என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    திட்டச்சேரி அருகே திருமணமாகி 20 நாளில் புதுப்பெண் மாயமானது தொடர்பாக அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரி அருகே பாகொந்தை கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28).

    இவருக்கும் நாகை பெரியார் நகரை சேர்ந்த கிருஷ்ணவேணி (24)என்பவருக்கும் இடையே கடந்த 20 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

    சம்பவத்தன்று கிருஷ்ணவேணி வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிருஷ்ணவேணியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து உதயகுமார் திட்டச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணவேணியை தேடி வருகின்றனர்.
    முறையாக தண்ணீர் வழங்காததை கண்டித்து நாகை நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சிக்கு உட்பட்ட காடம்பாடி என்.ஜி.ஓ. காலனி, மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் சரிவர கிடைக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த காடம்பாடி என்.ஜி.ஓ. காலனி, மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் நாகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அப்போது முறையாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக தடையின்றி குடிநீர் வழங்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், தண்ணீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அலுவலர்கள் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    குடிநீர் சரிவர வழங்காததால் நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகையில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் திருமண மண்டபத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சி எல்லைக்குட்பட்ட நீலா மேலவீதியில் உள்ள தனியார் திருமண மண்டப கட்டிடம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் ஒலி எழுப்பப்படுவதும், போதுமான வாகன நிறுத்தும் இடம் இல்லாமலும், அனுமதி இன்றி கட்டபட்டிருப்பதாக ஒருவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பின்படியும், நகராட்சிகள் சட்டப்பிரிவின் படியும், கட்டிடத்தை பூட்ட வேண்டும் என அறிவிப்பு உரிமையாளருக்கு வழங்கப்பட்டது.

    இருந்தும் தொடர்ந்து அந்த திருமண மண்டப கட்டிடத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

    இது சட்டத்திற்கு எதிராகவும், பசுமை தீர்ப்பாயத்தை அவமதிக்கும் செயலாகும் கருதப்படுகிறது. எனவே பசுமை தீர்ப்பாய தீர்ப்பின்படி நேற்று நகராட்சி ஆணையர் ஏகராஜ் தலைமையில் நகரமைப்பு அலுவலர் முருகானந்தம், நகரமைப்பு ஆய்வாளர்கள் செல்வராஜ், செல்வம் ஆகியோர் கொண்ட குழுவினர் போலீசார் பாதுகாப்புடன் தனியார் திருமண மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    காசநோய் ஆரம்ப அறிகுறி இருந்தால் அலட்சியமாக இருக்க கூடாது என கலெக்டர் பிரவீன்நாயர் அறிவுறுத்தி உள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். சுகாதார பணிகள் இணை இயக்குனர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.

    துணை இயக்குனர் (காசநோய்) ராஜா வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர், காசநோய் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க, டாக்டர்கள், செவிலியர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    காச நோயை அறவே ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காசநோய் ஆரம்ப அறிகுறிகளான 2 வாரங்களுக்கு மேல் இருமல், மாலை நேரக்காய்ச்சல், பசியின்மை, எடை குறைதல் உள்ளிட்டவை இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

    மற்ற நோய்களை போலவே காசநோயும் கிருமிகளால் வரக்கூடியது. எனவே யாரும் இதில் அலட்சியமாக இருக்க கூடாது. காசநோயை முற்றிலும் ஒழித்து, காச நோய் இல்லா தமிழகம் 2025 என்கிற இலக்கினை அடைய அனைவரும் பாடுபடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து காசநோய் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். மேலும் காசநோய் குறித்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகையில், அடிப்படை வசதி கோரி சட்டசபை தேர்தலை புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை-நாகூர் மெயின் ரோட்டில் சந்திராகார்டன் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 121 மனைகள் அமைந்துள்ளது. 600-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குடியிருப்பு பகுதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இதுநாள் வரை குடிநீர் வசதி, சாலை வசதி, தெருமின்விளக்கு வசதி, பாதாளசாக்கடை வசதி என்று எந்த அடிப்படை வசதியும் இல்லை.

