என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • எம்.ஜி.ஆர். சிலை அருகே ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • அரிசி மூட்டைகளை திருக்குவளையில் உள்ள குடோனுக்கு நுகர்பொருள் வணிப கழக அதிகாரி ஏற்றிச்சென்றுவிட்டார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வானவன் மகாதேவி மீனவர் காலனியை சேர்ந்தவர் விஜய் (வயது 22). இவர் கடந்த 29-ந் தேதி நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த தனது உறவினர் சத்தியமாலா (28) என்பவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு நாகைக்கு சென்றுள்ளார்.

    அப்போது, விழுந்தமாவடியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்த சத்தியமாலாவை சிகிச்சைக்கு நாகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து வேட்டைகாரணிருப்பு போலீசார் வழக்குபதிவு செய்து ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    மேலும், தப்பிய லாரி டிரைவர் ஜெகதீசனை தேடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை போலீஸ் நிலையத்தில் நிறுத்திவைத்திருந்த லாரியில் இருந்த அரிசி மூட்டைகளை திருக்குவளையில் உள்ள குடோனுக்கு நுகர்பொருள் வணிப கழக அதிகாரி ஏற்றி சென்றுவிட்டார்.

    இதையறிந்து விபத்தில் பாதிக்கப்பட்ட உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்யக்கோரி வேட்டைகாரணிருப்பு போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி லாரி டிரைவரை கைது செய்வதாக உறுதியளித்தின் பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது.

    இதனால், நாகை- வேதாரண்யம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    • வருவாய்துறை, தீயணைப்புதுறை மற்றும் அனைத்து துறைகளும் ஒன்றாக இணைந்து மக்களுக்கு செயல் விளக்கமும், பயிற்சியும் அளித்தனர்.
    • மழை, வெள்ளம் போன்ற பேரிடர் ஏற்படும் போது மக்கள் மற்றும் கால்நடைகளை காப்பது குறித்து செய்து காட்டினர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பாலசமுத்திர குளத்தில் பேரிடர் காலங்களில் மனிதன், கால்நடைகளை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பௌலின் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புதுறை, மின்சாரதுறை, கால்நடைதுறை, போக்குவரத்துதுறை போலீசார் வீட்டு அனைத்து துறைகளும் ஒன்றாக இணைந்து மக்களுக்கு செயல் விளக்கமும், பயிற்சியும் அளித்தனர்.

    பயிற்சியில் மழை, வெள்ளம் போன்ற பேரிடர் ஏற்படும் போது மக்கள் மற்றும் கால்நடைகளை காப்பது குறித்து செய்து காட்டினர். நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின், தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகன் இருவரும் பயிற்சியாளருடன் குளத்தில் பயிற்சியில் ஈடுபட்டது மக்களிடையே மிகுந்த நம்பிக்கையை பெற்றது.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் தாசில்தார் ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ரவி உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    • அடிப்படை வசதிகள் இல்லாத குறை நீடித்து வருவதால் கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
    • கல்லூரி சுற்றுப்புறத்தில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த செல்லூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 700 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மழை காலங்களில் கல்லூரி வாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கி இருப்பதாலும், கழிவறை, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத குறை நீடித்து வருவதாலும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துதர வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரி சுற்றுப்புறத்தில் தேங்கியுள்ள மழைநீரை வடியவைக்க வேண்டும், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென கோஷங்களை எழுப்பினர். அடிப்படை வசதிகளை துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக சரிசெய்து கொடுக்கவில்லை என்றால், தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.    

