என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • இருசக்கர வாகனத்தில் மூட்டைகளை கட்டி கொண்டு சென்ற நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • 55 கிலோ பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திரா அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை போலீ சார் அறிவழகன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் மூட்டைகளை கட்டி கொண்டு சென்ற நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைகடலி மெயின் ரோட்டில் உள்ள ஒருவரின் கடைக்கு கடத்தியது தெரியவந்தது .

    இதனிடையே இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியை சேர்ந்த ராஜா, மணிமாறன் மற்றும் ஜெயராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து கடத்தி வந்த தடை செய்யப்பட்ட 55 கிலோ பொருட்களை வாகனத்துடன் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து பெரம்பூர் காவல் துறையினரிடம் குற்றவா ளிகள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • வரும் காலங்களில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்.
    • நீட் தேர்வை நீக்குவோம் என கூறினார்கள். ஆனால் அதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை.

    சீர்காழி:

    சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் அ.ம.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பொன். பாரிவள்ளல் தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி, தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், திருவாரூர் மாவட்ட செயலாளர் காமராஜ், நாகை மாவட்ட செயலாளர் மஞ்சுளா சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி நகரக் செயலாளர் அருண் பாலாஜி வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது ;-

    கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என ஒவ்வொரு வீட்டிலும் கல்விக் கண்ணை திறந்து வைத்தவர் தான் அறிஞர் அண்ணா. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்கிற அண்ணாவின் வழியிலே ஏழைகளுக்கான பல்வேறு திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர்கள் தான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா.

    அ.தி.மு.க. பொதுசெ யலாளராக பழனிச்சாமி இருக்கும் வரை அ.தி.மு.க எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது.

    பாராளுமன்ற தேர்தலில் தீய சக்தி தி.மு.க.வையும், துரோக சக்திகளையும் மக்கள் தோற்கடிப்பார்கள்.

    உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு கூட நமக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடகா தர மறுக்கிறது.

    வரும் காலங்களில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்.

    வறுமையை தள்ளுவதற்கு கர்நாடக அரசு முயல்கிறது.

    அதற்கு தி.மு.க அரசு துணை போகிறது.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகளைப் பற்றியோ ஏழை எளிய மக்களை பற்றியோ கவலை இல்லை.

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியை பற்றி மட்டுமே அவர் சிந்தித்து வருகிறார்.

    அதனால் தான் இதுவரை தண்ணீர் பெறுவதற்கான எந்த முயற்சியையும் அவர் மேற்கொள்ளவில்லை.

    அனைத்து குடும்பங்களு க்கும் உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவித்துவிட்டு பெயர் அளவில் மகளிர் உரிமை திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

    தேர்தல் வாக்குறுதி அறிவித்த வாக்குறுதிகளை 99 சதவீதம் நிறைவேற்றியதாக கூறும் தி.மு.க நீட் தேர்வை நீக்குவோம் என கூறினார்கள்.

    ஆனால் அதற்கான நடவடிக்கை என்ன என்பதை தெரியவில்லை. சிலிண்டர் மானியம் ரூ.100 இதுவரை வழங்கவில்லை.

    மின்கட்ட ணம், முத்திரை த்தாள் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.

    ஆவின் பால் பொருட்களை உயர்த்தி உள்ளனர்.

    இதில் தான் முதல்வர் ஸ்டாலின் சாதனை செய்துள்ளார்.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்றாக அ.ம.மு.க. தான் வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் பொன் பாரிவள்ளல், பொதுச்செய லாளர் டி.டி.வி தினகரனுக்கு ஆள் உயர மாலை அணிவித்து வெள்ளிவாளை நினைவு பரிசாக வழங்கினார்.

    முன்னதாக தலைமை பேச்சாளர் இருள் நீக்கி சேகர் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக, கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்வாணன் நன்றி கூறினார்.