    இவ்வாறு எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத இந்த பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கடந்த 5 ஆண்டு காலமாக மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் என சம்பந்தப்பட்ட எல்லா துறையிடமும் மனு கொடுத்துள்ளனர்.

    ஆனால் இதுநாள் வரை எவ்வித பயனும் இல்லை. இதையடுத்து இந்த பகுதி மக்கள் வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக தங்களது குடியிருப்பு பகுதியில் பேனர்கள் வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, ‘சந்திரா கார்டன் உருவாக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. நகராட்சியில் உரிய அனுமதி பெற்று குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இது நாள்வரை எந்தவித அடிப்படை வசதியும் இங்கு இல்லை.

    இரவு நேரங்களில் 6 மணிக்கு மேல் யாரும் எங்கள் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியே செல்லவும் முடியாது. குடியிருப்பு பகுதிக்குள் வரவும் முடியாது. தெருவிளக்கு வசதி இல்லாத காரணத்தால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணபடும்.

    மழை பெய்தால் தண்ணீர் வடிய வடிகால் வசதி இல்லாத காரணத்தால் குடியிருப்பு பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்துவிடும். ஆனால் நகராட்சிக்கு வரி செலுத்துகிறோம். பாதாள சாக்கடை இணைப்பு இல்லை. ஆனால் பாதாள சாக்கடை இணைப்பு வரியை நகராட்சி வசூல் செய்கிறது.

    அடிப்படை வசதி கோரி பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் வேறு வழி இல்லாமல் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு எடுத்துள்ளோம். எங்கள் பகுதிக்கு வாக்குகள் கேட்டு எந்த கட்சி வேட்பாளர் வந்தாலும் ஆதரவும் தெரிவிக்க மாட்டோம். எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டோம். ஆனால் வாக்குப்பதிவு தினத்தில் வாக்கு செலுத்தும் இடத்திற்கு செல்லாமல் தேர்தலை புறக்கணிப்போம்’ என்றனர்.

    இந்த பகுதி மக்களின் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக நாகை-நாகூர் பிரதான சாலையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து சி.பி.சி.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் தேர்தல் புறக்கணிப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திட்டச்சேரி:

    நாகையை அடுத்த பனங்குடியில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை(சி.பி.சி.எல்.) இயங்கிவந்தது. இந்த ஆலையில் தற்போது விரிவாக்கம் செய்ய உள்ள காரணமாக 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், எஞ்சிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணிக்காலம் முடிவடையும் வரை உத்தரவாதத்துடன் கூடிய எழுத்துப்பூர்வ பணி வழங்க கோரியும்சி.பி.சி.எல். அமைப்பு சாரா ஒப்பந்த தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து சி.பி.சி.எல். அமைப்பு சாரா ஒப்பந்த தொழிலாளர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இதை தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பேட்ஜ் அணிந்து சி.பி.சி.எல். ஆலை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்புசாரா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுச் செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஆலை நிர்வாகத்தை கண்டித்து கோ‌‌ஷங்களை எழுப்பினர்.பின்னர் அனைவரும் பணியில் ஈடுபட்டனர்.
    குரவப்புலம் வெள்ள கேட் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை சேர்ந்த கிராமின் கோட்டா என்ற மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் பணிபுரிபவர் வேதாரண்யம் பகுதி வெள்ளப்பள்ளம், அவரிக்காடு கிராமங்களில் கொடுத்த கடன் வசூல் செய்துகொண்டு திரும்பினார்.