    • விவசாயிகளின் போராட்ட கோரிக்கைகளை ஒப்புதல் அளித்தபடி உடன் அமல்படுத்த வேண்டும்.
    • குறுவை சாகுபடிக்கு காப்பீட்டு திட்ட இழப்பீட்டை வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வலியுறுத்தி டார்ச் லைட் அடித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி, துணை தலைவர் தியாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் ஆர்ப்பாட்டத்தில் பேசினார். இதில் 13 மாத கால விவசாயிகளின் போராட்ட கோரிக்கைகளை ஒப்புதல் அளித்தபடி உடன் அமல்படுத்த வேண்டும், கோயில், மடம், அறக்கட்டளை, வக்போர்டு குத்தகை விவசாயிகள் தொடர் பேரிடர் பாதிப்புகளின் குத்தகை பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    குறுவை சாகுபடிக்கு காப்பீட்டுத் திட்ட இழப்பீட்டை வழங்க வேண்டும், 2021-22 சம்பா காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும், வேளாண் இடு பொருள்களான யூரியா, டி.ஏ.பி பொட்டாஷ் உரங்களை கூட்டுறவு வங்கி மூலம் தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகளின் போராட்ட கோரிக்கைகளை ஒப்புதல் அளித்தபடி உடன் அமல்படுத்த வேண்டும்.
    • குறுவை சாகுபடிக்கு காப்பீட்டு திட்ட இழப்பீட்டை வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வலியுறுத்தி டார்ச் லைட் அடித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி, துணை தலைவர் தியாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் ஆர்ப்பாட்டத்தில் பேசினார். இதில் 13 மாத கால விவசாயிகளின் போராட்ட கோரிக்கைகளை ஒப்புதல் அளித்தபடி உடன் அமல்படுத்த வேண்டும், கோயில், மடம், அறக்கட்டளை, வக்போர்டு குத்தகை விவசாயிகள் தொடர் பேரிடர் பாதிப்புகளின் குத்தகை பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    குறுவை சாகுபடிக்கு காப்பீட்டுத் திட்ட இழப்பீட்டை வழங்க வேண்டும், 2021-22 சம்பா காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும், வேளாண் இடு பொருள்களான யூரியா, டி.ஏ.பி பொட்டாஷ் உரங்களை கூட்டுறவு வங்கி மூலம் தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • குறைந்தபட்சம் 3 கட்ட பதவி உயர்வு பெறுவது அவர்களுடைய பணித்தன்மையில் மாற்றத்தை உருவாக்கி, அவர்களுக்கான மனச்சோர்வை நீக்குவதாகவும் இருக்கும்.
    • உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி வழங்கிட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்புவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அ.தி.அன்பழகன், மாநில துணைத் தலைவர் பி.நல்லத்தம்பி மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

    அதில் 5.8.11 முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி தமிழகத்தில், உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் கீழ், உணவு பாதுகாப்பு பிரிவில், உணவு பாதுகாப்பு அலுவலர்களாக நாங்கள் பணிபுந்து வருகிறோம்.

    ஒவ்வொரு அரசு ஊழியரும் தம்முடைய பணிக்காலத்தில் குறைந்த பட்சம் 3 கட்ட பதவி உயர்வு பெறுவது, அவர்களுடைய பணித் தன்மையில் மாற்றத்தை உருவாக்கி, அவர்களுக்கான மனச்சோர்வை நீக்குவ தாகவும் இருக்கும்.

    இது குறித்து தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் 5.4.22 அன்று பங்கேற்று சிறப்புரையாற்றிய அமைச்சர் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதிவு உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமான கோரிக்கை.

    இது குறித்து அரசு பரிசீலித்து, விரைவில் தக்க முடிவெடுத்து, பதவி உயர்வு வழங்கும் " என்று உறுதியளித்தார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எந்தவொரு பதவி உயர்வும் இல்லாமல் பணியாற்றி, அரசுப் பணியை நிறைவுசெ ய்யவுள்ள உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு, உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி, அவற்றை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் முதன்மைச் செயல் அலுவலர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலா ளர் ஆகியோர் பரிந்துரை ப்படியும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்ட விதிகளின்படியும், பல்வேறு மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது போலவும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை உருவாக்கி வழங்கிட வேண்டும்.

    உணவு கலப்பட தடுப்புச் சட்டம் 1954-ன்படி உணவு ஆய்வாளர் பயிற்சி முடித்து, உணவு ஆய்வாளராக பணியாற்றி, பின்னர் 5.8.2011 முதல் நடைமுறைக்கு வந்துள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பயிற்சியும் பெற்று, உணவு பாதுகாப்பு அலுவலர்களாக கடந்த 11 ஆண்டுகள் பணியை முடித்துள்ளோம்.

    உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளின்படி உரிய தகுதிகள் பெற்றிருந்தும் கடந்த காலத்தில் எதிர்பார்ப்பை நிறைவேற்றாததால் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கப்படாமல் இருந்ததை மாற்றி பணிப் பாதுகாப்பு உத்தரவை வழங்கிய அமைச்சர் எந்தவொரு பதவி உயர்வும் இல்லாமல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அரசுப் பணியை நிறைவு செய்யும் நிலையை போக்கி, உரிய பதவி உயர்வு வாய்ப்புக்களை உருவாக்கி, வழங்கிட வேண்டும்

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

    .நாகைமாலி எம்.எல்.ஏ உணவுபாதுகாப்பு அலுவலர்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து உரிய உத்தரவுகளை வழங்க அமைச்சரை கேட்டுக்கொண்டார்.