    முன்னதாக சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட கழகம் சார்பில் பாரிவள்ளல் தலைமையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு டி.டி.வி தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • சீர்காழி நகரில் மட்டும் 40 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
    • ஊர்வலமாக உப்பநாற்றுக்கு சென்று விசர்ஜனம் செய்யப்படுகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட இந்து முன்னணி தலைவரும் மாவட்ட விநாயகர் கமிட்டி தலைவருமான சரண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் , சீர்காழி, மங்கை மடம், பூம்புகார், மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு ஆகிய இடங்களில் 147 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி அன்று இந்த விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டு மறுநாள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகிறது.

    சீர்காழி நகரில் மட்டும் 40 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மறுநாள் பழைய பஸ் நிலையத்தில் அனைத்து விநாயகர் சிலைகளும் ஒன்றி ணைக்க ப்பட்டு பின்னர் ஊர்வ லமாக உப்பநாற்றுக்கு சென்று விசர்ஜனம் செய்யப்படுகிறது.

    விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்தில் அனைத்து பொதுமக்களும், பக்தர்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று நிகழ்வு.
    • சிவாச்சாரியார்கள் பூர்ண கும்பமரியாதை அளித்து வரவேற்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

    இக்கோயிலில் அமைந்துள்ள மலை மீது தோனியப்பர் உமா மகேஸ்வரி அம்மன், சட்டநாதர் ஆகிய சுவாமிகள் காட்சி தருகின்றனர். திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று நிகழ்வு நடைபெற்ற ஸ்தலம் ஆகும்.

    பிரசித்திப் பெற்ற இக்கோயிலுக்கு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு, உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே .பன்னீர்செல்வம் ஆகியோர் வந்தனர்.

    கோயில் நிர்வாகம் சார்பில் குமர கட்டளை தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

    தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டை நாதர் சுவாமி, பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அம்மன், மலை மீது அருள்பாளிக்கும் சட்டைநாதர் சுவாமி ,தோணியப்பர் ஆகிய சுவாமி சந்நிதிகளில் அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தனர்.

    பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் சுவாமி படங்கள் மற்றும் பிரசா தங்கள் வழங்கப்பட்டது. திருச்சி மேயர் அன்பழகன், மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., சீர்காழி எம்.எல்.ஏ எம்.பன்னீர்செல்வம், திமுக பிரமுகர்கள் நம்பி, வழக்குரைஞர் இராம.சேயோன், மாவட்ட பொருளாளர் மகா அலெக்சாண்டர் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் திமுக நகர செயலாளர் சுப்பராயன், நகர்மன்ற தலைவர் துர்காராஜ சேகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், வள்ளிமுத்து மாவட்ட பொறியாளர் அணி தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • சீர்காழி நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சி சார்பில் கொட்டப்பட்டு வருகிறது.
    • அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் மறியல் போராட்டம்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பிச்சைக்காரன்விடுதியில் கடந்த சில மாதங்களாக சீர்காழி நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி சார்பில் கொட்டப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 4-வதுவார்டில் தெருவிளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் சாலைமறியல் போராட்டம் அறிவித்தனர்.

    இதனையடுத்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிபேச்சுவார்த்தை நடைபெற்றது.

    வட்டாச்சியர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன்,போராட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயரெங்கன், தனியார் ஒப்பந்ததாரர் தனராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் நித்தியவனம், பிச்சைக்காரன் விடுதி, தோட்ட மானியம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் நித்தியவனம், பிச்சைக்காரன் விடுதி, தோட்ட மானியம் ஆகிய பகுதிகளில் உடனடியாக பொது குடிநீர் இணைப்பகூடுதலாக அமைத்து தருவது.

    தேவைப்படும் இடங்களில் கூடுதலாக தெருவிளக்கு வசதிஏற்படுத்தி தருவது.

    அடுத்த மாதம் அக்டோபர் 31ம் தேதி வரை பிச்சைக்காரன் விடுதியில் தற்காலிகமாக குப்பைகளை கொட்டி தரம் பிரிப்பது. அதற்குள் குப்பை கொட்டுவதற்கு நிரந்தர இடத்தினை தேர்வு செய்வது.

