என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    நாகையில் பஸ் சக்கரத்தில் சிக்கி வியாபாரி பலி

    நாகையில் அரசு பஸ் மீது மொபட் மோதிய விபத்தில் வியாபாரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் செட்டித் தெருவை சேர்ந்தவர் ஹாஜா அலாவுதீன் (வயது 50). இவர் நாகை மாவட்டம் பரவை சந்தை சாலையோரத்தில் வளையல் உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்து வந்தார். கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நேற்று ஹாஜா அலாவுதீன் தனது மொபட்டில் நாகைக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது புத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, எதிரே திருவாரூரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சின் மீது எதிர்பாராதவிதமாக மொபட் மோதியது. இதில் பஸ் சக்கரத்தில் சிக்கிய ஹாஜா அலாவுதீன், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமே‌‌ஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹாஜா அலாவுதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×