    • பல லட்சம் செலவில் சுமார் 30 அடி நீளத்தில் பர்மா தேக்கிலான கொடி மரத்தை வாங்கி உபயோகமாக அளித்துள்ளார்.
    • மரம் கோவிலின் உள் பிரகாரத்தில் மழையிலும், வெயிலிலும் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதார ண்யேஸ்ரர் ்கோவிலுடன் இணைந்த தோப்புத்துறை அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவில் வேத நாராயணன் அபீஷ்ட வரதராஜ பெருமாள்என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    ராமர் இலங்கைக்கு செல்வதற்கு முன்னர் தோப்புத் துறையில் உள்ள திருமாலை வழிபட்டதாகவும் கோவிலின் முகப்பில் அவர் பெயரால் ஒரு தீர்த்தம் அமைத்ததாகவும் கூறப்படுகிறது. ்இக்கோவிலில் கடந்த 2005ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அப்பொழுது கொடி மரத்தை புதிதாக புதுப்பிக்க பக்தர் ஒருவர் பல லட்ச ரூபாய் செலவில் சுமார் 30 அடி நீளத்தில் பர்மா தேக்கிலான கொடி மரத்தை வாங்கி உபயோகமாக அளித்துள்ளார்

    4 ஆண்டுகளாக மரம் கோவிலின் உள் பிரகாரத்தில்மழை வெயில் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. அறநிலைய துறையின் அனுமதி பெற்று அமைக்க வேண்டும் என்ற காரணத்தால் 4 ஆண்டுகளாக அப்படியே கிடக்கிறது. கொடிமரம் அமைக்க அறநிலையத்துறை அனுமதி அளிக்காமல் இழுத்தடித்து வருகின்றனர்

    உபயதாரர்கள் செய்ய முன்வந்தும் அறநிலைய த்துறையின் அலட்சியப் போக்கால் பல லட்ச ரூபாய் மரம்தற்போது வீணாகும் நிலையில் உள்ளது முன்பு இங்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய கொடி மரமும் மழையில் முறிந்து விழுந்து விட்டது.

    இதனால் ஆண்டு பெருவிழாவிற்கு தற்போது புதிதாக சிறிய அளவில் ஆர்எஸ்பதி மரத்தில் கொடிமரம் நட்டு அதில் கொடியேற்றம் நடைபெற்று உள்ளது எனவே உடனடியாக கொடிமரம் அமைக்க அறநிலைய துறை அனுமதி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தொடர்ந்து பெய்துவரும் மழையால் வேதாரண்யத்தில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது.
    • மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் உப்பு ஏற்றுமதி பணியும் அடியோடு பாதிக்கபட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்வே தாரண்யம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது.

    இதனால் வயல்களில் ஒரு அடி தண்ணீர் தேங்கி உள்ளது.

    இதனால் மானாவாரி பகுதி விவசாயிகள் கோடை உழவு செய்ய முடியமாலும், நேரடி நெல் விதைப்பு செய்ய முடியாமல் உள்ளனர்.

    தொடர்ந்து பெய்துவரும் மழையால் வேதாரண்யத்தில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது.

    அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு,கடிநெல்வயல், பகுதியில் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் உப்பு ஏற்றுமதி பணியும் அடியோடு பாதிக்கபட்டுள்ளது.

    மழையால்சுமார் 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குசெல்லவில்லை.

    தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுகிறது விட்டுவிட்டு மழை பெய்ததால்வியாபாரம் பாதிக்கப்பட்டு கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    • இந்தியாவிலேயே முதல்முறையாக அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
    • கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அங்கிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் ஒவ்வொரு ஆண்டும் 32 அடியில் அட்டையினால் செய்யப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.