    கோவில் இடங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு வரி ரசீது கிடைக்க அரசு சார்பில் பரிசீலனை செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் நகராட்சி பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா, கவுன்சிலர்கள் பாஸ்கரன், வேல்முருகன், ராமு, கஸ்தூரிபாய் செந்தில்குமார், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இக்கோவில் ஆதிராகு தலமாக விளங்குகிறது.
    • நந்தி பகவானுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி கடைவீதி யில் இந்து சமய அறநிலை யத்துறைக்கு உட்பட்ட பொன்னாகவள்ளி அம்மன் உடனாகிய நாகேஸ்வர முடையார் சாமி கோவில் உள்ளது.

    இக்கோவில் ஆதி ராகு ஸ்தலமாக விளங்குகிறது.

    இக்கோவிலில் பிரதோ ஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    முன்னதாக நந்தி பகவானுக்கு மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் முதலான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

    இதேபோல் மூலவர் நாகேஸ்வரமுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது.

    இதில் அதிமுகவை சேர்ந்த பொறியாளர் மார்கோனி, நகை வணிகர் சங்கத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் உள்ளிட்ட திரளான பகதர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    கோவில் சிவாச்சாரியார் முத்து குருக்கள் பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு மதிப்பீடு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.
    • கணினி உதவியாளர்களுக்கு பணிவரன் முறைப்படுத்த வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி, கொள்ளிடத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டத்தால் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்க ளுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்க வேண்டும், சட்டமன்ற விதிகளை உடனே வெளியிட வேண்டும், கணினி உதவியாளர்கள் அனைவருக்கும் பணிவரன் முறைப்படுத்த வேண்டும், வரையறுக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஊதியத்தினை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக வழங்க வேண்டும், அனைத்து நிலை பதிவு உயர்வுகளையும் உரிய காலத்தில் வழங்க வேண்டும், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்களுக்கு மதிப்பீடு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்,

    ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் மீது மேற்கொள்ள ப்படும் ஒழுங்கு நடவடிக்கை களை கைவிட வேண்டும், அரசாணை எண் 54 திருத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டம் செய்வ தாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி நேற்று சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், கணினி உதவியாளர்கள் உள்ளிட்டோர் பணிக்கு வராததால் அன்றாட ஊராட்சி ஒன்றிய பணிகள் பாதிக்கப்பட்டது.

    இதேபோல் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திலும் அலுவல ர்கள்,ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    • பலத்த காற்று வீசும் போது இன்சுலேட்டர்கள் பழுதாகி மின் தடை ஏற்படுகிறது.
    • மின் கம்பங்களில் புதிய இன்சுலேட்டர்கள் பொருத்தும் பணி நடந்தது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட திருவெண்காடு, மங்கை மடம், பெருந்தோட்டம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மழை, பலத்த காற்று வீசும் போது இன்சுலேட்டர்கள் பழுதாகி மின் தடை ஏற்படுகிறது.

    வரும் மழைக்காலத்தில் இதேபோன்று பழுதுகள் ஏற்பட்டு மின்தடை ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு திருவெண்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 150 புதிய இன்சுலேட்டர் கருவிகள் பொருத்தும் பணி நடந்தது.

    இந்த பணியில் உதவி பொறியாளர் ரமேஷ் தலைமையில், ஆக்க முகவர் குணசேகரன், மின்பாதை ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இந்த பணிகள் சரியாக செய்யப்படுகிறதா என சீர்காழி உட்கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் விஜய பாரதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதேபோல் பூம்புகார் மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட மேலையூர் மின் பாதையில் சுமார் 200 இன்சுலேட்டர்கள் பொருத்தும் பணியில் பூம்புகார் உதவி பொறியாளர் தினேஷ், ஆக்க முகவர் சேகர் ஆகியோர் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    • வாய் பேசாதவர்களை சோதனை செய்யும் கருவியான ‘ஆடியோ கிராம்’ அமைக்க வேண்டும்
    • கலெக்டர் அலுவலகங்களிலும் செய்கை மொழி பெயர்ப்பாளர்களை அமைத்து கொடுக்க வேண்டும்

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஆஸ்பத்திரியில் காது கேளாதோர், வாய் பேசாதவர்களை சோதனை செய்யும் கருவியான 'ஆடியோ கிராம்' அமைக்க வேண்டும்.

