search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைத்தீஸ்வரன்கோயிலில் கிராமசபை கூட்டம்
    X

    வைத்தீஸ்வரன்கோயிலில் கிராமசபை கூட்டம் நடந்தது.

    வைத்தீஸ்வரன்கோயிலில் கிராமசபை கூட்டம்

    • வைத்தீஸ்வரன்கோயிலில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட வடக்கு வீதியில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
    • வரும் காலங்களில் குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு வழங்கப்படும்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட வடக்கு வீதியில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடிஅலெக்சாண்டர் தலைமை வகித்தார்.

    செயல் அலுவலர் அசோகன்,துணைத்தலைவர் அன்புச்செழியன் முன்னிலை வகித்தனர்.

    இளம் நிலை உதவியாளர் பாமா வரவேற்றார்.

    கூட்டத்தில் கடந்த 2ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேரூராட்சி மன்ற தலைவர் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

    வரும் காலங்களில் குடிநீர்,சுகாதாரம், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    இதில் குறைபாடுகள் இருந்தால் பொதுமக்கள் உடனுக்குடன் தெரிவிக்கலாம் என்றார்.

    தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் பகுதியில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி பணிகள் குறித்தும், குறை,நிறைகள் குறித்து பேசினர்.

    தொடர்ந்து ரூ.20கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தை உடனே பேரூராட்சி பகுதியில் செயல்படுத்துவது, அனைத்து பயனாளிகளுக்கும் குடிநீர் இணைப்புகளை பெற விண்ணப்பம் செய்வது, நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினை விரைந்து முடிக்க கேட்டுக்கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் திமுக மாவட்ட பொருளாளர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

    Next Story
    ×