என் மலர்
மயிலாடுதுறை
- மாவட்ட அளவிலான போட்டிக்கு 30 மாணவர்கள் தகுதி பெற்றனர்.
- 13 புள்ளிகளும் பெற்று தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றனர்.
சீர்காழி:
தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சீர்காழி குறு வட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடை பெறும்.
இந்த போட்டிகள் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதா னத்தில் நடைபெற்றது. போட்டிகளில் அனைத்து வகையான குழு போட்டிகளும், தடகள போட்டிகளும் நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வளைகோல் பந்து மூன்று பிரிவுகளிலும் முதலிடம், கூடை பந்தாட்டத்தில் மூன்று பிரிவுகளிலும் முதலிடம், பூப்பந்தாட்ட போட்டியில் ஐந்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்று மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் தடகளத்தில் மாணவிகளுக்கான ஜூனியர் பிரிவில் 6 போட்டியிலும் சீனியர் பிரிவில் 14 போட்டியிலும் சூப்பர் சீனியர் பிரிவில் 9 போட்டியிலும் மாணவர்களுக்கான ஜூனியர் பிரிவில் 6 போட்டியிலும் சீனியர் பிரிவில் ஒன்பது போட்டியிலும் சூப்பர் சீனியர் பிரிவில் மூன்று போட்டியிலும் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு 30 மாணவ,மாணவிகள் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும் ஜூனியர் பிரிவில் ஆர். சுருதிஹா 10 புள்ளிகளும், சீனியர் பிரிவில் ஏ அபர்ணா 13 புள்ளிகளும், சூப்பர் சீனியர் பிரிவில் சமினா ராகவி 13 புள்ளிகளும் பெற்று தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றனர்.
சீர்காழியில் நடைபெற இருக்கும் மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு செல்ல இருக்கும் மாணவ மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், உடற்கல்வி ஆசிரியர் முரளி, மார்கண்டன், சக்திவேல், ராகேஷ், கபிலன் ஆகியோரை பள்ளி குழு தலைவர் சிதம்பரநாதன் பள்ளியின் முன்னாள் செயலர்கள் பாலசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், பள்ளிச் செயலர் சொக்கலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கபாலி பழைய மாணவர் சங்கச் செயலர் முரளிதரன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். அறிவுடை நம்பி உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரங்கன், சீனிவாசன் மற்றும்ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.
- பாலிசி பத்திரம் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது.
- ரூ.1 லட்சத்திற்கு மேல் பாலிசி பிரிமியம் செலுத்தி திட்டத்தில் சேர்ப்பவர்களுக்கு சிறப்பு பரிசு.
சீர்காழி:
மயிலாடுதுறை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் உத்தரவின் பேரில் சீர்காழி தலைமை அஞ்சலகத்தில் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு முகாம் சீர்காழி தலைமை அஞ்சலத அதிகாரி கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
தனியார் தொலைகாட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற சீர்காழியை சேர்ந்த சகோதரிகள் அருணா மற்றும் அகிலா ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் இணைந்திருந்தனர்.
அவர்களுக்கு பாலிசி பத்திரம் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் சிறப்பம்ச ங்களை அஞ்சல் ஊழியர்கள் விளக்க உரையாற்றினர்.அஞ்சலக ஆயுள் காப்பீட்டின் தேவையையும்,முக்கிய அம்சங்களையும் அருணா மற்றும் அகிலா இருவரும் எடுத்துரைத்தனர்.
எதிர்வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி அன்று மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகமாக பாலிசி பிரிமியம் செலுத்தி இந்த திட்டத்தில் சேர்ப்பவர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு மயிலாடுதுறை கோட்ட கண்காணிப்பாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் அனைத்து பொதுமக்களும் சேர்ந்து பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
- புதுகுப்பம் மீனவகிராமத்தில் இயற்கை சீற்றத்தால் அலைகள் அதிகரித்து வந்தது.