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் செய்கை மொழி பெயர்ப்பாளர்களை அமைத்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் தமிழ்நாடு காதுகேளாதோர், வாய் பேசாதோர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் மேரி, ஷீலா, முத்துலட்சுமி, ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்மாநில தலைவர் ஜீவா, மாவட்ட நிர்வாகிகள் பாக்கியராஜ், மகேஷ், பிரபுதாசன், புருஷோத்தமன், கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது சட்டப்படி குற்றமாகும்.
    • மனித கழிவுகளை அகற்ற வேண்டுமானால் தானியங்கி எந்திரம் மூலம் அகற்ற வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி சார்பில் சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அறிவுடையநம்பி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகர மன்ற தலைவர் துர்காராஜசேகரன் கலந்து கொண்டு பேசுகையில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றக் கூடாது. இது சட்டப்படி குற்றமாகும். மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளினால் அவர்களுக்கு பிணையில் வர முடியாமல் இரண்டு முதல் ஐந்தாண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

    சீர்காழி நகர் பகுதியில் மனித கழிவுகளை அகற்ற வேண்டுமானால் தானியங்கி இயந்திரம் மூலம் அகற்ற வேண்டும். சீர்காழி நகராட்சியில் பதிவு செய்த ஒப்பந்தக்தாரர்களைக் கொண்டு தான் இயந்திரம் மூலம் மனித கழிவுகளை அகற்ற வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், டெங்கு ஒழிப்பு பணி மேற்பார்வையாளர் அலெக்ஸ், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களை கொண்டு சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.
    • விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் ருத்ராட்சங்கள் பிரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே ராதாநல்லூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 ஆயிரத்து எட்டு ருத்ராட்சங்களைக் கொண்டு விநாயகர் சிலை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்காக பிரத்தியேகமாக அயோத்தியில் இருந்து மொத்தமாக 5 முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    கம்பு உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு அரசின் விதிமுறைகளை பின்பற்றி 10 அடி உயர உத்திர விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் புறத்தில் நூலை கொண்டு ருத்ராட்சங்களை கோர்த்து விநாயகர் முழுமையாக அலங்கரிக்கப்படுகிறார்.

    இந்து மகா சபா வைச் சேர்ந்த தொண்டர்கள் கடந்த 15 நாட்களாக இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு தயார் செய்யப்படும் விநாயகர் சிலை கும்பகோணத்தில் வைக்கப்படும் என்றும் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் ருத்ராட்சங்கள் பிரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்றும் இந்து மகாசபையினர் தெரிவித்துள்ளனர்.

    • முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.
    • விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.

    சீர்காழி:

    சீர்காழி மின்வாரிய செயற்பொறியா ளர் லதா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது சீர்காழி கோட்டத்தில் விவசாயம் மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்ப முள்ள விண்ணப்பதா ரர்கள் விரைந்து விவசாயம் மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு தட்கல் மின் இணைப்பு வழங்கல் திட்டம் 2017 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நடை முறைப்படு த்தப்பட்டு விவசாயம் மின் இணைப்பு கள் வழங்கப்பட்டு வருகிறது.தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளு க்கும் மற்றும் தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயி களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாயம் மின் இணைப்புகள் வழங்கப்படும்.

    எனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே விவசாயம் மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விருப்பம் உள்ள விவசாய மக்கள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாயம் மின் இணைப்பு பெற தங்கள் பகுதியில் செயற்பொ றி யாளரை தொடர்பு கொள்ளு மாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு ள்ளது.

    ×