search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Great Deeparathana"

    • நாடி.ராஜேந்திரன் சுவாமிகளின் 6 ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
    • பீடத்தில் மாதம் தோறும் பெர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே 18 சித்தர்களின் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் பீடத்தின் நிறுவனர் நாடி.ராஜேந்திரன் சுவாமிகளின் 6 ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.

    சீர்காழி அருகே உள்ள காரைமேடு கிராமத்தில் சத்குரு ஒளிலாயம் அமைந்துள்ளது.

    இங்கு 18, சித்தர்கள் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

    இந்த பீடத்தில் மாதம் தோறும் பெர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    பீடத்தின் நிறுவனர் நாடி. ராஜேந்திரன் சுவாமிகளின், 6 ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு பீடத்தின் வளாகத்தில் ஆறுபடை வீடு முருகப்பெருமானின் திரு உருவச் சிலை அமைக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

    தொடர்ந்துவிநாயகர், பார்வதி, பரமசிவன் மும்மூர்த்தி அலங்காரம் செய்யப்பட்டு உலக நன்மை வேண்டி, சிறப்பு மகா யாகம் நடத்தப்பட்டது.

    பின்னர் வேத மந்திரங்கள் முழங்க பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. ஒளிலாயம் பீடத்தில் நடைபெற்ற மும்மூர்த்தி மகாயாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு, நலத்திட்ட உதவிகளை முன்னாள் எம்எல்ஏ பி.வி.பாரதி, அதிமுக அமைப்பு செயலாளர் ஆசைமணி, பொறுப்பாளர்கள் செந்தில்நாதன், முன்னாள் எம்எல்ஏ ம.சக்தி, ஒன்றிய செயலாளர் ஆதமங்கலம்.ரவிச்சந்திரன், பொறியாளர் மார்கோனி, சீர்காழி அதிமுக முன்னாள் நகர செயலாளர் பக்கிரிசாமி, ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.

    ஏற்பாடுகளை நாடி செல்வ முத்துக்குமரன், நாடி செந்தமிழ்ச்செல்வன், நாடி மாமல்லன், நாடி பரதன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பணிகள் நிறைவடைந்து, வரும் 7-ந் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.
    • விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயில் உள்ளது. இதன் புனரமைப்பு பணிகள் நடந்து வந்தது.

    தற்போது இந்த பணிகள் நிறைவடைந்து, வரும் 7-ந் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி நேற்று யாக பூஜைகள் தொடங்கின. விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. மாலை திருவிளக்கு வழிபாடு உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டன. இன்று(திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு ஐங்கரன் வேள்வி, மண் எடுத்தல், முளையிடுதல், காப்பு அணிவித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் மாலையில் அப்பா பைத்தியம் சுவாமிகள் வேள்வி சாலைக்கு எழுந்தருளி 108 திரவிய வழிபாடு முதல் கால வேள்வி, திருமுறை விண்ணப்பம், இசை விண்ணப்பம் உள்ளிட்டவை நடக்கிறது. 7-ந் தேதி காலை 7-40 மணிக்கு நான்காம் கால வேள்வி , காலை 9-45 மணிக்கு விமானத்துக்கு நீர் ஊற்றுதல் விநாயகர், முருகன், சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. இந்த விழாக்களுக்கான ஏற்பாடுகளை முத்துமணிராஜா உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ×