search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.9 கோடி மதிப்பில் அலைத்தடுப்பு சுவர் - மீன் வலைபின்னும் கூடம்
    X

    அலைத்தடுப்பு சுவர் மற்றும் மீன் வலை பின்னும் கூடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

    ரூ.9 கோடி மதிப்பில் அலைத்தடுப்பு சுவர் - மீன் வலைபின்னும் கூடம்

    • புதுகுப்பம் மீனவகிராமத்தில் இயற்கை சீற்றத்தால் அலைகள் அதிகரித்து வந்தது.
    • மீனவ மக்கள் பயன்படுத்துவதற்காக மீன் வலை பின்னும் கூடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புது குப்பம் மீனவ கிராமத்தில் கடல் அலைகளால் அரிப்பு ஏற்பட்டு மீனவர்கள் அவதி அடைந்து வந்தனர் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் போது இயற்கை சீற்றத்தால் அலைகள் அதிகரித்து கடற்கரை பரப்பு கரைந்து வந்தது.

    இதனை தடுக்க கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க அப்பகுதி மீனவமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மீன்வளத்துறை சார்பாக ரூ. 9 கோடி மதிப்பில் புதுக்குப்பம் கிராம கடற்கரை பகுதியில் இருபுறமும் சிறு அலை தடுப்புச் சுவர் மற்றும் மீன் வலை பின்னும் கூடமும் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் இதன் திறப்பு விழா நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் தலைமை வகித்தார்.

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ,எம்.பி. ராமலிங்கம், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஒன்றிய செயலாளர் பஞ்சு.குமார்,பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மீனவ மக்கள் பயன்படுத்துவதற்காக சிறு அலை தடுப்புச் சுவர் மற்றும் மீன் வலை பின்னும் கூடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

    இதேபோன்று மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெருந்தோட்டம் ஏரியில் சுற்றுலா மையம் அமைக்கும் திட்டம் குறித்து சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    அதனை தொடர்ந்து பெருந்தோட்டம் ஏரியில் சுற்றுலா மையம் அமைப்பதற்கான திட்ட வரைவுகளை தயார் செய்யும் படி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    Next Story
    ×