    35 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து இந்த ஆண்டு விஸ்வரூப விநாயகர் குழு சார்பாக 32 அடியில் இந்தியாவிலேயே முதல்முறையாக அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    திருச்சியில் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் 12 டன் எடையில் பிரத்யேகமாக செய்யப்பட்ட வாகனத்தில், 3200 கன அடி அத்தி மரத்தில் 4 டன் எடையில் செய்யப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டார். நாகை நீலாய தாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    விநாயகர் ஊர்வலத்தில் மங்கள வாத்தியங்கள், தப்பாட்டம், மயிலாட்டம், காளியாட்டம், செண்டை மேளம், கேரளத்து கதகளி, பேண்டு வாத்தியங்கள் என கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அங்கிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. நாகையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக விடியற்காலை நாகூர் வந்தடைந்ததை அடுத்து, நாகூர் வெட்டாறில் பிரதிஷ்டை செய்யப்பட்ட களிமண் விநாயகர் கரைக்கப்பட உள்ளது.

    32 அடி அத்தி விநாயகர் மற்றும் நாகை மாவட்டத்தில் 290 விநாயகர் ஊர்வலம் நடைபெறுவதால் எஸ்.பி ஜவஹர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று தீபாரதனை நடைபெற்றது.
    • இந்து முஸ்லிம் கிறிஸ்வர் உள்ளிட்ட மும்மதத்தினர் கலந்து கொண்ட விநாயகர் ஊர்வலம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டது.

     வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கருப்பம்பலத்தில் அமைந்துள்ள காசிவிஸ்வநாத திருசிற்றம்பல விநாயகர் ஆலயத்தில்மத நல்லிணக்க விநாயக ஊர்வலம் நடைபெற்றது

    முன்னதாக கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று தீபாரதனை நடைபெற்றது பின்பு இந்து முஸ்லிம் கிறிஸ்வர் உள்ளிட்ட மும்மதத்தினர் கலந்து கொண்ட விநாயகர் ஊர்வலம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டது

    நிகழ்ச்சிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிவி ராஜேந்திரன் தலைமை வகித்தார் குருகுல நிர்வாகி வேதரத்தினம் முன்னிலை வகித்தார் விநாயகர் ஊர்வலத்தை புனித அந்தோனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் நித்திய அஜய்ராஜ்தோப்புத்துறை ஜமாத்தைச் சேர்ந்த அமீர் சுல்தான், அப்சல் உசேன், மெய்யாரபிக், தாணிக் கோட்டகம் ஆரோபால்ராஜ் மற்றும் வேதாரண்யம் தொழிலதிபர் விஜயபாலன், வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கமம் கோவிந்தராஜ், நகர காங்கிரஸ் தலைவர் அர்ஜுனன், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்ட ஏராளமான இந்து, முஸ்லிம் கிறிஸ்வர்கள் கலந்து கொண்டு தேங்காய் உடைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

    விநாயகர் ஊர்வலம் ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்று சம்பலம் ஏரியில் விசர்ஜனம் செய்யப்பட்டது இதேபோல்வி நாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதியில் 30 இடங்களில் விநாயகர் சிலைகள் மூன்று அடிமுதல் 12 அடி உயர விநாயகர் சிலைகள் வைக்கபட்டு உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் பூஜை செய்துவந்தனர் இந்த நிலையில் இன்று புஷ்பவனம், செம்போடை,தோப்புத்துறை வேதாரண்யம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது இதில் ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர்.

    • வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பின்பு கோவிலில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புதுறையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அபிஷ்ட வரதராஜபெருமாள் கோவில் உள்ளது.

    இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

    முன்னதாக வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பின்பு கோவிலில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது .

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வரதராஜ பெருமாளை வழிபட்டனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டு திருவிழா நாள்தோறும் சாமி வீதியுலா காட்சியும் திங்கட்கிழமை திருகல்யாணமும்நடைபெறுகிறது.

    • வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் இலவசமாக வழங்கும் விழா நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
    • காய்கறி பழங்கள் விற்பனை செய்பவர்களுக்கும், பூ வியாபாரம் செய்பவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் சாலை ஓர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் இலவசமாக வழங்கும் விழா நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் வகித்தார் நிகழ்ச்சியில் ரூ. 22.50 லட்சம் மதிப்புள்ள 21 காய்கறி பழங்கள் விற்பனை செய்பவர்களுக்கும், .10 பூ வியாபாரம் செய்பவர்களுக்கும் சேர்த்து 31 வண்டிகளை நகர மன்ற தலைவர் புகழேந்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா ஒன்றிய பொறியாளர் முகமது இப்ராஹிம் துணை தலைவர் மங்களநாயகி மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×