search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நாகையில் கஞ்சா விற்ற முதியவர் கைது

    நாகை பப்ளிக்ஆபீஸ் சாலை தனியார் தியேட்டர் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகை பப்ளிக்ஆபீஸ் சாலை தனியார் தியேட்டர் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தியாகராஜன் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு சந்தேகத்தின் பேரில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினார்.

    இதில் அவர் விற்பனை செய்ய வைத்திருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் வெளிப்பாளையம் பெருமாள்கோயில் தெருவைச் சேர்ந்த பசுபதி(60) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதியை கைது செய்தனர்.
    Next Story
    ×