- மீனவ மக்கள் பயன்படுத்துவதற்காக மீன் வலை பின்னும் கூடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புது குப்பம் மீனவ கிராமத்தில் கடல் அலைகளால் அரிப்பு ஏற்பட்டு மீனவர்கள் அவதி அடைந்து வந்தனர் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் போது இயற்கை சீற்றத்தால் அலைகள் அதிகரித்து கடற்கரை பரப்பு கரைந்து வந்தது.
இதனை தடுக்க கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க அப்பகுதி மீனவமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மீன்வளத்துறை சார்பாக ரூ. 9 கோடி மதிப்பில் புதுக்குப்பம் கிராம கடற்கரை பகுதியில் இருபுறமும் சிறு அலை தடுப்புச் சுவர் மற்றும் மீன் வலை பின்னும் கூடமும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இதன் திறப்பு விழா நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் தலைமை வகித்தார்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ,எம்.பி. ராமலிங்கம், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஒன்றிய செயலாளர் பஞ்சு.குமார்,பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மீனவ மக்கள் பயன்படுத்துவதற்காக சிறு அலை தடுப்புச் சுவர் மற்றும் மீன் வலை பின்னும் கூடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
இதேபோன்று மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெருந்தோட்டம் ஏரியில் சுற்றுலா மையம் அமைக்கும் திட்டம் குறித்து சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதனை தொடர்ந்து பெருந்தோட்டம் ஏரியில் சுற்றுலா மையம் அமைப்பதற்கான திட்ட வரைவுகளை தயார் செய்யும் படி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
- நாடி.ராஜேந்திரன் சுவாமிகளின் 6 ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
- பீடத்தில் மாதம் தோறும் பெர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
சீர்காழி:
சீர்காழி அருகே 18 சித்தர்களின் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் பீடத்தின் நிறுவனர் நாடி.ராஜேந்திரன் சுவாமிகளின் 6 ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
சீர்காழி அருகே உள்ள காரைமேடு கிராமத்தில் சத்குரு ஒளிலாயம் அமைந்துள்ளது.
இங்கு 18, சித்தர்கள் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.
இந்த பீடத்தில் மாதம் தோறும் பெர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
பீடத்தின் நிறுவனர் நாடி. ராஜேந்திரன் சுவாமிகளின், 6 ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு பீடத்தின் வளாகத்தில் ஆறுபடை வீடு முருகப்பெருமானின் திரு உருவச் சிலை அமைக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
தொடர்ந்துவிநாயகர், பார்வதி, பரமசிவன் மும்மூர்த்தி அலங்காரம் செய்யப்பட்டு உலக நன்மை வேண்டி, சிறப்பு மகா யாகம் நடத்தப்பட்டது.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. ஒளிலாயம் பீடத்தில் நடைபெற்ற மும்மூர்த்தி மகாயாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு, நலத்திட்ட உதவிகளை முன்னாள் எம்எல்ஏ பி.வி.பாரதி, அதிமுக அமைப்பு செயலாளர் ஆசைமணி, பொறுப்பாளர்கள் செந்தில்நாதன், முன்னாள் எம்எல்ஏ ம.சக்தி, ஒன்றிய செயலாளர் ஆதமங்கலம்.ரவிச்சந்திரன், பொறியாளர் மார்கோனி, சீர்காழி அதிமுக முன்னாள் நகர செயலாளர் பக்கிரிசாமி, ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.
ஏற்பாடுகளை நாடி செல்வ முத்துக்குமரன், நாடி செந்தமிழ்ச்செல்வன், நாடி மாமல்லன், நாடி பரதன் ஆகியோர் செய்திருந்தனர்.
- பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் 8 பேர் ஈடுபட்டு இருந்தனர்.
- படுகாயம் அடைந்த பக்கிரிசாமி, மாசிலாமணி, மாரியப்பன் மணிவண்ணன் ஆகிய 4 பேர் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் நாட்டு வெடிகள், திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் வாணவெடிகள் மற்றும் தீபாவளி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அடுத்த மாதம் (நவம்பர்) தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் இங்கு தீவிரமாக நடந்து வந்தது. இந்த ஆலையில் 11 பேர் வேலை பார்த்து வந்தனர்.
