என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேதாரண்யத்தில் பறவைகளை சுட்டு வேட்டையாடியவர் கைது

    வேதாரண்யத்தில் பறவைகளை சுட்டு வேட்டையாடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலய வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தஞ்சாவூர் மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், வனஉயிரினக் காப்பாளர் கலாநிதி ஆகியோரின் உத்திரவின்படி ரோந்து பணி மேற்கொண்டனர்

    அப்பொழுது கீழ ஆறுமுக கட்டளை பகுதியை சேர்ந்த விஜயன் (வயது 35) என்பவர் அப்பகுதியில் உள்ள நாடேட்டி குளத்தில் வரும் பறவைகளை ஏர்கன் மூலம் சுட்டுகொண்டிருந்தார். இதை பார்த்த வனவர் சதீஷ்குமார், வனக்காப்பாளர் முனியசாமி, வேட்டை தடுப்பு காவலர்கள் சுதாகர், லோகநாதன் ஆகியோர் விஜயகுமாரை கைது செய்தனர்.

    Next Story
    ×