search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு நிலத்தை மீட்க முயன்ற கிராம அதிகாரிக்கு மிரட்டல்
    X

    அரசு நிலத்தை மீட்க முயன்ற கிராம அதிகாரிக்கு மிரட்டல்

    • அரசு நிலத்தை மீட்க முயன்ற கிராம அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர், கள்ளிக்குடி போலீசில் புகார் கொடுத்தார்.

    திருமங்கலம்

    கள்ளிக்குடி அருகே மேலநேசனேரி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் செல்வம்(வயது54). இவர் அந்தப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 50 சென்ட் அரசு நிலத்தை தாசில்தார் உத்தரவின் பேரில் மீட்டு அளந்து வேலி போட நடவடிக்கை எடுத்தார்.

    இது நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த கும்பலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த ரத்தினசாமி, வெள்ளைச்சாமி, துரைச்சாமி, பெரிய கருப்பன், சின்னச்சாமி, சேது நாராயணன், தன்னாசி ஆகிய 7 பேரும் கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் செல்வம், கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×