நேற்று பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் 8 பேர் ஈடுபட்டு இருந்தனர். மாலை 3 மணி அளவில் திடீரென பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதனால் வெடித்து சிதறிய பட்டாசுகளுக்கிடையே தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனா்.
அந்த பகுதி முழுவதும் கடுமையான புகை மண்டலம் கிளம்பி பட்டாசு ஆலை முழுவதும் கரும்புகை மூட்டமாக மாறியது. பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்ட கட்டிடமும் இடிந்து தரைமட்டமானது.
வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது போல பட்டாசுகளின் சத்தம் விண்ணை பிளக்கும் வகையில் இருந்ததால் சம்பவ இடத்துக்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்கள், பட்டாசு ஆலையில் இருந்த தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது 4 வாலிபர்கள் உடல் சிதறி இறந்தது தெரிய வந்தது. அவர்களின் உடல் பாகங்கள் 500 மீட்டர் தூரம் வரை 18 இடங்களில் சிதறி கிடந்தன.
இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொறையாறு போலீசார், வெடிவிபத்தில் பலியான 4 வாலிபர்களின் உடல்களை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
கவிசாரணையில், பலியான வாலிபர்கள் கிடங்கல் மாமாகுடியை சேர்ந்த பக்கிரி மகன் மாணிக்கம் (வயது 32), மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் மதன்(21), சித்தர்காட்டை சேர்ந்த மணிமாறன் மகன் நிகேஸ்(22), மூவலூரை சேர்ந்த ராஜ்மோகன் மகன் ராகவன்(22) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்களில் உயிரிழந்த நிகேஸ் கல்லூரி மாணவர் ஆவார்.
மேலும் படுகாயம் அடைந்த பக்கிரிசாமி, மாசிலாமணி, மாரியப்பன் மணிவண்ணன் ஆகிய 4 பேர் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் பட்டாசு ஆலையின் உரிமையாளர் மோகனிடம் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா விசாரணை நடத்தி வருகிறார். வெடி விபத்து நடந்த இந்த பட்டாசு தொழிற்சாலை லைசென்ஸ் பெற்று இயங்கி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 4 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் பொறையாறு பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
- ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கூட்டம் நடந்தது.
- மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை போக்கிட வேண்டும்
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு சங்கத் துணைத் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட இணை செயலாளர் வேம்பு, இராமபத்திரன், கருணாநிதி, நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் பழனிவேலு, முன்னாள் மாநில துணைத் தலைவர் கணேசன் ஆகியோர் சிறப்புரையில் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
ரயில் பயண சலுகை மீண்டும் பெற்றிட, 70 வயது பூர்த்தியாளர்களுக்கு 10 சதவீகிதம் கூடுதல் ஓய்வூதியம் பெற்றிட, சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியம் 9000 வழங்கிடவும், பஞ்சப்படி, மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை போக்கிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மயிலாடு துறை வட்ட பொருளாளர் அன்பழகன், தலைவர் விசுவநாதன், நகர வட்டத் தலைவர் நடராஜன், பொருளாளர் கவுசல்யா சேகர், சீர்காழி ஜெயக்குமார், தரங்கம்பாடி வட்ட செயலாளர் அண்ணாதுரை, உள்ளிட்ட ஏராளமான ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் நன்றி கூறினார்.
- பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டது.
- போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
சீர்காழி:
சீர்காழி நகரில் பள்ளி நேரங்களில் கனரக வாக னங்கள் வந்து செல்ல தடை விதித்து நேர கட்டுபாடு அறிவிக்கப்பட்டு நகர எல்லைகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
சீர்காழி நகரில் பிரதான சாலைகளான பிடாரி வடக்கு வீதி, கடைவீதி காமராஜர்வீதி, கொள்ளிடமுக்கூட்டு, பழைய பேந்து நிலையம், தென்பாதி, புதிய பேருந்துநிலையம் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவந்தது.
