என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • ரூ.2.40 லட்சம் செலவில் பயனாளி ஒருவருக்கு வீடு கட்டும் பணி ஆய்வு.
    • ரூ.1.90 லட்சம் செலவில் நூலக கட்டிடம் பழுது பார்க்கும் பணி ஆய்வு.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகணி வாய்க்கால் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ. 5.25 லட்சம் செலவில் மிக விரைவில் தூர்வாரப்பட உள்ள பணியையும், தொடர்ந்து, வள்ளுவக்குடி ஊராட்சியில் பிரதம மந்திரி குடியி ருப்பு திட்டத்தின் கீழ் ரூ 2.40 லட்சம் செலவில் பயனாளி ஒருவர் வீடு கட்டும் பணியினையும், அதனைத் தொடர்ந்து, கொண்டல் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ 2.40 லட்சம் செலவில் பயனாளி ஒருவர் வீடு கட்டும் பணியினையும், கழுமலை ஆறுவாய்க்கால் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.14.5 இலட்சம் செலவில் மிக விரைவில் தூர்வாரப்பட உள்ள பணியையும், ஆதிதிராவிடர் கீழத்தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியினையும் மாவட்ட கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அங்கு செயல்படும் ரேஷன் கடையில் பொது மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.90 லட்சம் செலவில் நூலக கட்டிடம் பழுது பார்க்கும் பணியி னையும், ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியின் போது பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை செயற்பொறி யாளர் சண்முகம், உதவி பொறியாளர்கள் கனக.சரவணன்,சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், இளங்கோவன், பொறியாளர்கள் கலையரசன், சிவக்குமார், தெய்வானை, உடன் இருந்தனர்

    • அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
    • 5 ஆண்டுகள் முடிந்த மினி மைய ஊழியர்களுக்கு நிபந்தனை இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பேபி தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் லதா முன்னிலை வகித்தனர். செம்பனார்கோயில் ஒன்றிய பொருளாளர் ஷகிலாபானு அனைவரையும் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்ட த்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    அங்கன்வாடி மையங்களுக்கு வெயிலின் தாக்கத்தால் மே மாதம் விடுமுறை வழங்க வேண்டும் 10வருடம் பணிபு ரிந்த பணியாளர்களுக்கு எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    5 ஆண்டுகள் முடிந்த மினி மைய ஊழியர்களுக்கு நிபந்தனை இன்றி பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்ேவறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    பின்னர் மாவட்ட கலெக்டர் ஏ.பி மகாபார தியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட தலைவர் ரவீந்திரன், மாவட்ட துணை செயலாளர் ராமானுஜம், மாவட்ட துணை தலைவர் ராணி எலிசபெத், துணை செயலாளர் மணிமேகலை, மயிலாடுதுறை ஒன்றியம் தலைவர் சுகுணா, செய்லர் கவிதாரூத், பொருளாளர் மரகதம். செம்பனார்கோயில் ஒன்றியம் வள்ளி.

    மகேஸ்வரி, சீர்காழி ஒன்றியம் கிருஷ்ணவேணி, ரேவதி, மல்லிகா, குத்தாலம் ஒன்றியம் லட்சுமி, சுமதி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.

    • கடற்கரையில் ஓசோன் காற்று அதிகம் வீசப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
    • தூய்மை பணி மேற்கொள்ள பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமான ஒன்றாகும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் ராட்சத பலூன்களை பறக்க விட்டனர்.

    அப்போது கலெக்டர் மகாபாரதி பேசியதாவது,

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியினால் பூம்புகார் சுற்றுலா தளம் ரூ.24 கோடி செலவில் பூம்புகார் சுற்றுலா தளம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    அதேபோல தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை மேம்படுத்தும் பணி மிக விரைவில் தொடங்கப்படும். தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை தற்போது அருங்காட்சியமாக உள்ளது.

    மேலும் இங்கே கடற்கரையில் ஓசோன் காற்று அதிகம் வீசப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

    இத்தகைய தரங்கம்பாடி சுற்றுலா தளத்தை பிரபலப்படுத்தும் விதமாக ஓசோன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    ஓசோன் என்பது ஆக்சிஜனின் மூலக்கூராகும். தூய்மை பண்ணி மேற்கொ ள்ள பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியமான ஒன்றாகும்.

    சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக வந்து செல்வதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சா ர்பில் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைந்த தஞ்சை மண்டல அமைப்பாளர் ஸ்ரீதர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாதவன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜேஷ், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி, செம்பனார்கோயில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணி, குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா, தரங்கம்பாடி பேரூராட்சி துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 4 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உள்ளது.
    • மீட்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சோதியக்குடி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் கைலாசநாதர் சுவாமி கோயில் உள்ளது.

    இந்த கோயிலுக்கு சோதியக்குடி மற்றும் கோபாலசமுத்திரம் ஆகிய கிராமங்களில் 4 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் உள்ளது.

    கோயிலுக்கு எந்த வருவாயும் இன்றி ஆக்கிர மிப்பு செய்யப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை தனி வட்டாட்சியர் கோயில் நில ஆவணங்கள் மற்றும் வருவாய் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது.

    தொடர்ச்சியாக இந்த நிலங்களை மீட்பதற்கு மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் முத்துராமன் ஆகியோரால் அறிவுறுத்தப்பட்டு வந்தது.

    அதன்படி மயிலாடுதுறை தனி வட்டாட்சியர் விஜயராகவன் தலைமையில் வி.ஏ.ஓ சங்கீதா முன்னிலையில் கோயில் செயலாளர் அன்பரசன், ஆய்வாளர் பிரனேஷ், கனக்கர் ராஜி ஆகியோரால் சொத்துக்கள் மீட்கப்பட்டு கோயில் வசம் எடுக்கப்பட்டது.

    மீட்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும். மீட்கப்பட்ட இந்த நிலங்கள் இணை ஆணையரின் அனுமதி பெற்று கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் முதல் முறையாக ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீட்கப்பட்ட இந்த நிலங்களில் எவரும் அத்து மீறி பிரவேசிக்கக் கூடாது எனவும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட இடத்தில் இது குறித்த தகவல் பலகையும் வைக்கப்பட்டது.

    • வேளாண் அதிகாரிகள் புறக்கணிப்பது குறித்து கலெக்டரிடம் புகார் அளிக்கப்படும்
    • பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

    ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராபியா நர்கீஸ்பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

    மோகன்தாஸ்:-

    கிடாரங்கொண்டான்- தலையுடையவர் கோயில்பத்து, பொன்செய்-முடிகண்டநல்லூர் ஆகிய பகுதியில் இணைப்பு பாலம் வேண்டும்.

    நாச்சிகட்டளை -தலைச்சங்காடு செல்லும் சாலையில் விவசாயிகள், பொதுமக்களுக்கு இடையூறாக பாதிப்புகளை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.

    ராஜ்கண்ணன்:-

    ஆக்கூரில் பிடாரி குளத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.

    புங்கையன் தோப்பு பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும்.

    சுப்பிரமணியன்:-

    கஞ்சாநகரம் அருகே மங்கனூர் கிராமத்தில் உள்ள பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும்.

    சக்கரபாணி:-

    கருவாழக்கரை மாரியம்மன் கோயில் பகுதியில் வடிகால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    மருதூர் அரசு பள்ளி நடுநிலைப் பள்ளி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.

    ரஜினி:-

    1-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட குளங்களை தூர்வார வேண்டும். சேமங்கலம், கொண்டத்தூர், பாகசாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.

    தேவிகா:-

    இலுப்பூர் ஊராட்சி எரவாஞ்சேரி- மாரியம்மன் கோயில் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    லெனின் தாஸ்:-

    காழியப்பநல்லூர் ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு ஆகியவற்றை தனிநபர் ஆக்கிரமித்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    டி.மணல்மேடு ஊராட்சியில் காடுவெட்டி, நடுவலூர், நட்சத்திரமாலை ஆகிய கிராமங்களுக்கு சுடுகாடு சாலை அமைத்து தரவேண்டும்.

    ஜெயந்தி:-

    தில்லையாடி-திருவிடைக்கழி இடையே பூச்சாத்தனூர் பகுதியில் உள்ள சேதமடைந்த பாலத்தை புதிதாக கட்டித் தர வேண்டும்.

    ஊராட்சியில் 100 நாள் பணியில் ஈடுபடும் மக்களுக்கு விடுபடாமல் சம்பளம் வழங்க வேண்டும்.

    இதுதொடர்பாக ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு ஒவ்வொரு கூட்டத்துக்கும் முன்கூட்டியே அழைப்புகள் விடுக்கப்படுகிறது.

    அவர்கள் இதுவரை எதிலும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருவதை கண்டித்து மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் அனுப்பப்படும்.

    உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஒன்றிய உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார், உள்ளிட்ட யூனியன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மங்கள வாத்தியங்கள் முழங்க எழுந்தருள செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • 3 முறை குளத்தை சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை திருஇந்த ளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் 5-வது தலமாகும்.

