என் மலர்tooltip icon

    மதுரை

    • மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளிக்கு 4 மணி நேரம் முழு ஊதியத்துடன் வேலை வழங்க வேண்டும். 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளிக்கு 4 மணி நேரம் முழு ஊதியத்துடன் வேலை வழங்க வேண்டும்.

    உசிலம்பட்டி

    மதுரை புறநகர் மாவட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் சின்ன கருப்பு, ஒன்றிய செயலாளர் சின்னச்சாமி, ஒன்றிய தலைவர் நாகராஜ், ஒன்றிய பொருளாளர் வீரய்யா மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளிக்கு 4 மணி நேரம் முழு ஊதியத்துடன் வேலை வழங்க வேண்டும்.

    100 நாள் வேலை திட்டத்தில் அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யூனியன் ஆணையாளரிடம் மனு கொடுத்தனர். 

    • மதுரையில் இருந்து கொல்கத்தாவிற்கு கதிசக்தி ரெயில் சேவை தென்மண்டல தபால்துறை ஏற்பாடு செய்துள்ளது.
    • 35கிலோவுக்கு மேல் உள்ள பார்சல்களை தபால்துறை மூலம் அனுப்பி வைக்கலாம்.

    மதுரை, பிப்.22-

    மதுரை தென்மண்டல தபால்துறை சார்பில் மதுரையில் இருந்து கொல்கத்தாவிற்கு கதிசக்தி பார்சல் ரெயில் இயக்கப்பட உள்ளது.

    மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் மற்றும் தென்மண்டல தபால்துறைத்தலைவர் சார்பில் கதிசக்தி பார்சல் ரெயில் திட்டம் கடந்த மாதம் அறிமுகப்ப டுத்தப்பட்டது.

    இந்த திட்டத்தின் படி, வணிகர்களின் இருப்பிடத்திற்கே சென்று தபால்துறையினர் பார்சல்களை பெற்று அதனை ரெயில் மூலம் அனுப்பி வைத்து, அங்கிருந்து சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது அலுவலகத்திற்கு கொண்டு சேர்ப்பர். இதற்காக கையாளும் கட்டணம் மற்றும் பார்சல் கட்டணம் வசூலிக்கப்படும்.

    ரெயில்வேயில் முதல் முறையாக ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு கிலோ எடை கொண்ட பார்ச லுக்கான கட்டணம் என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி, மதுரை-சென்னை தேஜஸ் ரெயிலில் தபால்துறை மூலம் பார்சல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய ரெயில்வேயில் 15 பகுதிகளில் இருந்து தபால்துறையுடன் இணைந்து இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கடந்த வியாழக்கிழமை மேலும் 4 இடங்களில் இருந்து இந்த பார்சல் ரெயில் இயக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, தென்னக ரெயில்வேயில் முற்றிலும் பார்சல் பெட்டிகளை கொண்ட கதிசக்தி பார்சல் ரெயில் மதுரை கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) இயக்கப்பட உள்ளது.

    இந்த ரெயில் மதுரையில் இருந்து திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம், கூடூர், விஜயவாடா வழியாக கொல்கத்தாவில் உள்ள ஹவுரா ரெயில் நிலையம் வரை செல்கிறது. மற்ற சரக்கு ரெயில்களை போல இல்லாமல், கதிசக்தி ரெயில் விரைவில் பார்சல்களை டெலிவரி செய்யும் வகையில் தடையற்ற ரெயில் போக்குவரத்துக்கு ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    இந்த ரெயில் வாரந்தோறும் இயக்கப்பட உள்ளது. இதில் 35கிலோவுக்கு மேல் உள்ள பார்சல்களை தபால்துறை மூலம் அனுப்பி வைக்கலாம். ரெயிலில் அனுப்பப்படும் பார்சல்களுக்கு காப்பீடு வசதியும் உள்ளது. மதுரை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சிறு, குறுந்தொழில் முனைவோர், விவசாயிகள், வணிகர்களுக்கு இந்த ரெயில் வசதியாக இருக்கும்.

