என் மலர்tooltip icon

    மதுரை

    • மேலூரில் பெண் தவறவிட்ட பணத்தை தம்பதி போலீசிடம் ஒப்படைத்தனர்.
    • சப்- இன்ஸ்பெக்டர் அழகர்சாமி முன்னிலையில் நதியாவிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

    மேலூர்

    மேலூர் அருகே வினோபா காலனியை சேர்ந்தவர் நதியா. இவர் மேலூரில் பொருட்கள் வாங்குவதற்காக தனது கைப்பையில் ரூ.21 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு எஸ்.எஸ்.வி. சாலா தெருவில் சென்றார்.

    அப்போது அவர் வைத்திருந்த கைப்பை தவறி கீழே விழுந்து விட்டது. அதனை கவனிக்காமல் அவர் கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார். பின்னர் பணம் கொடுப்பதற்காக பணப்பையை தேடினார். அப்போது அதனை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து மேலூர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நதியா தவறவிட்ட பணத்தை தேடி வந்தனர்.

    இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் அ.வல்லாளபட்டி பேரூராட்சி கவுன்சிலர் பெரியவர் மற்றும் அவரது மனைவி மூக்கம்மாள் ஆகியோர் கீழே கிடந்த பணப்பையை கண்டெடுத்தனர். அதனை யார் தவற விட்டார்களோ என்று கருதி மேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த பணம் நதியா தவறவிட்டது என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் அழகர்சாமி முன்னிலையில் நதியாவிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

    கீழே கிடந்த பணத்தை எடுத்து நேர்மையாக ஒப்படைத்த தம்பதிகளுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

    • கலைக்கப்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நிலுவைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
    • கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்.0452-2535669-க்கு தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக் கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு தற்போது கலைக்கப்பட்டுள்ள கீழ்கண்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் நெசவாளர்களுக்கு நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிலுவைத்தொகை உள்ளன.

    நிலுவைத்தொகையை இந்த செய்தி வெளியிடப்பட்ட 15 தினங்களுக்குள் அலுவலக நேரத்தில் 29, கக்கன் தெரு, செனாய் நகர், மதுரை-20 என்ற முகவரியில் இயங்கி வரும் கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் வந்து உரிய ஆவணங்களுடன் (சங்க நெசவாளர் அட்டை மற்றும் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு ஒளிநகல்) கைத்தறி அலுவலர்/கலைத்தல் அலுவலரிடம் கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    அவ்வாறு சமர்ப்பிக்கும் பட்சத்தில் அரசிடம் இருந்து நிலுவைத் தொகையை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட பயனாளிகளிடம் இருந்து உரிய கோரிக்கைகள் வராத பட்சத்தில் நிலு வையில் உள்ள தொகைகள் அனைத்தும் அரசுக்கு மீள சமர்ப்பிக்கப்படும்.

    கூடுதல் தகவல்களுக்கு மேற்கண்ட முகவரியில் இயங்கி வரும் கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்.0452-2535669-க்கு தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடந்தது.
    • நாச்சிகுளம் ஊராட்சி தலைவர் சுகுமார் தலைமையில் செயலர் கதிரேசன் அறிக்கை வாசித்தார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட விக்கிரமங்கலம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. தலைவர் கலியுகநாதன் தலைமை வகித்தார். துணைதலைவர் செல்வி, பற்றாளர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் தண்ணீர் சிக்கனம், கருவுற்ற தாய்மார்கள் மாதாந்திர தடுப்பூசி, குழந்தை திருமணம், கால்நடை தடுப்பூசி முகாம் உள்ளிட்ட வை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதேபோல் சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சி தலைவர் ஜென்சிராணி, பானாமூப்பன்பட்டி ஊராட்சி தலைவர் மகாராஜன், ஏரவார்பட்டி ஊராட்சி தலைவர் பாண்டி ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.