பிரதான சாலைகளில் உள்ள பலசரக்கு விற்பனை கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் ஆகியவற்றுக்கு லாரிகளில் பொருட்கள் எடுத்து வரும்போது சாலையின் இருப்புறமும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றா மல் நிறுத்திவைத்து பொருட்களை இறக்குவதால் கடும் போக்குவரத்து பாதிப்பு, வாகனஓட்டிகளுக்கு காலதாமதம் ஏற்பட்டது.
பள்ளி நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியால் வாகனஓட்டிகள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இது குறித்து பொதுமக்கள் மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு மீனாவிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி, போக்குவரத்தை சீரமை க்கவும், ஒருவழிப்பாதை, நோபார்கிங் ஆகியவற்றை பின்பற்றாத வாகனஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து போலீஸ்சா ருக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி போக்குவரத்து போலீசார் சீர்காழி நகரில் போக்குவரத்து விதிமுறை களை மீறும் வாகனஓட்டிகளை எச்சரித்து அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி நேரங்களில் நகருக்குள் காலை 8மணி முதல் 10மணி வரையிலும், மாலை 4மணி முதல் 6மணிவரையிலும் கனரக வாகனங்கள் வருவதற்கு தடை விதித்து அதற்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகை நகரின் எல்லை நுழைவு பகுதியில் போக்குவரத்து போலீசாரால் அமைக்கப்பட்டது.
- செம்பனார்கோயில் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
- மிகவும் பழுதடைந்து கிடக்கும் தாய் சேய் நல விடுதியை புதுப்பிக்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.
கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி செயலர் மனோகரன் வரவேற்றார். கிராம மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை எடுத்துக் கூறினார்.
தலைவர் விரைவில் செய்து தருவதாக உறுதி அளித்தனர்.
பின்னர் முன்னாள் ராணுவத்தினர் ராமதாஸ் மனு அளித்தார்.
அதில் கூறி இருப்பதாவது:-
திருவள்ளுவர் தெருவில் ஊராட்சி மன்றத்திற்கு அருகில் தாய் செய் நல விடுதி கடந்த 75 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் மோசமான நிலை ஏற்பட்டு பூட்டி போடப்பட்ட நிலையில் உள்ளது.
மிகவும் பழுதடைந்து கிடக்கும் தாய் சேய் நல விடுதியை புதுப்பித்து 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவையாம்பிகை நகரில் மோசமான நிலையில் ரோடு சேதம் அடைந்து உள்ளதால் சிமெண்ட் சாலையாக அமைத்து தர வேண்டும்.
சுடுகாட்டு பாதைக்கு செல்லும் தெருக்களில் மரங்கள் இடையூராக இருப்பதால் மரங்களை அப்புபடுத்தி இறந்தவர்களை எடுத்துச் செல்ல இடையூர்யில்லாமல் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கிராமசபையில் பொது மக்களுடன் வலியுறுத்த ப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஊரக உட்கட்டமைப்பு பிரிவு முன்னாள் உதவி திட்ட அலுவலர் நக்கீரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் துணைத்த லைவர் உமாராணி நன்றி கூறினார்.
- சீர்காழி நகராட்சி என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் நகர் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் இணைந்து தூய்மை பணியை தொடங்கினர்.
- என். எஸ் மாணவர்கள் ஆசிரியர் பரணி தலைமையில் தூய்மை பணி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி 22 வது வார்டில் சீர்காழி ரோட்டரி சங்கம் சீர்காழி நகராட்சி சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் நகர் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் இணைந்து தூய்மை சேவை பணியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் சத்யநாராயணன் தலைமை தாங்கினார்.
நகரமன்ற உறுப்பினர் வேல்முருகன், இன்ஜினியர் சுப்பிரமணியன் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி ஆணையர் ஹேமலதா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
என். எஸ். எஸ் மாணவர்கள் ஆசிரியர் பரணி தலைமையில் தூய்மை பணி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நகர் நல சங்கத் தலைவர் சீனிவாசன், வீரசேனன், சங்கர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நகர் நல சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ரோட்டரி பொருளாளர் கண்ணன் , பெஸ்ட் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நகர் முழுவதும் தூய்மைப் பணியை என் எஸ் எஸ் மாணவர்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் செய்து முடித்தார்கள். முடிவில் செயலாளர் சுரேஷ் குமார் நன்றி கூறினார்.
- காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடந்தது.
- ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்திற்குட்பட்ட திருவெண்காடு ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டார்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், உமாமகேஸ்வரி சங்கர் முன்னிலை வகிக்க, திருவெண்காடு ஊராட்சிமன்ற தலைவர்.சுகந்தி நடராஜன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
முதலமைச்சர் கிராம சாலை திட்டத்தினை செயல்படுத்தி எல்லா சாலைகளையும் மேம்படுத்தி வருகிறார்.
அந்த அடிப்படையில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வனபாதி தாமரைகுளம் ரோடு ரூ.49 லட்சம் மதிப்பிலும், தென்பாதி சாலை ரூ.32 லட்சம் மதிப்பிலும், திருவெண்காடு பாத்தம்பள்ளி சாலை ரூ.40 இலட்சம் மதிப்பிலும், பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட கலெக்டர் மூலமாக தனியாக அலுவலர் நியமிக்கப்பட்டு 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றி தரப்படும்.
இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நூறு நாள் வேலை நாட்களை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும்.
அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு என்ற பெரிய கொடிய நோய் இன்று எங்கும் பரவக்கூடிய சூழ்நிலை உள்ளது.
இது பரவாமல் நாம் கவனமாக இருக்க வேண்டும். வருவதற்கு முன் இதை நாம் தடுக்க வேண்டும். ஆகவே நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இந்த கிராம சபை கூட்டத்திலே பிளாஸ்டிக் பயன்படு த்துவ தை தவிர்க்க வேண்டும்.
அண்ணா பிறந்த நாள் அன்று யாரும் செயல்படுத்த முடியாத 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ.1000 வழங்குகின்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்தி காட்டியவர் நம் முதல்வர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மயிலாடு துறை மாவட்ட கூட்டுறவு தலைவர் ஞானவேலன், சீர்காழி ஒன்றியக்குழு தலைவர்.கமலஜோதி தேவேந்திரன், ஒன்றியக்குழு துணைத்த லைவர் உஷா நந்தினி பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பி னர்கள் ஆனந்தன், தியாக விஜேஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பஞ்சுகுமார், ஜான்சி ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், இளங்கோவன், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- நாட்டு நலப்பணித் திட்ட இயக்கம் மாணவர்களுடன் ஒன்றிணைந்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
- நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு தலைமையில் நடை பெற்றது
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் நகரில் ஒட்டுமொத்தமாக தூய்மை பணி நடைபெற்றது. 18-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் புதிய பஸ் நிலையம், அம்பேத்கார் சிலை, அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மற்றும்
எல்.எம்.சி. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட இயக்கம் மாணவர்களுடன் ஒன்றிணைந்து தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன்,துணை தலைவர் சுப்பராயன் ஆகியோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர் இதே போல் 13-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நகர் மன்ற உறுப்பினர் முபாரக் தலைமையில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து தூய்மை சேவா இயக்கத்தின் படி தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது இதில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பா ளர்கள் பலர் பங்கேற்றனர். 14-வது வார்டு பிடாரி வடக்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு தலைமையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டு குப்பைகளை அகற்றினர்.
- மருத்துவ முகாம் வரதாச்சாரியார் நகர பூங்காவில் நடைபெற்றது.
- தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நகர மன்ற தலைவர் செல்வராஜ் ஆலோசனை யின் படி ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் சிறப்பு மருத்துவ முகாம் வரதாச்சாரியார் நகர பூங்காவில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமிற்கு நகர் நல அலுவலர் லெட்சுமணன் தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் சுரேஷ், துப்புரவு ஆய்வாளர்கள் ஆல்பர்ட் டேவிட் பால், பழனிச்சாமி ஆகியோர் முன்னில வைக்கத்தனர். 250 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு தங்களது உடல்களில் உள்ள நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றனர். மருத்துவர் ரவிக்குமார் தூய்மை பணியாளர்களுக்கு சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது.