    இதற்கான ஏற்பாடுகளை தென்மண்டல தபால் துறைத்தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் ரெயில்வே தபால்சேவை கண்கா ணிப்பாளர் ஜவகர் உள்ளிட்ட தபால்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    • 943 தொழிலாளர்களுக்கு ரூ3.58 கோடி வினியோகம் செய்யப்படுவதாக தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
    • பணியாற்றிய நிறுவனங்களில் இருந்து பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் மற்றும் குறைந்த பட்ச சம்பள சட்ட கமிஷனர் சுப்பிரமணியன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் கமிஷனர் அறிவுறுத்தலின்படி மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள தொழில்நிறுவனங்களில் குறைந்தபட்ச சம்பள சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாதமும் ஒரு தொழில்நிறுவனத்தில் சிறப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கடந்தாண்டு ஆய்வு மேற்கொண்டதில், குறைந்தபட்ச சம்பள சட்டம் 1948-ன்படி, தொழில் வணிக நிறுவனங்களில் இந்த சட்டத்தின்படி சம்ப ளம் வழங்காத பணியா ளர்கள் தரப்பில் கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் 462 தொழிலாளர்கள் தங்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்திருந்தனர்.

    • கள்ளழகர் கோவில் மாசி தெப்ப உற்சவம் 7-ந் தேதி நடக்கிறது.
    • மாலை 6.20 மணிக்கு மேல் 7.15மணிக்குள் கஜேந்திர மோட்சத்துடன் நடக்கிறது.

    அலங்காநல்லூர்

    திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி அழைக்கப்படுவது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும்.

    இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று மாசி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம். இந்த விழா வருகிற மார்ச் மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது. அன்று மாலை 6.20 மணிக்கு மேல் 7.15மணிக்குள் கஜேந்திர மோட்சத்துடன் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7.02 மணிக்கு மேல் 7.50 மணிக்குள் ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பொய்கை கரைபட்டி தெப்பத்திற்கு புறப்பாடாகி செல்வார். வழி நெடுகிலும் நின்ற சேவை சாதிக்கிறார்.

    பகல் 10.30 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் தெப்பத்தின் கிழக்கு புறம் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுவதும் தெப்பத்திலிருந்து அன்று மாலை பூஜைகள் முடித்து மீண்டும் தெப்பத்தில் எழுந்தருளுவார். இந்த தெப்ப உற்சவத்தை காண அழகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவ இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.

    தொடர்ந்து அன்று இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு போய் இருப்பிடம் சேருகிறார். இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. ெதப்ப உற்சவத்துக்கான ஏற்பாடுகளை கள்ளழகர் கோவில் தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்கா ணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

    • பெண்கள் ஆரத்தி எடுத்து வணங்கி அனுப்பி வைத்தனர்.
    • சுமார் 5 ஆயிரம் பேர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

    மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாயத்தான்பட்டி கிராமத்தில் வல்லடிக்காரர் தெய்வத்தை குலதெய்வமாக வணங்கும் 60 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி திருவிழாவில் இருந்து 3 நாட்களுக்கு பின்னர் காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே அரண்மனைசிறுவயல் கிராமத்தில் உள்ள குளத்தில் நீராடி ஆயுதங்களுடன் பாரிவேட்டைக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்தாண்டும் இந்த விழா நடைபெற்றது.

    முன்னதாக நாயத்தான்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் இந்த விழாவில் கலந்துகொண்டு அரண்மனைசிறுவயல் குளத்தில் நீராடிய பின்னர் அங்குள்ள பாரிவேட்டை திடலில் கிராம அம்பலக்காரர்கள் அமர்ந்து வழிபாடு நிகழ்ச்சியை நடத்தினர்.

    அதன் பின்னர் அவர்கள் பாரிவேட்டைக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களுடன் வேட்டைக்கு சென்றனர். அவர்களை பெண்கள் ஆரத்தி எடுத்து வணங்கி அனுப்பி வைத்தனர். தமிழ்நாடு வனத்துறை சார்பில் பாரிவேட்டைக்கு தடை விதிக்கப்பட்டதால் சம்பிரதாயத்திற்காக சிறிது தூரம் அவர்கள் நடந்து சென்று வந்தனர். அதன் பின்னர் விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பிறகு அவர்கள் அரண்மனைசிறுவயல் கிராமத்தில் இருந்து புறப்பட்டு தங்களது சொந்த கிராமத்திற்கு சென்று 15 நாட்கள் வரை விரதம் கடைபிடிப்பது வழக்கம்.

