என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
நாகையில் பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி
நாகப்பட்டினம் அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணி அருகே பறவை அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (62). சம்பவத்தன்று இவர் பறவை காய்கறி சந்தையில் இருந்து காய்கறிகளை வாங்கி கொண்டு அரசு பஸ்சில் ஏறி நாகை வந்தார். நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் வந்து நின்றவுடன் காய்கறி மூட்டைகளுடன் அமிர்தலிங்கம் இறங்கியபோது தடுமாறி கீழே விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இது குறித்து வெளிப் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