    இக்கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதன் சிகர விழாவான தெப்போற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பரிமள ரெங்கநாதர் பெருமாள், கோயில் திருக்குளத்தில் மின் விளக்குளால் அலங்கரிக்க ப்பட்ட தெப்பத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க எழுந்தருள செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்ப ட்டது.

    தொடர்ந்து, மூன்று முறை குளத்தைச் சுற்றி வந்து மீண்டும் நிலையை அடை ந்தது. இதில், கோயில் செயல் அலுவலர் ரம்யா, உதவி அலுவலர் விக்னேஸ்வரன், நகர மன்ற துணை தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    • மின்கம்பியையும், கம்பத்தையும் மாற்றி அமைத்துதர பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • திருப்பணி வேலைகள் முடிந்து கோவில் கும்பாபிஷேகம் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா

    பெரம்பூர் ஊராட்சி காளியம்மன்கோயில் தெருவை சேர்ந்த சுரேஷ் தலைமையில் பொதுமக்கள், கலெக்டர் மகாபாரதியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    எங்கள் ஊரில் உள்ள காளியம்மன்கோயில் மேலே மிகவும் ஆபத்தான நிலையில் மின்கம்பி தாழ்ந்து செல்வதால் கடந்த ஐந்து வருடங்களாக திருப்பணி வேலைகள் முடிந்து கோயில் கும்பாபிஷேகம் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம்.

    தற்பொழுது கோயில் கும்பாபிஷேகம் செய்ய முயற்சி செய்து வருவதால் மின்சாரம் ஓடிக்கொண்டி ருக்கும் மின் கம்பியால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    கோயிலுக்கு மேலே தாழ்ந்து செல்லும் மின்கம்பி யையும், கம்பத்தையும் மாற்றி அமைத்துதர மின்சார துறையில் பல முறை புகார் கொடுத்தும் எந்த வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே தாழ்ந்து செல்லும் மின் கம்பிகளையும், மின்கம்பத்தையும் மாற்றி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தரங்கம்பாடி கடற்கரையில் ஏப்ரல்,மே, ஜூன்,ஜூலை ஆகிய மாதங்களில் ஓசோன் காற்று அதிகமாக வீசுகிறது.
    • ஓசோன் காற்றின் மகத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி கூறினார்.

    மயிலாடுதுறை: 

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் ஏப்ரல்,மே, ஜூன்,ஜூலை ஆகிய மாதங்களில் ஓசோன் காற்று அதிகமாக வீசுகிறது. உடல் நலத்திற்கு நன்மை தரக்கூடிய இந்த ஓசோன் காற்றை சுவாசிக்க இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், டென்மார்க், ஜெர்மனி,சிங்கப்பூர், அமெரிக்கா,ஆஸ்திரிலியா,பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்

    இந்த நிலையில் ஓசோன் காற்றின் நன்மைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை கடற்கரையில் நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தஞ்சாவூர் மண்டலம், மயிலாடுறை மாவட்டம் மற்றும் தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் ஓசோன் செறிவு மண்டல விழிப்புணர்வு விழா நடந்தது.

    விழாவில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மாதவன் ஆகியோர் ஓசோன் காற்றின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கியாஸ் பலூனை ஆகாயத்தில் பறக்கவிட்டனர். தொடர்ந்து ஓசோன் காற்றின் மகத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பேசினார்.

    இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரிசங்கர், ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமரவேல், மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், பேரூராட்சி துணை தலைவர் பொன்.ராஜேந்திரன், செயல் அலுவலர் பூபதி கமலக்கண்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், சுற்றுலா அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சுபா கொற்கை கிராமத்தில் உள்ள தனது அம்மாவீட்டிற்கு சென்றிருந்தார்
    • வீட்டில் இருந்த பொருட்கள் பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.18 ஆயிரம் என அனைத்தும எரிந்து நாசமாகியுள்ளது.

    மயிலாடுதுறை: 

    மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள மன்னிப்பள்ளம் தெற்குத் தெருவில் வசித்து வருபவர் பாஸ்கர்.

    இவருடைய மனைவி சுபா (வயது 34).

    பாஸ்கர் கேரளாவில் வேலை பார்த்துவருகிறார். சம்பவத்தன்று சுபா கொற்கை கிராமத்தில் உள்ள தனது அம்மாவீட்டிற்கு சென்றிருந்தார்.

    அன்று இரவு பக்கத்துவீட்டை சேர்ந்தவர்கள் சுபாவின் வீடு எரிந்துகொண்டு இருப்பதாக செல்போன் மூலம் அவருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக சுபா தனது சகோதரருடன் மன்னிப்பள்ளம் சென்று பார்த்தபோது தனது வீடு முற்றிலும் எரிந்தது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.18 ஆயிரம் என அனைத்தும எரிந்து நாசமாகியுள்ளது.