    அவ்வாறு விரதம் இருக்கும் இந்த நாட்களில் வீடுகளில் எண்ணெய் பயன்படுத்தி சட்டியில் சமைப்பதோ அல்லது தாளிப்பதோ கிடையாது. மேலும் அவர்கள் வெளியூர் பயணங்களுக்கும் செல்வதில்லை என்று அந்த ஊர் கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • கிராமமக்கள் சமையலில் எண்ணெய் பயன்படுத்துவதில்லை.
    • இந்த கிராமங்களில் இறைச்சிக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

    மேலூர் அருகே வெள்ளலூரை சுற்றி உள்ள 56 கிராமங்கள் வெள்ளலூர்நாடு என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் வல்லடிகாரர் கோவில் திருவிழா மாசி மாதம் 15 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழா பாரிவேட்டை நாளன்று தொடங்கியது. இதையொட்டி 15 நாட்களுக்கு வெள்ளலூர் நாட்டு 56 கிராம மக்கள் கடுமையான விரதத்தை தொடங்கி உள்ளனர்.

    அதன்படி மேற்கண்ட கிராமமக்கள் சமையலில் எண்ணெய் பயன்படுத்துவதில்லை. ஓட்டல்களில் தோசை, புரோட்டா மற்றும் அசைவ சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், வீடுகள் கட்டுமான வேலைகள் செய்வதில்லை, மண் தோண்டுவது, மரம் வெட்டுவது போன்ற வேலைகளையும் அந்த கிராம மக்கள் செய்வதில்லை. இந்த கிராமங்களில் இறைச்சிக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளுடன் விரதத்தை வெள்ளலூர் நாடு எனப்படும் 56 கிராம மக்களும் மேற்கொண்டுள்ளனர்.

    அதேபோல் வெளிநாடுகளில் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் இந்த 56 கிராமங்களை சேர்ந்தவர்களும் விரதம் இருந்து வருகின்றனர்.

    • மதுரை அரசு ஆஸ்பத்திரி சாலை நெரிசலில் சிக்கி தவிக்கிறது.
    • பொதுமக்களின் சிரமத்தை போக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?



    வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று போலீசார் அறிவிப்பு பலகை வைத்தும் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. 

    மதுரை

    தென் மாவட்டங்களில் மிகப்பெரிய மருத்துவமனையாக, மதுரை அரசினர் ராஜாஜி ஆஸ்பத்திரி திகழ்கிறது. இது தோராயமாக 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவு உடையது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சுழற்சி முறையில் வேலை பார்த்து வருகின்றனர். மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனை, 3 மையங்களை உள்ளடக்கியது.

    இதன் ஒரு பகுதியாக பழைய அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டு உள்பட பல்வேறு துறைகள் இயங்கி வருகின்றன. மதுரை புதிய அரசினர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு துறைகள் செயல்படுகின்றன. அடுத்தபடியாக தமிழக அரசின் 'மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி'. இது புதிய அரசினர் மருத்துவமனை எதிரே செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு அரிய நோய்களுக்கும் சர்வதேச தரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    எனவே மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனைக்கு தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் போதிய வாகன நிறுத்தும் இடம் இல்லை. எனவே ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள், போக்குவரத்து சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டி உள்ளது. இதன் காரணமாக பனகல் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    எனவே அந்த சாலையின் இரு புறங்களிலும் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், வாகனங்களை நிறுத்த அலை மோத வேண்டி உள்ளது. மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாகன நிறுத்தும் இடம் செயல்பட்டு வந்தது. எனவே நோயாளிகள் எந்தவித தொந்தரவும் இன்றி, வாகனங்களை ஆஸ்பத்திரி வளாக நிறுத்தும் இடத்தில் விட்டு சென்றனர்.

    அங்கு தற்போது டெண்டர் விடப்படவில்லை. எனவே வாகன ஓட்டிகள் நிறுத்தும் இடம் இன்றி தவிப்பதாக குற்றச்சாட்டு இழந்து உள்ளது ஆனால், 'மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் ஏற்கனவே இட நெருக்கடி உள்ளது. இங்கு மீண்டும் வாகன நிறுத்தம் கொண்டு வந்தால், இடப் பற்றாக்குறை அதிகரிப்பதுடன் நோயாளிகளுக்கும் சிரமம் ஏற்படும்" என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதுவும் தவிர