    வாடிப்பட்டி யூனிய னுக்கு உட்பட்ட காடுபட்டி ஊராட்சியில் தலைவர் ஆனந்தன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. செயலர் ஓய்யணன் அறிக்கை வாசித்தார். மன்னாடிமங்கலம் ஊராட்சி தலைவர் பவுன் தலைமையில் செயலர் திருசெந்தில் அறிக்கை வாசித்தார். முள்ளிப்பள்ளம் ஊராட்சி தலைவர் பழனிவேல் தலைமையில் துணை தலைவர் ராஜா முன்னிலையில் மனோபாரதி அறிக்கை வாசித்தார். தென்கரை ஊராட்சி தலைவர் மஞ்சுளா தலைமையில் செயலர் முனிராஜ் அறிக்கை வாசித்தார்.கருப்பட்டி ஊராட்சி தலைவர் அம்பிகா தலைமையில் செயலர் முனியாண்டி அறிக்கை வாசித்தார்.

    இரும்பாடி ஊராட்சி ஈஸ்வரி தலைமையில் செயலர் காசி அறிக்கை வாசித்தார். நாச்சிகுளம் ஊராட்சி தலைவர் சுகுமார் தலைமையில் செயலர் கதிரேசன் அறிக்கை வாசித்தார். ரிஷபம் ஊராட்சி தலைவர் சிறுமணி தலைமையில் செயலர் வேலம்மாள் அறிக்கை வாசித்தார். நெடுங்குளம் ஊராட்சி தலைவர் சுப்பிரமணி தலைமையில் செயலர் ரேவதி அறிக்கை வாசி த்தார். திருவாலவாய நல்லூர் ஊராட்சி தலைவர் சகுபர்சாதிக் தலைமையில் செயலர் வேலன் அறிக்கை வாசித்தார்.

    • மதுரை மாவட்ட ஆவின் நிர்வாகம் முழு அளவில் பாலை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • மதுரை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக பால் உற்பத்தியாளர்கள் நடுரோட்டில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருமங்கலம்,

    தமிழக அரசு பால் கொள்முதல் விலையை ரூ. 31-ல் இருந்து ரூ.40-ஆக உயர்த்தி தரவேண்டும் என கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்திற்கு பாலை அனுப்புவதை நிறுத்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்திற்கு நாள் ஒன்றுக்கு ஆவின் நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 200 லிட்டர் பால் தேவைப்படுகிறது ஆனால் தற்போது போராட்டம் காரணமாக உற்பத்தியாளர்கள் மூலம் கொண்டு வரப்படும் பால் அளவு குறைந்துள்ளது. எனினும் மதுரை மாவட்ட ஆவின் நிர்வாகம் முழு அளவில் பாலை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக பால் உற்பத்தியாளர்கள் நடுரோட்டில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி 7-வது நாளான இன்றும் போராட்டம் நீடித்தது. திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம், மதிப்பனூர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் திருமங்கலம்-அத்திப்பட்டி சாலையில் திரண்டனர்.

    அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பாலை நடுரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்துக்கு மதிப்பனூர் பால் பண்ணை தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்க மாவட்ட தலைவர் பெரிய கருப்பன், நிர்வாகிகள் உக்கிர பாண்டியன், கோவிந்தபாண்டி, சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசு அதனை கொண்டு கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடத்தக்கூட அழைப்பு விடுக்க வில்லை. இதன் காரணமாக ஆவின் பால் உற்பத்தியாளர்கள் தனியார் பால் நிறுவனத்தை நாடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவின் நிறுவனம் பாதிக்கப்படும். எனவே பொதுமக்களின் நலன் கருதி அரசு உடனே கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்றனர்.

    • மதுரையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    தேர்தலில் தொடர் தோல்விகளை சந்திந்து வரும் எடப்பாடி பழனிச் சாமி பதவி விலக வலியுறுத்தியும், அவரை கண்டித்தும் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுரை பழங்கா நத்தம் நட ராஜ் தியேட்டர் அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

    முன்னாள் எம்.பி.யும், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும், வழி காட்டுக் குழு உறுப்பினருமான கோபாலகிருஷ்ணன், உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகி யோர் தலைமை தாங்கினர்.

