search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நாகையில் குடும்ப பிரச்சனையில் மனைவி மீது தீவைத்த கணவர் கைது

    நாகையில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி மீது தீவைத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை வேதநாயகம் செட்டித்தெருவைச் சேர்ந்தவர் விஜயபாஸ்கரன் (34). இவரது மனைவி தனவள்ளி (27). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த 14-ந் தேதி இரண்டு பேருக்கும் நடந்த தகராறு முற்றியதில் கோபமடைந்த விஜய பாஸ்கரன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து மனைவி மீது ஊற்றி பற்றவைத்து அவர் மீது வீசினார்.

    இதில் பலத்த காயமடைந்த தனவள்ளி நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து நாகை டவுன் இன்ஸ்பெக்டர் பெரியசாமி நேற்று வழக்குப்பதிவு செய்து விஜயபாஸ்கரனை கைது செய்தார்.
    Next Story
    ×