    மதுரை அரசினர் ராஜாஜி அமைந்து இருக்கும் பனகல் சாலை மிகவும் குறுகலானது. 2 ஆட்டோக்கள் ஒன்று சேர்ந்து போனாலே, ஒட்டுமொத்த சாலையும் அடைபட்டு விடும் என்ற நிலையில் தான், அங்கு போக்குவரத்து வசதிகள் உள்ளன. இந்த நிலையில் தனியார் ஆட்டோக்கள் சாலையில் இருபுறமும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக தேவையின்றி காத்துக் கிடக்கின்றன. எனவே அங்கு போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதுவும் தவிர ஆஸ்பத்திரியின் வெளிப்புற நடைபாதைகளில், சாலையோர வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நடுரோட்டில் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே "மதுரை அரசு ஆஸ்பத்திரி வெளிப்புற சுவரின் அருகில் சாலையோர வியாபாரிகளின் நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும்" என்று நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதன்படி போலீசார் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

    இருந்தபோதிலும் அங்கு மீண்டும் கடைகள் முளைத்து வருகின்றன. இதனை போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் மதுரை பனகல் ரோடு போக்குவரத்து சாலைகள், ஜன நெரிசலில் சிக்கி பிதுங்கி வழிகிறது.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனை பழைய பிரேத பரிசோதனை கிடங்கு அருகே, வாகன நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். ஆனால் அந்த இடத்தில் தற்போது ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் ஊழியர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. எனவே மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனை வாகன நிறுத்தும் இடத்துக்கு மாநகராட்சி உடனடியாக டெண்டர் விட வேண்டும். அடுத்தபடியாக வைகை ஆற்றங்கரை ஓரத்தில் ஆஸ்பத்திரி ஊழியர்களின் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனை, மாநகராட்சி 3-வது மண்டலம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

    இது தொடர்பாக வருவாய்த்துறை உதவி செயற்பொறியாளர் மனோகரன் கூறுகையில், "மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனை அருகே உள்ள மினி பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன நிறுத்தமிடம் உள்ளது. இங்கு ஆஸ்பத்திரிக்கு வருவோர் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்லலாம். ஆனால் பொது மக்கள் அவசரத்தில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தற்போது 7 மாடி கட்டிடம் எழுப்பப்பட்டு வருகிறது. அதில் வேலை பார்க்கும் ஊழியர்களில் பலர் இங்கு வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். அதேபோல ஆஸ்பத்திரிக்கு வந்து செல்வோரும் மினி பஸ் வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • மதுரையில் மார்ச் 5,6-ந்தேதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.
    • 5 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    மதுரை

    தமிழக அரசு சமீபத்தில் 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பயனடைந்தோர் விவரம், மாநில அளவில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மேற்கண்ட திட்ட பணிகள் தொடர்பாக மண்டல அளவில் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். அவர் கடந்த 1, 2-ந்தேதிகளில் வேலூருக்கு சென்றார். அப்போது அந்த மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கடந்த 15, 16-ம் தேதிகளில் சேலத்துக்குச் சென்றார். அங்கு மண்டல அளவிலான உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 5, 6-ந் தேதிகளில் மதுரை மாவட்டத்தில் 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் கீழ் பயன்பெற்றோர் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக மண்டல அளவில் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

    அப்போது மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலப்பணித் திட்டங்கள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். இதில் 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

    • தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்.
    • மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.

    மதுரை

    மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை பி.பி.குளம் பகுதியில் பி.டி.ராஜன் ரோடு, ஏ.வி.ஆர். காம்பிளக்சில் இயங்கி வந்த பாரமவுண்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் (பி.எம்.சி.) என்ற நிதிநிறுவனத்தை சேக் முகைதீன் என்பவர் நிர்வாக இயக்குநராக இருந்து கொண்டு நடத்தினார். அவர் பொதுமக்களிடம் திருக்குறள் புத்தகங்கள் விற்பனை செய்து அதில் கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு திரும்ப செலுத்துவதாக உறுதி அளித்தார். உறுதி மொழியில் கூறியது போல் லாபத்தை திரும்ப செலுத்தாததால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மதுரை டான்பிட் சிறப்பு கோர்ட்டில் எதிரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. அதன் பின்பு மேற்கண்ட நிதி நிறுவனத்தின் மீது பணம் மோசடி செய்ததாக இதுவரை பல புகார் மனுக்கள் பெறப்பட்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளது.