    அமைப்பு செயலாளர் மார்க்கெட் பி.எஸ்.கண்ணன், அம்மா பேரவை இணைச்செயலாளர் சோலை குணசேகரன், மாவட்ட துணை செயலாளர் மாரிச்சாமி, அம்மா பேரவை மாநகர் மாவட்ட செயலாளர் சுந்தரா, இளைஞரணி மாநகர் மாவட்ட செயலா ளர் சரவணன், மேற்கு 4-ம் பகுதி செயலாளர் கணே சன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர், புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • நீரின்றி அமையாது உலகு என்ற திருவள்ளுவரின் வாக்கிற் கேற்ப மக்களுக்கு நீர் மிக அவசியம்.

    மதுரை

    இன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திண்டியூர் ஊராட்சியில் தலைவர் லட்சுமி சந்திர சேகர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் துரைராஜ், ஊராட்சி செயலர் சசிகுமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தலைவர் லட்சுமி சந்திர சேகர் பேசும்போது கூறிய தாவது:-

    நமது ஊராட்சியில் தண்ணீர் தேவைகளை மக்கள் அறிகிற வண்ணம் ஓவியங்களாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்காங்கே வரைந்து வைத்துள்ளோம். நீரின்றி அமையாது உலகு என்ற திருவள்ளுவரின் வாக்கிற் கேற்ப மக்களுக்கு நீர் மிக அவசியம். மக்கள் தண்ணீரை வீணடிக்காமல் தேவையான அளவிற்கு பயன்படுத்த வேண்டும். ஆதி காலத்தில் மக்கள் ஏரி, குளங்களில் நீர் எடுத்து வந்த நிலைமையை நாம் அறிந்திருக்கிறோம், தெரிந்திருக்கிறோம். பின்னர் கிணறு வெட்டி அதில் இருந்து மக்கள் தண்ணீர் எடுத்து தங்கள் தேவைக்கு பயன்படுத்தினர்.

    தற்போது மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு இடங்களிலும் குடிநீர் வசதி செய்ய திட்டங்கள் தீட்டி யுள்ளார். விரைவில் லோயர் கேம்பில் இருந்து முல்லை பெரியார் கூட்டுக் குடிநீர் வர இருக்கிறது.

    தற்போது வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் இந்த ஊராட்சிக்கு சிறந்த முறையில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கும், அமைச்சர் மூர்த்திக்கும், கலெக்ட ருக்கும், கூடுதல் கலெக்டரு க்கும் மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த கிராம சபை கூட்டத்தின் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கலாம்.
    • மின்னணு சேவைகளை குடிமக்க ளுக்கான பொது இணைய தளம் வாயிலாகவும் வழங்கி வருகிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில்முனை வோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV), தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்கள் (PACCS), தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத் துறை மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் (VLE) மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகிறது. மேலும் மின்னணு சேவைகளை குடிமக்க ளுக்கான பொது இணைய தளம் வாயிலாகவும் வழங்கி வருகிறது.

    இதை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது இந்த திட்டத்தின் மூலம் தற்போது அனைத்து குடிமக்களும் இ- சேவை மையங்கள் தொடங்கி பொது மக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமை யிலேயே பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டுள் ளது.

    இந்த திட்டத்தின் நோக்கமானது இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.

