என் மலர்
செய்திகள்

மாயம்
திட்டச்சேரி அருகே திருமணமாகி 20 நாளில் புதுப்பெண் மாயம்
திட்டச்சேரி அருகே திருமணமாகி 20 நாளில் புதுப்பெண் மாயமானது தொடர்பாக அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
திட்டச்சேரி அருகே பாகொந்தை கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28).
இவருக்கும் நாகை பெரியார் நகரை சேர்ந்த கிருஷ்ணவேணி (24)என்பவருக்கும் இடையே கடந்த 20 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
சம்பவத்தன்று கிருஷ்ணவேணி வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிருஷ்ணவேணியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து உதயகுமார் திட்டச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணவேணியை தேடி வருகின்றனர்.
திட்டச்சேரி அருகே பாகொந்தை கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 28).
இவருக்கும் நாகை பெரியார் நகரை சேர்ந்த கிருஷ்ணவேணி (24)என்பவருக்கும் இடையே கடந்த 20 நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
சம்பவத்தன்று கிருஷ்ணவேணி வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிருஷ்ணவேணியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து உதயகுமார் திட்டச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணவேணியை தேடி வருகின்றனர்.
Next Story






