search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நாகையில் கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட 2 பேர் கைது

    நாகையில் கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்டவற்றை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகை நகர பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பப்ளிக்ஆபீஸ் சாலையில் சந்தேகப்படும்படி நின்ற ஒருபெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகை தர்மகோவில் தெருவை சேர்ந்த கலா (வயது40) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர் விற்பனைக்காக 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதே பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்ற ஒரு முதியவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த பசுபதி (60) என்பதும், விற்பனைக்காக 300 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கலா, பசுபதி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×