    மேலும் இ-சேவை வலைத்தளத்திலிருந்து (www.tnesevai.tn.gov.in/ www.tnega.tn.gov.in) என்ற இணைய வழி சேவைகளை மக்களுக்கு வழங்கும் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் இத்திட்டத்தில்" பயன்பெற விண்ணப்பதாரர்கள் 15.3.2023 முதல் 14.4.2023 இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

    கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3 ஆயிரமும், நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரமும் ஆகும். இ-சேவை மையம் தொடங்க அனுமதிக்கப்படு பவர்களுக்கு பயனர் எண் மற்றும் கடவுச்சொல் (User ID&Password) விண்ணப்பித்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கருங்காலகுடி-சிங்கம்புணரி சாலை இருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • 18 சுக்காம்பட்டி வரை மதுரை மாவட்டமாகும். அதற்கு அடுத்து பகுதி சிவகங்கை மாவட்டம் ஆகும்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ளது கருங்காலக்குடி. இங்கிருந்து 18 சுக்காம்பட்டி வழியாக சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு செல்லும் சாலை உள்ளது. இதனை இரு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று ஐக்கிய முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் பக்ருதீன் அலி அகமத் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். அது நெடுஞ்சாலை துறை பரிசீல னைக்கு அனுப்பப்பட்டி ருந்தது. இது குறித்து நெடுஞ்சாலை துறையின் மேலூர் பகுதி உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கருங்காலக்குடி பேட்டையில் இருந்து சிங்கம்புணரி வரை இருவழி பாதையாக மாற்ற வேண்டும் என்று தாங்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளீர்கள். அது பரிசீலணையில் உள்ளது. மேலும் அதை 18 சுக்காம்பட்டி வரை மதுரை மாவட்டமாகும். அதற்கு அடுத்து பகுதி சிவகங்கை மாவட்டம் ஆகும். எனவே கருங்காலக்குடி பேட்டையில் இருந்து 18 சுக்காம்பட்டி வரை அதனை ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2023-24 திட்டத்தில் சேர்த்து அரசுக்கு பிரேணை அனுப்பப்படும் என தங்களுக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.8 கோடி மதிப்பிலான நடராஜர் சிலையை விற்க முயன்ற வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    • கைதான சரவணனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மதுரை

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ள சுமார் 2 அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலையை விற்பதற்காக சரவணன், ராமச்சந்திரன், பெரியசாமி ஆகியோர் கடந்த 11.2.2023 அன்று முயற்சி செய்தனர்.

    இந்த தகவலின் பேரில் திட்டக்குடி போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சரவணன் மதுரை ஐகோர்்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதிலளிக்கையில், இவர் தமிழ்நாடு பழங்கால கலைப் பொக்கி ஷங்கள் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.8 கோடி மதிப்புள்ள 2 அடி மதிப்பிலான நடராஜர் உலோகச் சிலையை தனது வீட்டில் விற்பதற்காக முயற்சி செய்துள்ளனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

    மனுதாரர் தரப்பில் கூறுகையில், இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மனுதாரர் சரவணன் 2-வது குற்றவாளி. சிலையை விற்பது தொடர்பாக மனுதாரருக்கு எதுவும் தெரியாது. அப்போது அவர் வீட்டில் இருந்ததால் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில் தொடர்பு டையவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே கைதான சரவணனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில் மனுதாரர் சரவணன் தினமும் காலை 10.30 மணிக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    • மீனாட்சி அம்மன் கோவிலில் வீரவசந்தராயர் மண்டபத்தை புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மதுரை

    உலக அளவில் பிரசித்தி பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழக மக்கள் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்கள் தினமும் ஆயிரக்க ணக்கில் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பிட்ட மாதங்களில் வெளிநாட்டு பயணிகளும் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் சுற்றுலா தலங்களை பார்வையிட வருவார்கள்.

    இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் இருக்கும் வீரவசந்தராயர் மண்டபம் புராதன பழமை வாய்ந்தது. இங்கு பல அரிய சிற்பங்கள் உள்ளன. இந்த மண்டபத்தில் வியாபாரிகள் பலர் கடைகள் வைத்து நடத்தி வந்தனர்.

    கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி இந்த மண்டபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலுமாக சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து கிழக்கு ராஜகோபுரம் மூடப்பட்டு அங்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப் பட்டது.

    அதன் பிறகு வீரவசந்தராயர் மண்டபத் தில் சேதமான பழமை வாய்ந்த சிற்பங்கள் அகற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தரா யர் மண்டபத்தை புனர மைப்பது என்று தமிழக அரசு முடிவு செய்தது.

