத்தை வெளிப்படுத்தி தேர்தல் நேரத்தில் அவர்களின் வாக்குகளை பெற நினைக்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.
வேதாரண்யம் கடற்கரையில் 100 கிலோ எடை கொண்ட டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பகுதியாகும். வேதாரண்யம் அருகே கடற்கரையையொட்டி ஏராளமான கிராமங்கள் உள்ளன. டால்பின்கள், ஆலிவர் ரெட்லி ஆமைகள் போன்ற அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் புகலிடமாக வேதாரண்யம் கடலோர பகுதி உள்ளது.
பல ஆயிரம் மைல் தூரம் கடல்வழி பயணம் மேற்கொள்ளும் ஆலிவர் ரெட்லி ஆமைகள் வேதாரண்யம் பகுதிக்கு இனப்பெருக்கத்துக்காக வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. இங்கு நிலவும் இயற்கை சூழல் ஆமைகளுக்கு ஏற்ற வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல வேதாரண்யம் கடல் பகுதியில் டால்பின்களையும் அதிக அளவில் காணலாம். இந்த பகுதியில் டால்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவது அடிக்கடி நடக்கிறது.
இந்த நிலையில் நேற்று வேதாரண்யம் கடற்கரையில் 100 கிலோ எடை கொண்ட டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கானிடம் மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வனவர் சதீஷ்குமார் மற்றும் வனத்துறையினர் கடற்கரைக்கு சென்று இறந்த டால்பினை கடற்கரையிலேயே புதைத்தனர். கப்பலில் அடிபட்டு இந்த டால்பின் இறந்திருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.
குடும்ப தகராறில் மனைவியை தீ வைத்து எரித்துக்கொல்ல முயன்றதாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை வேதநாயகம் செட்டித்தெருவை சேர்ந்தவர் விஜயபாஸ்கரன் (வயது34). டிரைவர். இவருடைய மனைவி தனவள்ளி (27). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று நடந்த தகராறில் ஆத்திரம் அடைந்த விஜயபாஸ்கரன் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது மனைவி தனவள்ளி மீது ஊற்றி தீ வைத்தார்.
இதில் தனவள்ளியின் உடல் முழுவதும் தீ பரவி அவர் அலறி துடித்தார். தீயில் உடல் கருகி படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் விஜயபாஸ்கரனை கைது செய்தனர். குடும்ப தகராறில் டிரைவர் ஒருவர் மனைவியை எரித்துக்கொல்ல முயன்றது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகை பப்ளிக்ஆபீஸ் சாலை தனியார் தியேட்டர் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
நாகப்பட்டினம்:
நாகை பப்ளிக்ஆபீஸ் சாலை தனியார் தியேட்டர் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தியாகராஜன் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினார்.
இதில் அவர் விற்பனை செய்ய வைத்திருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் வெளிப்பாளையம் பெருமாள்கோயில் தெருவைச் சேர்ந்த பசுபதி(60) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதியை கைது செய்தனர்.
நாகை பப்ளிக்ஆபீஸ் சாலை தனியார் தியேட்டர் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தியாகராஜன் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினார்.
இதில் அவர் விற்பனை செய்ய வைத்திருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் வெளிப்பாளையம் பெருமாள்கோயில் தெருவைச் சேர்ந்த பசுபதி(60) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதியை கைது செய்தனர்.
நாகையில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி மீது தீவைத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை வேதநாயகம் செட்டித்தெருவைச் சேர்ந்தவர் விஜயபாஸ்கரன் (34). இவரது மனைவி தனவள்ளி (27). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 14-ந் தேதி இரண்டு பேருக்கும் நடந்த தகராறு முற்றியதில் கோபமடைந்த விஜய பாஸ்கரன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து மனைவி மீது ஊற்றி பற்றவைத்து அவர் மீது வீசினார்.
இதில் பலத்த காயமடைந்த தனவள்ளி நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து நாகை டவுன் இன்ஸ்பெக்டர் பெரியசாமி நேற்று வழக்குப்பதிவு செய்து விஜயபாஸ்கரனை கைது செய்தார்.
நாகை வேதநாயகம் செட்டித்தெருவைச் சேர்ந்தவர் விஜயபாஸ்கரன் (34). இவரது மனைவி தனவள்ளி (27). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 14-ந் தேதி இரண்டு பேருக்கும் நடந்த தகராறு முற்றியதில் கோபமடைந்த விஜய பாஸ்கரன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து மனைவி மீது ஊற்றி பற்றவைத்து அவர் மீது வீசினார்.
இதில் பலத்த காயமடைந்த தனவள்ளி நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து நாகை டவுன் இன்ஸ்பெக்டர் பெரியசாமி நேற்று வழக்குப்பதிவு செய்து விஜயபாஸ்கரனை கைது செய்தார்.
வேளாங்கண்ணியில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கொல்லன் திடல் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன். இவருடைய மகன் சுசிந்திரன் (வயது30).இவர் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சுசிந்திரன் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு ரெயில் நிலையம் வழியாக மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது கறிகடை முச்சந்தி அருகே சென்ற போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுசிந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






