search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு கல்லூரியில் மாணவிகள் வகுப்பு புறக்கணித்து போராட்டம்
    X

    போராட்டம் நடத்திய கல்லூரி மாணவிகள்.

    அரசு கல்லூரியில் மாணவிகள் வகுப்பு புறக்கணித்து போராட்டம்

    • அடிப்படை வசதிகள் இல்லாத குறை நீடித்து வருவதால் கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
    • கல்லூரி சுற்றுப்புறத்தில் தேங்கியுள்ள மழைநீரை வடிய வைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த செல்லூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 700 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மழை காலங்களில் கல்லூரி வாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கி இருப்பதாலும், கழிவறை, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத குறை நீடித்து வருவதாலும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துதர வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரி சுற்றுப்புறத்தில் தேங்கியுள்ள மழைநீரை வடியவைக்க வேண்டும், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென கோஷங்களை எழுப்பினர். அடிப்படை வசதிகளை துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக சரிசெய்து கொடுக்கவில்லை என்றால், தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    Next Story
    ×