    குரவப்புலம் வெள்ள கேட் அருகே பறக்கும் படையினர் வாகனத்தை சோதனையிட்டு அவர் வைத்திருந்த ரூ.64 ஆயிரத்து 355-ஐ பறிமுதல் செய்து வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    நாகை மாவட்டத்தில் 1510 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் மது குற்றங்களை தடுக்கும் பொருட்டு எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா. உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    ரகசிய தகவலின் படி கீழ்வேளூர் காவல் சரகம் சிக்கல் குற்றம் புறிந்தானிருப்பு பகுதியிலுள்ள ஐயர் தனபால் என்பவரது வயலில் உள்ள வைக்கோல் போரில் வி‌ஷ சாராயம் 1400 லிட்டர் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் இதனை பதுக்கி வைத்திருந்த சஞ்சய் மற்றும் அவரது நண்பர்களான குமரேசன், ஐயர் தனபாலன், பேட்டை ரகு என்கிற ரகு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் துணை காவல் ஆய்வாளர் கார்த்திக் என்பவரது தலைமையில் வாகன சோதனை மேற்கொண்டபோது அவ்வழியே வந்த இருசக்கர வாகனங்களை சோதனை செய்தனர்.

    அப்போது சங்கமங்கலம் பகுதியை சேர்ந்த சிவா (வயது 20). என்பவரது வாகனத்தில் 110 லிட்டர் வீதம் 600 பாக்கெட்டுகள் சாராயம் கைப்பற்றப்பட்டன. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளி சிவாவை கைது செய்தனர்.

    நாகையில் கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்டவற்றை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகை நகர பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பப்ளிக்ஆபீஸ் சாலையில் சந்தேகப்படும்படி நின்ற ஒருபெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகை தர்மகோவில் தெருவை சேர்ந்த கலா (வயது40) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர் விற்பனைக்காக 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதே பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்ற ஒரு முதியவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த பசுபதி (60) என்பதும், விற்பனைக்காக 300 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கலா, பசுபதி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    கீழ்வேளூர் அருகே ஆற்றில் மணல் அள்ளிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே கோகூர் வெட்டாறு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது கோகூர் சிவன் கோவில் பின் பகுதியில் வெட்டாற்றில் சிலர் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணல் அள்ளிய 7 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கோகூர் பகுதியை சேர்ந்த குமார் (38), பிரபு (19), வீரசேகர் (23), ராஜமோகன் (43), ஆசைதம்பி (37), ரமேஷ் (35), தொழுவத்துமேடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 7 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி அருகே பறவை அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (62). சம்பவத்தன்று இவர் பறவை காய்கறி சந்தையில் இருந்து காய்கறிகளை வாங்கி கொண்டு அரசு பஸ்சில் ஏறி நாகை வந்தார். நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் வந்து நின்றவுடன் காய்கறி மூட்டைகளுடன் அமிர்தலிங்கம் இறங்கியபோது தடுமாறி கீழே விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

    இது குறித்து வெளிப் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    மீனவர்களின் மீன்கள் கெடாமல் இருக்க மீன் குளிரூட்டும் கிடங்கு அமைக்கப்படும் என்று நாகையில் டி.டி.வி.தினகரன் பேசியுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகை சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் மஞ்சுளா சந்திரமோகன், கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் நீதி மோகன், வேதாரண்யம் தொகுதி வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து நாகை அவுரி திடலில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    லஞ்சம் லாவண்யம் இல்லாத ஆட்சியை உருவாக்குவோம். வெளிப்படையாக நிர்வாகத்தை மேற்கொள்வோம். அனைவருக்கும் வேலை வாய்ப்பு செய்து தரப்படும். தேர்தலுக்காக எடப்பாடி பழனிச்சாமி பொய் வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். இட ஒதிக்கீடு பிரச்சனையில் பொய் கூறி வருகிறார். ஒவ்வொரு சமுதாயத்தையும் எடப்பாடி ஏமாற்றி வருகிறார். அதேபோல் தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது. அவர்களும் பொய் வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர்.

    நாகூர் வெட்டாறு தடுப்பணையை அமைத்து நாகை மாவட்டங்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்கப்படும். பனங்குடி பெரிய ஏரியை தூர் வாரி மழை நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களின் மீன்கள் கெடாமல் இருக்க மீன் குளிரூட்டும் கிடங்கு அமைக்கப்படும். நாகூர் தர்கா யாத்திரிகர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அரசு தங்கும் விடுதி ஏற்படுத்தி தரப்படும். நாகையில் கருவாடு ஊற தளம் அமைக்கப்படும். மீனவர்களின் கடன்களை ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×