    இதன் ஒரு பகுதியாக சென்னை ஐ.ஐ.டி. நிபுணர் குழுவினர் மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மன் கோவி லில் விபத்து நடந்த பகுதியை நேரடியாக பார்வை யிட்டனர். அப்போது வீர வசந்தராயர் மண்டபத்தை பழமை மாறாமல், ஆகம விதிப்படி புனரமைப்பது தொடர்பாக அறிவியல் ரீதியான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

    தமிழக அரசு இந்த மண்டபத்தை புனரமைக்க கடந்த 2021-ம் ஆண்டு ரூ.18.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் பிறகு வீர வசந்தராயர் மண்டபத்தை சீரமைப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டன. அடுத்தபடியாக சிற்பிகள் குழுவுக்கான ஒப்பந்த வேலைகள் வழங்கப்பட்டன.

    இந்த பணிகள் மந்தமாக நடந்து வந்த நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிதலம் அடைந்த வீர வசந்த ராயர் மண்ட பத்தை புனர மைக்கும் பணியை சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசி புரத்தில் உள்ள குவாரிகளில் இருந்து பிரம்மாண்ட கல் தூண்கள் லாரிகள் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டன.

    அவைகள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான அவனியாபுரம் செங்குளத்தில் உள்ள பண்ணை தோட்டத்தில் வைக்கப்பட்டன. அங்கு கலைநயமிக்க கல் தூண்களை செதுக்கும் பணியில் சிற்பிகள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்ற னர். தயாரான கல்தூண்கள், பெரிய லாரிகள் மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. அவைகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வீர வசந்தராயர் மண்டபத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் வரவேற்கத்தக்கது என்று சமூக ஆர்வலர் கருத்து தெரிவித்துள்ளார்.
    • சிங்கார சென்னை போல எழில்மிகு மதுரையாக மேம்படுத்த மாமதுரை என்ற தொழில் வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருப்பதும் நல்லது என்றார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோரெயில் திட்டம் கொண்டு வந்தது நகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று சமூக ஆர்வலரும், பாண்டியன் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவருமான சண்முகசுந்தரம் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்தியாவிற்கே வழிகாட்டு கிற கலங்கரை விளக்கமாக அமைந்தி ருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான மாநில அரசு நிதி பற்றாக்குறையை ரூ.62கோடியில் இருந்து ரூ.30கோடியாக குறைத்தி ருப்பது மு.க.ஸ்டாலினின் நிர்வாக திறமைக்கும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நிதி மேலாண்மைக்கும் சான்றாக அமைந்துள்ளது.

    மதுரை மாநகரை சிங்கார சென்னை போல எழில்மிகு மதுரையாக மேம்படுத்த மாமதுரை என்ற தொழில் வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருப்பதும், அதன் முதல்கட்டமாக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருப்பதும் மதுரை மக்களிடம் கோடை மழையை போன்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அதேபோன்று ஏழை, எளிய மக்கள் நிலம் வாங்குவதற்கு ஏதுவாக பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைத்திருப்பதன் மூலமாக ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற கனவு நனவாக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு நிலத்தை மீட்க முயன்ற கிராம அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர், கள்ளிக்குடி போலீசில் புகார் கொடுத்தார்.

    திருமங்கலம்

    கள்ளிக்குடி அருகே மேலநேசனேரி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் செல்வம்(வயது54). இவர் அந்தப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 50 சென்ட் அரசு நிலத்தை தாசில்தார் உத்தரவின் பேரில் மீட்டு அளந்து வேலி போட நடவடிக்கை எடுத்தார்.

    இது நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த கும்பலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த ரத்தினசாமி, வெள்ளைச்சாமி, துரைச்சாமி, பெரிய கருப்பன், சின்னச்சாமி, சேது நாராயணன், தன்னாசி ஆகிய 7 பேரும் கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் செல்வம், கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×