    எனவே இந்த நிதிநிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் யாரேனும் இதுவரை புகார் அளிக்காமல் இருந்தால் ஏப்ரல் மாத இறுதிக்குள் எமது அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் நேரில் புகார் கொடுக்குமாறு முதலீட்டாளர்களை கேட்டுக் கொள்கிறோம். மேலும் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தாலும் தாங்கள் பெயரும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய அலுவலக தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • தேநீருக்கு பதிலாக சிறுதானிய கஞ்சி வழங்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக பேசினர். சிலர் மனுவாக அதிகாரிகளிடம் கொடு த்தனர். கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு வழக்கமாக

    தேநீர் தரப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை விவசாயிகள் மத்தியில் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி அவர்க ளுக்கு தேனீருக்கு பதிலாக சிறுதானிய கஞ்சி (மில்லட் பால்) வழங்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில்,

    மக்கா சோளம் மற்றும் சிறுதானிய சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, மதிப்புகூட்டப்பட்ட பொருட்களை உருவாக்கும் எண்ணம் வர வேண்டும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். அடுத்தபடியாக சிறுதானிய விவசாயத்தை மேம்படுத்துவது தொடர்பாக முனைப்புகளை செய்து வருகிறோம். அதற்கான முதல் முயற்சி தான் இது என்று தெரிவித்துள்ளனர்.அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கலெக்டர் அனீஷ் சேகர் பாராட்டினார்.

    • மதுரையில் சித்த மருத்துவமனைகள் சார்பில் பயிற்சி பட்டறை முகாமை நடத்தியது.
    • வங்கிக்கடன் பெறுவதற்கான அறிக்கை சமர்ப்பித்தல், பட்ஜெட் தயார் செய்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.

    மதுரை

    மதுரையில் மடீட் ஷியா மற்றும் சித்த மருத்துவமனைகள், கிளீனிக் சங்கம் இணைந்து பயிற்சி பட்டறை முகாமை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சித்த மருத்துவமனை மற்றும் கிளீனிக் சங்கத்தலைவர் ஜெ.ஜெயவெங்கடேஷ் வரவேற்றார். மடீட்சியா தலைவர் சம்பத் தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், சித்த மருந்து நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து கிளஸ்டர் என்ற அமைப்பை ஏற்படுத்த மடீட்சியா முயற்சி செய்து வருகிறது. ஆயுஷ் தொழில்துறை வளர்ச்சிக்கு மடீட்சியா பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த தயாராக உள்ளது என்றார்.

    திரவியம் ஏற்றுமதி நிறுவனத்தின் விற்பனை நிர்வாகி பாஸ்டின் மதிப்புக்கூட்டிய மூலிகை உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் விதம் குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் ஷியாம் நாராயணன், வங்கிக்கடன் பெறுவதற்கான அறிக்கை சமர்ப்பித்தல், பட்ஜெட் தயார் செய்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.

    ஆதித்யா தொழிற் பயிற்சி தலைவர் செல்வ சுந்தர்ராஜன் நாட்டு மருந்துகளை பதிவு செய்தல், விற்பனை செய்தல் குறித்தும், மானியம், வங்கி கடன் குறித்தும் பேசினார்.

    சித்த மருத்துவமனைகள் சங்க பொருளாளர் மணிகண்டன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவிலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • இதில் பா.ஜ.க. பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா கலந்து கொண்டு பேசினார்.

    மதுரை

    நாகர்கோவிலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி ராம.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்ஜெட் குறித்து பேசினார்.

    கூட்டத்தில் எம்.எஸ்.ஷா பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் அமோக வெற்றி பெற்று பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராவது உறுதி. தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் வாரிசு அரசியல் நடத்தி வருகிறது. இதனால் அந்த கட்சிகளின் தலைமைக்கு அவர்களது வாரிசுகளே வருகிறார்கள்.

    பிரதமர் மோடியின் வாரிசுகள் 150 கோடி இந்திய மக்கள் தான். நாட்டு மக்களுக்காக பிரதமர் பல்வேறு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதற்காக பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கி உலக அரங்கில் வலிமை மிக்க நாடாக இந்தியாவை மாற்றி வருகிறார்.

    சாதாரண, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் பட்ஜெட்டில் வருமான வரி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறைகளில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை பயன்பெறுவார்கள்.

    உலகமே போற்றும் வகையில் சுய சார்பு இந்தியாவாக மோடி மாற்றி வருகிறார்.

    உள் நாட்டிலேயே ரெயில் பெட்டிகள், விமானங்கள், விமான உதிரி பாகங்கள், நவீன எந்திரங்கள் போன்றவை தயாரிக்கப்பட் டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக நாடுகளிடம் கையேந்தும் நிலையை பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் பொருளாதார பிரிவு மாவட்டத்தலைவர் அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். 

    ×