search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகேஸ்வரமுடையார் கோவிலில் பிரதோஷ வழிபாடு
    X

    பிரதோஷ வழிபாடு நடந்தது.

    நாகேஸ்வரமுடையார் கோவிலில் பிரதோஷ வழிபாடு

    • இக்கோவில் ஆதிராகு தலமாக விளங்குகிறது.
    • நந்தி பகவானுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி கடைவீதி யில் இந்து சமய அறநிலை யத்துறைக்கு உட்பட்ட பொன்னாகவள்ளி அம்மன் உடனாகிய நாகேஸ்வர முடையார் சாமி கோவில் உள்ளது.

    இக்கோவில் ஆதி ராகு ஸ்தலமாக விளங்குகிறது.

    இக்கோவிலில் பிரதோ ஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    முன்னதாக நந்தி பகவானுக்கு மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் முதலான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.

    இதேபோல் மூலவர் நாகேஸ்வரமுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது.

    இதில் அதிமுகவை சேர்ந்த பொறியாளர் மார்கோனி, நகை வணிகர் சங்கத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் உள்ளிட்ட திரளான பகதர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    கோவில் சிவாச்சாரியார் முத்து குருக்கள் பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    Next Story
    ×