    இது குறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ எவ்வாறு பிடித்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுமார் 800 ஆண்டுகள் முற்பட்டவை என தொல்லியத்துறை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
    • மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகள் குறித்து கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில், திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் (மே) 24-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்துக்கான யாக குண்டம் அமைப்பதற்காக நேற்று மதியம் மேற்கு கோபுரம் வாசல் அருகே உள்ள நந்தவனத்தில் யாகசாலை கட்டுமானத்திற்கு களிமண் எடுத்து பணிகள் மேற்கொள்ள பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, சுமார் 2 அடி ஆழம் பள்ளம் வெட்டியபோது சுவாமி சிலைகள் தென்பட்டது.

    தொடர்ந்து தோண்ட, தோண்ட அடுத்தடுத்து ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள், தங்கமுலாம் பூசிய கலசங்கள் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் முழுமையாக அவை வெளியில் எடுத்தபோது, ஐம்பொன் சிலைகளான விநாயகர், வள்ளிதேவசேனா சுப்ரமணியர், அதிகாரநந்தி, சுவாமி- அம்பாள், பூர்ண புஸ்கலா அய்யனார், திருஞானசம்பந்தர், சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட (அரை அடி முதல் சுமார் 2 அடி வரையிலான) 22 சுவாமி சிலைகள், தேவார பதிகம் பதியப்பட்ட 462 செப்பேடுகள், 15 சுவாமி பீடங்கள், தங்கமுலாம் பூசிய கலசங்கள், திருவாச்சிகள், பூஜைபொருட்கள், உலுக்கை உள்ளிட்டவைகள் கண்டெடுக்கப்பட்டது.

    கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சுவாமி சிலைகள் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்காலத்து சிலைகள், செப்பேடுகள் எனவும், இவை சுமார் 800 ஆண்டுகள் முற்பட்டவை என தொல்லியத்துறை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் வந்து பார்வையிட்டார். தொடர்ந்து, தகவலறிந்த மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், தொல்லியல் துறை மண்டல ஆலோசகர் மதிவாணன், சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும், மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகள் குறித்து கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார். மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் கோவிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திலேயே வைக்கப்பட்டது. தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் உரியவர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு நூலாக்க திட்ட குழுவை சேர்ந்த தாமரை பாண்டியன் அறிவுறுத்தலின் படி ஆய்வாளர்கள் சண்முகம், சந்தியா, சுவடி திரட்டுனர் விஸ்வநாதன், சுவடி பராமரிப்பாளர் பிரகாஷ் குமார் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் கோவிலுக்கு வருகைபுரிந்து கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை மட்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது சீர்காழி சட்டநாதர் கோவில்.
    • இங்கு தோண்ட தோண்ட பல ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

    இந்நிலையில், மேற்கு வாசல் கோபுரம் அருகே யாக சாலைக்காக மண் எடுக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது அங்கே 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம்,100-க்கும் மேற்பட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிலைகளின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படும் நிலையில், சம்பவ இடத்திற்கு தொல்லியல் துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

    கோவிலில் பல சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதனை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

    • பயன்பாடின்றி வீணாக எரிந்து கொண்டிருக்கக்கூடிய இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவது.
    • எரிவாயு பைப்லைன் ப்ராஜெக்ட் தொடர்பாக ஆய்வுகள் நடத்தபட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் பழைய கிராமத்தை இயங்கிவரும் ஓ.என்.ஜி.சி மற்றும் கெயில் நிறுவனத்தில் பிளான்ட் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    தொழில்துறை செயலாளர் அறிவுறுத்தலின் பேரில் சீர்காழி வட்டம் பழையபா ளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் செயல்பாடு களையும், தடையின்மை சான்று பெறப்படாமல் இயக்கத்திலி ருக்கும் துறப்பணக்கிண றுளின் நிலைப்பாடு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் இருந்து பயன்பாடின்றி வீணாக எரிந்து கொண்டிருக்கக்கூடிய இயற்கை

    எரிவாயுவை கெயில் நிறுவனத்தினர்

    பயன்படுத்து வது தொடர்பான சாத்திய கூறுகள் மற்றும் கடலோர பாதுகாப்பு மண்டலத்தில் அமையப்பெற்றுள்ள எரிவாயு பைப்லைன் ப்ராஜெக்ட் தொடர்பான தடையின்மைக்கான சாத்திய கூறுகள் தொடர்பாக ஆய்வுகள் நடத்தபட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்வாய்வின் போது மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர்,

    சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் ஓ.என்.ஜி.சி, கெயில், நிறுவனங்க ளின் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×